Pages

பிரபாகரனும் பழசிராஜாவும்

தமிழினத்தின் விடுதலைக்காகவே தன் வாழ் நாள் முழுவதும் செலவிட்ட ஒரு ஒப்பற்ற தலைவனின் பிறந்த தினம் இன்று. அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சைகள் ஒரு புறம் இருக்க, ஒரு மாவீரனை, அவரது ஒப்பற்ற தியாக உணர்வை நினைவு கூற வேண்டும். Prabhagood


சமீபத்தில், பழசி ராஜா என்ற திரைப்படத்தில், கேரளா நாட்டை சேர்ந்த மன்னரின் சுதந்திர போராட்ட வரலாற்றை காண நேர்ந்தது. அத்திரைப்படம் பார்க்கும் போது, எனக்கு நினைவுக்கு வந்தது இலங்கையின் யுத்த களம்தான்.


சிங்கள இராணுவம் பிரிட்டிஷ் இராணுவம் போன்று போர்க்கான எந்த விதமான விதிகளையும் பின்பற்றவில்லை என்றாலும், போராளிகளின் வாழ்க்கை இரு இடங்களிலும் ஒரே மாதிரிதான் உள்ளது.

மக்களை காப்பாற்ற வேண்டி, அமைதி ஒப்பந்தத்தில் பழசி ராஜாவாக வரும் மம்முட்டி கையொப்பமிடுகிறார். ஒப்பந்தத்தில் உள்ள எதையும் நிறைவேற்றாமல் இழுத்தடிப்பதாய் கூறி, நாட்டை விட்டு வெளியேறி போர்க் கோலம் பூணுகிறார்.

2003‍ல் நடந்த டோக்கியோ பேச்சு வார்த்தைகளின் போது விடுதலைப் புலிகள் வெளியேறியதற்க்கும் பல காரணங்கள் இருந்தன என்பது உலகமே அறியும்.

ஒவ்வொரு முறை, பழசி ராஜாவைக் காக்க ஒவ்வொரு தளபதியும் எவ்வளவு முயற்சி செய்கிறார்கள் என்று பார்க்கும் போது, ஈழத்தில் பிரபாகரனை பாதுகாக்க இப்படித்தானே போராடியிருப்பார்கள் என்று பதைபதைக்கிறது நெஞ்சம்! ஒவ்வொரு தளபதியும் கொல்லப்பட்டார் என்று, நாள் தோறும் செய்திகள் வந்தபோது எப்படி ஏமாந்து போயிருப்பார்கள் எம் சகோதர மக்கள்.

இறுதிக் காட்சியிலே, தானே போருக்கு சென்று, அத்தனை வீரர்களையும் வீழ்த்தி துப்பாக்கியால் மாண்டு போகிறார் பழசி ராஜா. இதே போலத் தான் பிரபாகரனும் போரிட்டிருப்பார். தப்பித்து செல்லும் போது சுட்டுக் கொன்றோம் என்று சிங்கள இராணுவம் கூறும் கட்டுக் கதைகளை யாரும் நம்பத் தயாரில்லை.

பழசிராஜா மாண்டதற்க்குப் பின், பிரிட்டிஷ் கலெக்டர் சகல இராணுவ மரியாதைகளொடு அவருக்கு வீர வணக்கம் செலுத்துகிறார். இதையெல்லாம் வெறி பிடித்த சிங்கள இராணுவத்திடம் எதிர்பார்க்க இயலாது.

பழயம்வீடன் சந்துவாக வரும் நடிகர் சுமன் இல்லாமல் அவர்களால் ராஜாவை நெருங்கிருக்க முடியாது. கருங்காலி கருணாவின் இல்லாமல் அவர்களால் ஈழத்தை வீழ்த்தி இருக்க முடியாது.

நடிகர் திலகம் சிவாஜி நடித்த கர்ணன் திரைப்படத்தின் இறுதிக் காட்சியில், கிருஷ்ணனாக் வந்த என்.டி.ர், அர்ஜீனனிடம், "உனக்கு முன்பே 10 பேர் கர்ணனை கொன்று விட்டோம். செத்த பாம்பை அடித்து விட்டு, நான் கொன்றேன் நான் கொன்றேன் என்று சொல்லுகிறாய். " என்று கூறி பத்து காரணங்களையும் பட்டியிலுடுவார்.

அதே வரிகளைத் தான், சிங்கள இராணுவ தளபதி சரத் பொன்சகோவிற்க்கும், இராஜபக்சேவிற்க்கும் சொல்ல விரும்புகிறோம்.

1. கருங்காலி கருணா
2. காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா ‍
3. பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்
4. இந்திய இராணுவம்
5. தமிழக முதல்வர் கருணாநிதி
6. முதுகெலும்பில்லாத‌ த‌மிழ‌க தலைவர்கள்
7. சீன இராடர்கள்
8. மலேசிய அரசு
9. இன்டர்போல்
10. முதுகெலும்பில்லாத தமிழக மக்கள் (என்னையும் சேர்த்து தான்)

No comments: