Pages

வணக்கம்!

தமிழுக்கு முதல் வணக்கம்!
என் தலைவன் பாரதிக்கு வணக்கம்!

தமிழ் பேசும் எம்மக்களுக்கு வணக்கம்!
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்! - என்றான் பாரதி

எனக்கு பாரதி போல் பல மொழிகள் தெரியாவிட்டாலும், என் தாய் மொழியாம் தமிழில் முதல் பகுப்பு தொடங்குவதே உசிதம் என்று நினைத்து இணைகிறேன்.

நான், நேற்றைய நினைவுகளிலும் நாளைய கற்பனைகளிலும் மிதந்து கொண்டு இருக்கும் இன்றைய இளைய சமுதாயத்தின் அங்கம்.


உலகின் ஏதாவது ஒரு மூலையில் பெரிய அசம்பாவிதம் நடந்தால் கூட, அந்த செய்தியை பத்து பேருக்கு அனுப்பி விட்டு அடுத்த வேலையை கவனிக்க செல்லும் மனிதாபிமானி!.

அரசு பள்ளியில் கணினி படித்துவிட்டு, அமெரிக்க கனவில் வாழ்ந்து கொண்டு இருக்கும் இன்றைய இளைஞன்.

நாற்பது ரூபாய் கொடுத்து, முன்பதிவு இல்லாத ரயிலில் சென்னையிலிருந்து என் சொந்த ஊருக்கு சென்று கொண்டு இருந்த நான், நானூறு ரூபாய் கொடுத்து சொகுசு பேருந்தில் முன் பதிவு செய்யும் இன்றைய இளைஞன்.

இனி என்னுடைய கருத்துக்களை, எனக்கு தெரிந்தவைகளை, எனக்கு பிடித்தவைகளை இங்கு பகிர்த்து கொள்ள இருக்கிறேன்.

நாள் தோறும் வளரும். மெல்லத் தமிழ் இனி வளரும்.

No comments: