tag:blogger.com,1999:blog-9878513448449011242024-03-13T10:00:11.725+03:00என்’ணில் அடங்கா எண்ணங்கள்!!ஜாதி மதங்களைப் பாரோம் -
உயர் ஜன்மம்
இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே -
அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே
- பாரதிSanthappanசாந்தப்பன்http://www.blogger.com/profile/07148021073755708494noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-987851344844901124.post-47785749102142322932011-07-16T01:47:00.001+03:002011-07-16T01:47:38.886+03:00மும்பை & அசாம்<p> </p> <p>கடந்த ஞாயிற்றுக்கிழமை, 10 சூலை, உத்திரப்பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களில் நடந்த இருவேறு இரயில் விபத்துகளில் சுமார் 82 உயிர்கள் போய்விட்டன. 250-க்கும் மேற்பட்டோர் படு காயங்களுடன், உயிருக்குப் போராடி கொண்டிருந்தனர். இதில், உ.பி விபத்து மனித தவறினால் நடந்திருக்கலாம் எனவும், அசாம் விபத்து, தண்டவாளங்கள் குண்டு வைத்து தகர்க்கப் பட்டதால் நடைபெற்றது எனவும் முதல் தகவல் அறிக்கை சொல்கிறது. கடந்த 2010 ஏப்ரல் முதல் நடந்த ரயில் விபத்துக்களில் இது வரை 336 பேர் இறந்து விட்டனர். 436 பேர் படுகாயம் அடைந்ததாக புள்ளிவிபரங்கள் சொல்கிறது.</p> <p>அசாம் மாநிலத்தில் நடைபெற்றது, விபத்தல்ல. திட்டமிட்ட வெடிகுண்டு தாக்குதல். இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கோ, இதுவரை நடந்த ரயில் விபத்துகளுக்கோ ஆளும் அரசுகளும் சரி, இந்திய ஊடகங்களும் சரி. பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. மங்குனி பிரதமர், ரயில்வே இணையமைச்சரை, விபத்து நடந்த இடத்திற்க்கு போய்ப் பாருங்கள் என்று சொல்வாராம். அதற்கு இரயில்வே அமைச்சர், நான் 1000 மைல் தாண்டி இருக்கிறேன். என்னாலெல்லாம் போக முடியாது என்று பதில் சொல்வாராம். மங்குனியும் கேட்டுக் கொண்டு அமைதியாக, நான் வாத்து கிடையாது என்று ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பாராம்.</p> <p>இதே அசாம் மாநிலத்தில் தான், நவம்பர் 2009-ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. அப்போதும் பல மனித உயிர்கள் பறிபோயின. அப்போது, உள்துறை அமைச்சர் பறந்தோடி வந்து செய்தி வாசிப்பாளர் மாதிரி ஏதாவது அறிக்கை வாசித்தாரா? மங்குனி பிரதமரும், இத்தாலி அம்மையாரும், ஒபாமாவும் கண்டனம் தெரிவித்தார்களா?  மறு நாளே, பறந்து வந்து ஆறுதல் தான் சொன்னார்களா? இந்தியாவின் இதயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றெல்லாம் வீர வசனங்கள் வரவில்லையே?</p> <p>அசாமும் இந்தியாவில் தானே இருக்கிறது? அவைகளும் விலைமதிக்க இயலாத மனித உயிர்கள் தானே?</p> <p>ஏனென்றால், அசாமில் நடப்பது இந்திய அரசின் தீவிரவாதம். இந்திய அரசியல் வியாதிகளின் கோரமுகம்.   வெளி நாடுகளின் சதி என்று சொன்னால்தானே அரசியல் செய்ய முடியும். இந்த உள்நாட்டு பிரச்சனையில் கருத்து சொன்னால், தங்கள் முகத்திரை தானே கிழியும்.</p> <p>இந்திய வியாபார ஊடகங்களுக்கும், மும்பையை பற்றி சொன்னால் தானே காசு பார்க்க முடியும். அசாமில் பழங்குடி மக்கள் செத்தாலென்ன,  உயிரோடு இருந்தாலென்ன. அசாம் குண்டுவெடிப்புகளெல்லாம், செய்திகளே இல்லாத போது, ஆவணப் படங்களில் ஓட்டிக் கொள்ளலாம் என்று இருந்திருப்பார்கள்</p> <p>நாமும் பெரிதாக ஒன்றும் அலட்டிக் கொள்ள மாட்டோம்.  ஏனென்றால் ஊடகங்கள் தானே நம்மை இயக்குகின்றன. ஊடகங்களை இயக்குவது அரசியல்வியாதிகள். அவர்களுக்குத் தெரியும், மக்களுக்கு, எப்போது. எந்த செய்தியை கொடுக்கவேண்டுமென்று. எதை வைத்து அரசியல் செய்யலாம், ஒன்றை சொல்லி, மற்றொன்றை மறக்கடிப்பது இந்த வித்தைகளெல்லாம் ஊடகங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் நன்றாகவேத் தெரியும். </p> <p>மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள் என்றவுடன் பொங்கி எழுந்து, உயிரிழப்புகளை காசாக்கும் நோக்கில் அடி தொண்டையில் கத்திய ஊடகங்கள், ஏன் கவுகாத்தி குண்டுவெடிப்புகளை பற்றி பேசுவதில்லை? நூற்றுக்கணக்கில் ரயில் விபத்துகளில் மாண்டு போகும் மக்களை பற்றி பேசுவதில்லை. </p> <p>சமூக வலைத்தளங்களில், பொங்கி புரட்சி கோஷங்களை Status Message-களாக்கி, இறந்து போன அப்பாவி பொதுமக்களுக்காக கண்ணீர் கவிதை வடித்த தேசபக்தி ஆர்வலர்கள், அசாம் உட்பட வடகிழக்கில் நிகழும் எதையும் கண்டு கொள்வதில்லை. இவர்களிடம் கேளுங்கள், ஒற்றை வரியில் பதில் வரும், “I Hate Politics”. </p> <p>எதை பேசவேண்டுமென்று, ஊடகங்களுக்கு ஆளும் அதிகாரவர்க்கத்தால் சொல்லப்பட்டிருக்கிறது. சமூகவலைத்தளங்களில்  நாமெல்லாம் பிரதிபலிப்பது ஊடகங்களின் மாய வார்த்தைகளைத்தான். </p> <p>இதில் பிரச்சனை என்னவென்றால், ஊரே ஒன்றை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது, நாம் வேறெதையும் பற்றிப் பேசக்கூடாது. பேசிவிட்டால், அவ்வளவு தான், இங்கே உயிர்கள் மாண்டு கொண்டிருக்கிறது. நீ என்னவென்றால் பிடில் வாசிக்கிறாயே? நியாயமா, நீ மனிதன் தானா? உனக்குள் இரக்கம் இருக்கிறதா? கருணை உள்ளவன் தானா நீ என்று அடுக்கடுக்காக வசை மொழிகளை பாடிவிடுவார்கள். </p> <p>தெற்காசியாவின் நாட்டாமைப் பதவிக்கு அடித்து கொள்ளும் அமெரிக்கா, சீனா, இந்தியாவின் அதிகார, ஆயுத போட்டியே இந்த தாக்குதல்கள் என்கிற உலக அரசியல் அறியாமல், மாத சம்பளத்தில் குடும்பம் நடத்தும் அல்லது அன்றாடம் காய்ச்சி பிழைக்கும் வர்க்கம், எதையும் செய்யக் கூடாது. அவனுக்கு பிடித்ததை, அவனை மகிழ்விக்கிற எதையுமே அவன் நாடக்கூடாது. </p> <p>அவனுக்கு உலக அரசியலும், குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தால் அதற்க்காக துக்கம் அனுசரிக்கிற மனோபாவமும் இருக்கவேண்டும். இல்லையென்றால் நீ, மனிதனில்லை, என்று ஏச்சுக்கள் வந்து சேர வேண்டும்.</p> <p>உள்துறை அமைச்சர் செட்டி நாடு சமையலை ஒரு பிடி பிடித்துவிட்டு, சப்பாத்தி போல முகத்தை வைத்துக் கொண்டு, ”தீவிரவாதம் ஒழிக்கப்படவேண்டும்” என்று வசனம் பேசியிருக்கலாம். விளம்பர இடைவெளிகளில் பர்காதத், பாதாம் கீர் சாப்பிட்டிருக்கலாம். ராஜ்தீப், ரசகுல்லா சாப்பிட்டிருக்கலாம். சாமானியன், இது எதையுமே செய்யக் கூடாது. அங்கே ஆயிரம் உயிர்கள் சோகத்திலிருக்கிறது. ”நீ, எப்படி இங்கே, இனிப்புகள் சாப்பிடலாம். கூடவே கூடாது.” என்று கேள்வி கேட்பார்கள்.</p> <p>மும்பை தாக்குதலுக்குப் பின், அன்றிரவு நடந்து கொண்டிருந்த படப்பிடிப்புகள் ஒன்று கூட நிறுத்தப்படவில்லையாம். திரையரங்குகள் வழக்கம் போல இயங்கினவாம். இவ்வளவு ஏன், அகர்வால் கடைகளில் இனிப்புகள் வழக்கம் போல விற்கபட்டனவாம். ஆனால், தமிழ் நாட்டில், தமிழன் இனிப்பு சாப்பிடக் கூடாது. மனித உயிர்கள் போய்விட்டனவே, சக மனிதன் தானே, நீதான் துக்கம் அனுசரிக்கவேண்டும். </p> <p>இந்திய உளவுத்துறையின் தோல்விக்கும், அரசியல் வியாதிகளின் கையாலாகத்தனத்திற்க்கும் பொது மக்கள்தான் முழுப்பொறுப்பு. அதனால், நாம்தான் மூன்று வாரங்கள் துக்கம் அனுஷ்டிக்கவேண்டும். இனிய வார்த்தை, இனிப்புகள் எதையுமே நினைத்துக் கூடப்பார்க்கக் கூடாது. அசாமில் செத்ததற்க்கு கவலைப் படவேண்டாம். நம்மை, நாமே எவ்வளவு வேண்டுமானாலும் கொல்லலாம். கவலைப்படாதே….. ஆனால், குண்டு மும்பையிலும், டெல்லியிலும் மட்டும் வெடிக்கக் கூடாது. வெடித்தால், ஊடகங்களோடு நாங்களும் சேர்ந்து மனிதாபினத்தை வளர்ப்போம், அதற்கு அசாமியும், தமிழனும் துக்கம் அனுசரிக்கவேண்டும். </p> <p> </p> <p><strong>பதிவர் புதசெவி (TBCD) FaceBook-ல் பகிர்ந்தது</strong></p> <p>உள்ளமை (அ) நிதர்சனம் (அ) யதார்த்தம்</p> <p>மும்பையில் குண்டு வெடிப்பு என்று சொன்னேன்..எந்த இடம் என்று கேட்டாள் மனைவி. இடம் சொன்னவுடன்....எத்தனை சப்பாத்தி வேண்டும் என்று கேட்கிறாள்..இத்தனைக்கும் மச்சான் மும்பையில் இருக்கிறான். </p> <p>தம்பி வேலை செய்யும் இடத்தில் வெடிக்கலை என்றவுடன் கவனம் சப்பாத்திக்கு தாவிவிட்டது...</p> Santhappanசாந்தப்பன்http://www.blogger.com/profile/07148021073755708494noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-987851344844901124.post-76702234146537561172011-02-18T01:14:00.001+03:002011-02-18T01:14:33.220+03:00TED தமிழில்<p> </p> <p>வணக்கம் நண்பர்களே,</p> <p>மீண்டும் ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் இந்தப் பதிவு எழுதுவதில் மிக்க மகிழ்ச்சி!</p> <p>TED.com குறித்து நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். <b>TED</b> என்பது TECHNOLOGY ENTERTAINMENT AND DESIGN என்ற விரிவின் சுருக்கம். இதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள <a href="http://krpsenthil.blogspot.com/2010/07/ted.html" target="_blank">இந்த பதிவை</a> படியுங்கள்.</p> <p>சில தினங்களுக்குமுன், சந்திரயான் விஞ்ஞானி, மயில்சாமி அண்ணாதுரை, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு TED காணொளியை இணைத்திருந்தார். அந்த காணொளி கண்டவுடன், அளவில்லாத ஆனந்தமடைந்தேன்.  </p> <p>அந்த கணொளியின் உரையாடல்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருந்தாலும், துணை உரைகள் (subtitle) மற்றும் விளக்கவுரைகள் அழகு தமிழில் தெளிவாக இருந்தன. எனக்கு ஒரளவுக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தாலும்,  தாய் மொழியில், எனக்கு ஏற்றவாறு விளக்கபட்டிருந்தது, மிகுந்த மகிழ்வை கொடுத்தது.</p> <p>உதாரணத்திற்க்கு, </p> <p> <div style="padding-bottom: 0px; margin: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; float: none; padding-top: 0px" id="scid:5737277B-5D6D-4f48-ABFC-DD9C333F4C5D:be28b81b-a480-41c5-b977-eccbfaa312bd" class="wlWriterEditableSmartContent"><div><object width="446" height="326"><param name="movie" value="http://video.ted.com/assets/player/swf/EmbedPlayer.swf"></param><param name="allowFullScreen" value="true" /><param name="allowScriptAccess" value="always" /><param name="wmode" value="transparent"></param><param name="bgColor" value="#ffffff"></param> <param name="flashvars" value="vu=http://video.ted.com/talks/dynamic/GrahamHill_2010-medium.flv&su=http://images.ted.com/images/ted/tedindex/embed-posters/GrahamHill-2010.embed_thumbnail.jpg&vw=432&vh=240&ap=0&ti=860&introDuration=15330&adDuration=4000&postAdDuration=830&adKeys=talk=graham_hill_weekday_vegetarian;year=2010;theme=a_taste_of_ted2010;theme=new_on_ted_com;event=TED2010;&preAdTag=tconf.ted/embed;tile=1;sz=512x288;" /><embed src="http://video.ted.com/assets/player/swf/EmbedPlayer.swf" pluginspace="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" wmode="transparent" bgColor="#ffffff" width="446" height="326" allowFullScreen="true" allowScriptAccess="always" flashvars="vu=http://video.ted.com/talks/dynamic/GrahamHill_2010-medium.flv&su=http://images.ted.com/images/ted/tedindex/embed-posters/GrahamHill-2010.embed_thumbnail.jpg&vw=432&vh=240&ap=0&ti=860&introDuration=15330&adDuration=4000&postAdDuration=830&adKeys=talk=graham_hill_weekday_vegetarian;year=2010;theme=a_taste_of_ted2010;theme=new_on_ted_com;event=TED2010;"></embed></object></div><div style="width:446px;clear:both;font-size:.8em">கிரகாம் ஹில்: நான் ஏன் வார நாள் சைவ உணவாளன் ஆனேன்?</div></div> </p> <p> </p> <p>தமிழ் TED காணொளிகளை மேலும் தேடியபோது, மிகுந்த வருத்ததிற்க்கு ஆளானேன். வெறும் <a href="http://www.ted.com/translate/languages/tam" target="_blank">33 மூன்று காணொளிகளே</a>, தமிழில் மொழி பெயர்க்க பட்டுள்ளன். </p> <p>6000 தமிழ் வலைபதிவர்கள், தமிழ் ட்வீட்டர்கள், 2 கோடி தமிழ் இணைய பயனார்கள் உள்ள ஒரு செம்மொழியான தமிழ் மொழியில் வெறும் 33 காணொளிகளே உள்ளது சோகத்தை ஏற்படுத்தியது.</p> <p> 6000 வலைப்பதிவுகள் இயங்கும் ஒரு மொழியில் <a href="http://www.ted.com/translate/translators/lang/tam/p/2" target="_blank">18 மொழிபெயர்ப்பாளர்களே</a> உள்ளது மிகவும் வேதனை. </p> <p>இன்னும் <a href="http://www.ted.com/translate/dashboard/lang/tam" target="_blank">700-க்கும் மேற்பட்ட காணொளிகள்</a> தமிழ் மொழிபெயர்ப்புக்காக காத்திருக்கின்றன. </p> <p>ஒவ்வொரு காணொளியும் சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே. தமிழ் வலைப்பதிவர்கள் 100 பேர், ஒரு மாதம் ஒன்று சேர்ந்தால் போதும், ஏராளமான காணொளிகளை மொழிபெயர்த்துவிட முடியும். கணொளிகளை மொழிபெயர்க்க இலகுவான வழிமுறைகளையே கொடுத்துள்ளார்கள். நீங்கள் மொழி பெயர்க்கும் ஒவ்வொரு கணொளியையும், மற்றொருவர், சரிபார்த்து திருத்தம் செய்வார். </p> <p>உங்களுக்கு பிடித்தமான பேச்சாளர், தலைப்புகளை தேர்ந்தெடுத்து, உங்களுக்கு வேண்டியபடி மொழிபெயர்க்க முடியும்.</p> <p><a href="http://lh6.ggpht.com/_zOOY9Z7VJxA/TV2dvnLGK6I/AAAAAAAAFOQ/NWBYL1wdFEo/s1600-h/image%5B2%5D.png"><img style="background-image: none; border-bottom: 0px; border-left: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: block; float: none; margin-left: auto; border-top: 0px; margin-right: auto; border-right: 0px; padding-top: 0px" title="image" border="0" alt="image" src="http://lh5.ggpht.com/_zOOY9Z7VJxA/TV2dxDMb5fI/AAAAAAAAFOU/xUkyKdDonMI/image_thumb.png?imgmax=800" width="244" height="85" /></a> </p> <p>உங்களுக்கு ஆங்கிலம், தமிழ் இரண்டும் தெரிந்திருந்தால், தயவு செய்து, ஒரு கணொளியையேனும் மொழி பெயர்க்க வேண்டிகிறேன். உங்களுக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்களுக்கு இதுபற்றிய செய்தியை சொல்லி, மொழிபெயர்க்க செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். </p> <p>உங்களை மொழிபெயர்ப்பாளர்களாக TED-ல் இணைத்துக் கொள்ள, இங்கெ <a href="http://www.ted.com/translate/step1" target="_blank">சுட்டுங்கள்</a>.</p> <p><a href="http://www.ted.com/translate/dashboard/lang/tam" target="_blank">தமிழ் துணைஉரை சேர்ப்புக்காக காத்திருக்கும் TED காணொளிகள்</a></p> <p><a href="http://krpsenthil.blogspot.com/2010/07/ted.html" target="_blank">TED குறித்து பதிவர் கே.ர்.பி. செந்தில் எழுதிய வலைப் பதிவு</a></p> <p>இந்த முயற்சியின் மூலம் ஒரு 10 கணொளிகள், தமிழில் துணை உரை கிடைக்கபெற்றால், செம்மொழி செழித்து வளரும்.</p> Santhappanசாந்தப்பன்http://www.blogger.com/profile/07148021073755708494noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-987851344844901124.post-42559393611740798202010-12-12T23:59:00.001+03:002010-12-12T23:59:00.964+03:00ரஜினியை வாழ்த்துவதால் மானம் போய்விடுமா?<p> </p> <p>நம்மாளுங்களை 2 வகையா பிரிக்கலாம்.. தமிழினம்தான் எல்லாத்துலயும் சிறந்ததுன்னு சொல்லிட்டே இருக்கிற தற்பெருமை உள்ளவர்கள்..  நம்மளை  நாமளே கேவலபடுத்திக்கிற, தாழ்த்திக்கிற தாழ்வு மனப்பான்மை உள்ளவங்க... </p> <p>பெரும்பாலும், எல்லாரிடம் இந்த இருவேறு குணங்கள் பச்சோந்தி மாதிரி, இடத்திற்க்கு தகுந்தார் போல், நேரத்துக்கு தகுந்தார் போல் மாறி மாறி வந்துகொண்டே இருக்கும். அதே மாதிரி சில குறிப்பிட்ட நிகழ்வுகளை, நமக்கு நாமே கேவலமானது எனக்கூறி கூனிக்குறுகுவது. </p> <p>திரைக் கதாநாயகர்களுக்காக, காவடி எடுப்பது, அலகு குத்துவது போன்ற எல்லா மூடத்தனங்களும்  உலகமெங்கும் உண்டு... வட இந்தியர்கள், அரேபியர்கள், வெள்ளையர்கள் என எல்லாரும் இதை செய்து கொண்டேதான் இருக்கிறார்கள்... ஆனால் அவற்றின் வடிவங்கள் வேறு... </p> <p>அமிதாப் மருத்துவனையில், அறுவைசிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட போது, மும்பை சித்தி விநாயகர் கோவில் உட்பட, வட இந்தியாவில் பல இடங்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.. சஞ்சய்தத் சிறையில் அடைக்கபட்ட போது, உண்ணாவிரதம் இருந்து பாத யாத்திரை செய்தவர்கள் பலர்... மாதுரியை வரைந்த ஹுசைன், மர்லின் மன்றோ உடையை பல கோடிகளுக்கு ஏலம் எடுத்த தொழிலதிபர்,  என பல வடிவங்களில் எல்லா மூடத்தனங்களும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.. </p> <p>உலகத்தில் உள்ள எந்த நடிகர்களுக்கும் பேஸ்புக், ட்வீட்டர், ப்ளாக்கர், போன்றவற்றில் வாழ்த்து செய்திகள் சொல்லப்படுவதே இல்லையா? </p> <p>ஆஜ் தக், ஸ்டார் ப்ளஸ் போன்ற சேனல்கள் பார்த்தால் மும்பையைத் தாண்டி வட இந்தியாவின் மற்ற ஊர்களில் என்ன நடக்கிறது என்று தெரியும். திரைப்பட நடிகர்களின் சொந்த விஷயங்களை மட்டுமே பல மணி நேரத்துக்கு செய்தியாக சொல்லும் ஒரு சில அலைவரிசைகள் இருக்கிறது என்றால் வட இந்தியர்கள் எப்படி தமிழனின் ரசனையை கிண்டலடிக்கலாம்?. அதற்க்கு நம்மவர்களும் எப்படி ஒத்து ஊதலாம்? வாரமலரில் மட்டும்தான் துணுக்குமுட்டை வருகிறதா, டைம்ஸ் ஆப் இந்தியாவில் வருவதில்லையா?</p> <p>ராகுல் காந்தியின் புகைப்படம், பால்பேடா படையலையும், வாஜ்பாயின் புகைப்படம், லட்டு படையலையும், ஏற்றுக் கொள்ளும் என்றால், ரஜினியின் கட் அவுட் பாலாபிஷேகத்தையும் ஏற்றுக் கொள்ளும். </p> <p>மைக்கேல் ஜாக்சன் பிறந்தநாளில், மர்லின் மன்றோ பிறந்த நாளில் மெழுகுவர்த்தி ஏந்தி பொது இடங்களில் கூடி, பிரார்த்தனை செய்வது கூட மூட நம்பிக்கைதான்.</p> <p>வெள்ளைக்காரன் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் போற மாதிரி, தமிழ்நாட்டுக்காரன் காவடி எடுத்துட்டு ஊர்வலம் போறான். வடிவம்தான் மாறுகிறதே ஒழிய, எல்லாமே மூட நம்பிக்கைகள்தான். மடத்தனம் தான்.</p> <p>மைக்கேல் ஜாக்சன் மட்டுமின்றி, வில் ஸ்மித், ஜாக்கிசான், புருஸ்லி, அர்னால்டு, ஜெனிபர் லோபஸ், மர்லின் மன்றோ, ஜூலியா ராபர்ட்ஸ் போன்ற பல நடிகர்களின் டி ஷர்டுகள், அவர்களின் திரைப்பட ஸ்டில்கள், ஸ்டைல்கள் எல்லாவற்றையும் வெள்ளையர்கள், அரேபியர்கள் பலர் பயன்படுத்துவதை பார்த்திருக்கிறேன்... </p> <p>அர்னால்டு, ஜாக்கிசான், ஜாக்சன் எல்லோருமெ ஒவ்வொரு துறையிலும் தனித்திறமை படைத்தவர்கள். ஒத்துக் கொள்கிறேன். அதே போல ரஜினிக்கும் சில திறமைகள் உண்டு என்பதை நீங்கள் ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டும். அவருக்கு எந்த திறமையும் இல்லை என்று   நீங்கள் சொன்னால், இத்தோடு பதிவை மூடிவிட்டு, வேறு வேலையை பாருங்கள்.</p> <p>அர்னால்டு படம் போட்ட டிஷர்ட் போட்டா படிச்ச மேதாவி, ரஜினி படம் போட்ட டிஷர்ட் போட்டா உங்களுக்கு பட்டி காட்டான்.. முட்டாப் பய....  </p> <p>ஜாக்கிசான், புருஸ்லீ, ஜாக்சன் படம் போட்ட டிஷர்ட்களை அவர்கள் போட்டுக் கொண்டு வந்தால், பாராட்டுவீர்களா?  ”பட்டிகாட்டானுக்கு பொழப்ப பார்த்தியா, ஜாக்சன் டிஷர்ட்டு! என்று கிண்டலடிப்பீர்கள்!</p> <p>வெள்ளையர்கள், அரேபியர்கள், வட இந்தியர்கள்,  ஹாலிவுட், பாலிவுட் நட்சித்திரங்கள் படம் போட்ட டி-ஷர்ட் போடவே மாட்டார்களா? </p> <p>டி காப்ரியோ வந்தால் அவர்கள் கூடி, ரோடு ப்ளாக் ஆகும். மோகன்லால் வந்தால் நம்மவர்கள் கூடி ரோடு ப்ளாக் ஆகும். (சமீபத்தில் பஹ்ரைனில் நடந்த்து).  இரண்டுமே கேவலமில்லை. அவரவர்களுக்கு பிடித்தத, அவரவர்கள் செய்கிறார்கள்.</p> <p>காவடி எடுத்து, பாலாபிஷேகம் செய்பவர்கள், விழிப்புணர்வு இல்லாதவர்கள்.. படிப்பறிவு இல்லாதவர்கள், வியாபார நிறுவனங்களால் ஆட்டுவிக்கபடுகிறவர்கள்.. போலியான விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டவர்கள். தன்னிலை மறந்து போலி புகழுக்குப் பின்னால் அலைந்து திரியும் சாதாரண மனிதர்கள்.  திரைப்பட நாயகன் என்பதையும் தாண்டி, அவனை தலைவனாக ஏற்றுக் கொள்ள செய்தது சுயநலம் மிகுந்த வியாபாரிகள், அரசியல்வாதிகள். </p> <p>மன்மோகன் உலகிலேயே அதிகம் படித்த மேதைதான்... நடப்பது எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு, அமைதியாகத்தான் இருக்க முடிகிறதே தவிர, அவரின் பெயரால், அவரின் தலைமையின் கீழ் நடைபெறும் அரசின் தவறுகளை தடுக்க இயலாது. அதே போல, ரஜினியே நினைத்தாலும் சில விஷயங்களை தடுக்க இயலாது. அவரே நினைத்தாலும் அதிலிருந்து வெளிவருவதென்பது இயலாத காரியம்.</p> <p>ஹாலிவுட்டில் செய்யாத எந்த பறக்கும் வித்தையையும், விஜய்யும், தனுஷும் செய்வதில்லை.  ஹாலிவுட்டில் எவ்வளவு பூ சுத்தினாலும் பார்க்க்கும் அறிவுஜீவிகள், தமிழ் படத்தில் மட்டும் லாஜிக் பேசுவார்கள்.</p> <p>சில விஷயங்களை குறை சொல்லுவதை விட்டுவிட்டு  நிதர்சனத்தை புரிந்து கொண்டு, வெறுப்பை உமிழாதீர்கள்.</p> <p>பின்குறிப்பு : இப்பதிவு பாலேபிஷேகம், காவடி எடுத்தல், மண் சோறு சாப்பிடுதல் போன்ற மூட நம்பிக்கைகளை ஆதரித்து எழுதப்பட்ட பதிவு அல்ல. வட இந்தியன் கிண்டலடிக்கிறான்.. வெள்ளைக்காரன் சிரிக்கிறான். மலையாளி  நக்கல் பண்றான் என்று பொருமுபவர்களுக்காக எழுதப்பட்ட பதிவு.</p> Santhappanசாந்தப்பன்http://www.blogger.com/profile/07148021073755708494noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-987851344844901124.post-37061921253867951982010-11-13T17:56:00.001+03:002010-11-13T17:56:13.476+03:00இந்திய முடியரசு<p> </p> <p>சுதந்திரத்திற்க்கு முன்னால், இந்தியா பிரிட்டிஷ் ராஜ பரம்பரையின் கட்டுபாட்டில் இருந்தது. கிழக்கிந்திய கம்பெனிக்கு முன்னால், முகலாய அரசர் நாட்டை ஆண்டு வந்தார்கள். பல்வேறு பகுதிகளை குறுநில மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். ஒரே பரம்பரையின் வாரிசுகள் ஆட்சியில் இருந்ததுடன்,  மன்னர் குடும்ப உறவினர்கள், மன்னர் குடும்ப விசுவாசிகளையே முக்கிய பதவிகளில்  நியமித்து, ஆட்சிக்கு எந்த பிரச்சனையையும் வராமல் பார்த்துக் கொண்டார்கள். இவையெல்லாம் நாம் பள்ளி பாடப்புத்தகத்தில் படித்தவைகள். அதோடு, இந்தியாவில் நடைபெறுவது மக்களாட்சி என்று சொல்லி, மக்களால், மக்களுக்காக நடத்துபடும் அரசு என 2 மதிப்பெண் வினாவில் கேட்பார்கள். </p> <p>முடியாட்சிக்கும், குடியாட்சிக்கும் முக்கய வேறுபாடாக குறிப்பிடப்படுவது, ஆட்சியின் அதிகாரவர்க்கத்தினை மக்கள் நிர்ணயிக்கலாம் என்பது மட்டும்தான். இன்றைய இந்தியா குடியரசுவாக அறிவிக்க பட்டு, 60 ஆண்டுகளை நிறைவுசெய்துவிட்டோம்.  இன்றைக்கும், நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் குறிப்பிட்ட சில குடும்பங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவருகின்றன. ஒவ்வொரு அமைச்சரும் தங்களை ஒரு குறுநில மன்னராகவே நினைத்துக் கொண்டு, தங்கள் பகுதிகளில், தங்கள் துறைகளில் அதிகாரத்தை பறக்கவிடுகின்றனர்.</p> <p> மத்திய ஆட்சியை பொறுத்தவரை, நேரு குடும்பத்திற்க்கு இன்னும் 100 ஆண்டுகளுக்கு எழுதி கொடுத்தாகிவிட்டது. காங்கிரஸ் கட்சியின் கடைக்கோடி குடிமகன், பிரியங்காவின் மகனுக்கு கொடி பிடிக்க இப்போதே தயாராகி விட்டான். ஜவகர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேரு, மனைவி கமலா நேரு இவர்கள் இருவரையும் தவிர்த்து பார்த்தால், <a href="http://en.wikipedia.org/wiki/Nehru-Gandhi_family" target="_blank">நேரு குடும்பத்தில் மட்டும் 17 நபர்கள்</a> சுதந்திர இந்தியாவின் அரசியல் அதிகாரங்களில் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். </p> <p>இந்திரா காந்தி, ஃப்ரோஸ் காந்தி, சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா, மேனகா காந்தி, வருண் காந்தி என ஒட்டுமொத்த நேரு குடும்பங்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன. நேரு குடும்ப அடிவருடிகள் நாட்டின் ஆட்சி அதிகாரங்களில் அமர்ந்து ஊழலில் திளைக்கின்றனர். மக்களாட்சியின் மாண்புகள் காற்றில் பறக்கவிடப்பட்டு, ஊடகங்களும், நேரு குடும்ப அடிமைகளாகிவிட்டனர்.</p> <p>மத்திய அரசில்தான் இந்த நிலை என்றால், மாநிலங்களிலோ குறுநில மன்னர்களின் குடும்பங்கள் செய்யும் அக்கிரமங்கள் கணக்கிலடங்காதவை.  மாநிலத்திற்க்கு ஒரு கட்சியை ஏற்படுத்தி, தங்கள் குடும்ப உறுப்பினர்களை எல்லா பதவிகளிலும் உட்கார வைத்து, மக்களின் வரிப்பணத்தை குவித்துவிடுகின்றனர். தமிழ்நாடு உட்பட  இந்தியாவின் 11 மாநிலங்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் அதிகாரத்தில் உள்ளனர். </p> <p>ஆந்திரா – N.T.ராமாராவ் குடும்பத்தினர், Y.S.ராஜசேகர ரெட்டி குடும்பத்தினர்</p> <p>பீகார் – அனுராக் நாராயணன் குடும்பத்தினர், லாலுபிரசாத் யாதவ் குடும்பத்தினர், லலித்  நாராயணன் மிஷ்ரா குடும்பத்தினர்</p> <p>பஞ்சாப் – பிரதாப் சிங் கைரோன் குடும்பத்தினர், ஆச்சார் சிங் சிங்கால் குடும்பத்தினர்</p> <p>காஷ்மீர் – ஷேக் அப்துல்லா குடும்பத்தினர், குலாம் முகமது ஷா குடும்பத்தினர், முப்தி முகமது சயீத் குடும்பத்தினர்</p> <p>மகாராஷ்டிரா – பால் தாக்கரே குடும்பத்தினர், சரத் பவார் குடும்பத்தினர், கணேஷ் நாயக் குடும்பத்தினர்</p> <p>உத்திரப் பிரதேசம் – சவுத்ரி சரண் சிங்(முன்னாள் பிரதமர்) குடும்பத்தினர்</p> <p>கேரளா – கருணாகரன் குடும்பத்தினர்</p> <p>ராஜஸ்தான் – பல்தேவ் ராம் மிர்தா குடும்பத்தினர்</p> <p>மத்தியப் பிரதேசம் – விஜயராஜீ சிந்தியா (ராஜ பரம்பரை) குடும்பத்தினர்</p> <p>ஹரியாணா – ரண்பீர் சிங் கூடா குடும்பத்தினர்</p> <p>ஒரிஸ்ஸா – பிஜூ பட்நாயக் குடும்பத்தினர்</p> <p>இதில் தமிழ்நாட்டை தேடாதீர்கள். நமது கதை ஊருக்கு வெளிச்சம். வட  இந்திய ஊடகங்கள் ஒவ்வொரு முறையும் கருணாநிதி குடும்ப வரைபடம் இல்லாமல் நிகழ்ச்சியை தொடங்குவதே இல்லை. மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு குடும்பத்திற்க்கும், மிகப் பெரிய வரைபடம் உண்டு. முழு விபரத்திற்க்கு <a href="http://en.wikipedia.org/wiki/Political_families_of_India" target="_blank">சுட்டி</a></p> <p>ஒவ்வொருவரின் குடும்பத்திலிருந்தும் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் முதலமைச்சர், அமைச்சர், சட்ட மன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.  காங்கிரஸ் மட்டுமன்றி பாரதிய ஜனதா கட்சி, ஜனதா தளம், இவ்வளவு ஏன் இடதுசாரி கட்சிகளிலும் தஞ்சம் அடைந்து ஒரே குடும்பம் வழிவழியாக அதிகாரங்களை அனுபவித்து, மக்களை சுரண்டி வருகிறார்கள். </p> <p>தேர்தலில் யார் நிற்கவேண்டும், யார் அமைச்சராக வேண்டும், யார் எந்த துறை என்று நிர்ணயிப்பது எல்லாமே இந்த சில குடும்பங்கள்தான்.  நீங்களும், நானும் வாக்களித்தால் இவர்களில் யாரேனும் ஒருவருக்குத் தான் வாக்களிக்க வேண்டும். </p> <p>ஒரு சில குடும்பங்களால், குடும்ப உறுப்பினர்களுக்காக   நடத்தப்படும் குடும்ப குறுநில மன்னர்களின் ஆட்சியே இங்கு நடைபெற்று வருகிறது! </p> <p>இப்போது சொல்லுங்கள் இந்தியா குடியரசுவா, முடியரசா? </p> <p>(நன்றி  விக்கிப்பீடியா</p> <p><a href="http://en.wikipedia.org/wiki/Political_families_of_India">http://en.wikipedia.org/wiki/Political_families_of_India</a></p> <p><a href="http://en.wikipedia.org/wiki/Nehru-Gandhi_family">http://en.wikipedia.org/wiki/Nehru-Gandhi_family</a></p> Santhappanசாந்தப்பன்http://www.blogger.com/profile/07148021073755708494noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-987851344844901124.post-31195276152937481582010-11-08T23:38:00.001+03:002010-11-08T23:38:05.769+03:00சுயவிளம்பர மோகம்<p> </p> <p>வணக்கம் நண்பர்களே, </p> <p>இரண்டு மாதங்களுக்கு முன், விடுமுறையில் இந்தியா சென்றிருந்தபோது, பல உறவினர்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டியிருந்ததால், நிறைய சன்னலோர பேருந்து பயணம். சுகமானதாகத் தான் இருந்தது. ஆனால் இரண்டு விஷயங்கள் ஒருவித பீதியையும், மன வேதனையையும் கொடுத்தது. அதில் முதல் விஷயம் பற்றிய பதிவுதான் இது….</p> <p>அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், திரை நட்சித்திரங்களுக்கு போட்டியாக வெகுமானப்பட்ட நம்ம பொதுஜனமும் புகழுக்காக விளம்பரம் யுத்தத்தில் குதித்துவிட்டதை நினைத்து புளகாங்கிதம் அடைந்தேன். </p> <p>தமிழகத்தில், தொண்ணூறுகளின் இறுதிவரை திரைப்பட சுவரொட்டிகள் தவிர, தனியார் நிறுவனங்களின் விளம்பர சுவரொட்டிகளை மட்டுமே காண இயலும். அது போக திரைப்பட நடிகர்களின் ரசிகர் பெருமக்கள், தங்கள் கதாநாயகனின் புதுப் படத்தைப் பற்றி சுவர்களில் எழுதிவைப்பார்கள். தேர்தல் வரும் போது அந்த சுவர்களையெல்லாம் (அனுமதியின்றியே) அரசியல் கட்சிகள் ஒட்டு மொத்த குத்தகை எடுத்துவிடும். </p> <p>”விளம்பரம் செய்யாதீர்” என்று எழுதிவைத்தாலும், அறிவிப்பை மட்டும் விட்டுவிட்டு, சுற்றி விளம்பரம் எழுதிவைப்பார்கள். துணியால் அல்லது ஸ்கீரின் பிரிண்டிங் முறையில் எழுதப்பட்ட பேனர்களை விழாக்காலங்களில் பார்க்கலாம். ரசிக கண்மணிகளால் வைக்கப்படும் பேனர்கள்/கட் அவுட்கள், திரையரங்குகள் இருக்கும் பகுதிகளில் மட்டுமே காணக் கிடைக்கும். தனியார் வர்த்தக  நிறுவனங்களால் வைக்கப்படும் விளம்பர தட்டிகள் விழாக்காலங்கள் அல்லது ஆடி தள்ளுபடி நாட்களில் மட்டுமே இருக்கும். இவை தவிர, நெடுஞ்சாலைகளில், ஊருக்கு வெளியில் தகரத்தில் செய்யப்பட்ட மெகா வடிவ விளம்பரங்களை வைத்திருப்பார்கள். </p> <p>பள்ளி விடுமுறையில், முதன்முறையாக சென்னை வந்தபோது, சாதாரண நாட்களில் கூட மெகா விளம்பரங்களை பார்த்து வியந்திருக்கிறேன். குறிப்பாக அண்ணா மேம்பாலத்தை சுற்றிலும் இருந்த தனியார் நிறுவனங்களின் விளம்பர தட்டிகள் மற்றும் திரைப்பட விளம்பரங்களை வாய் பிளந்து ரசித்திருக்கிறேன். ஒரு வழியாக சென்னை உயர்நீதிமன்றம்  கடிவாளம் போட்டு, மழைக்காலத்தில் சாலையில் பயணிப்பவர்களின் வயிற்றில் பால் வார்த்தது. </p> <p>ஆனால், இன்றோ எங்கு பார்த்தாலும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் தயவினால் ப்ளக்ஸ் பேனர்கள். ஒவ்வொரு பேருந்து நிறுத்தம், முச்சந்திகள், நாற்சந்திகள், கோவில் வாசலகள் என எங்கெங்கிலும் அரசியல்வாதிகள், திரை நட்சத்திரங்கள், தனியார் நிறுவனங்களையே மிஞ்சும் அளவுக்கு சாதாரண பாமரனின் விளம்பரங்கள். </p> <p>திருமண விழா, புது மனை புகுவிழா, பேரன்/பேத்திகளின் காதுகுத்துவிழா, இவ்வளவு ஏன் மஞ்சள் நீராட்டுவிழாவுக்கு கூட ஒட்டு மொத்த குடும்பத்தினரின் புகைப்படங்களோடு வாழ்த்தி ப்ளக்ஸ் பேனர்கள். ”வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள்” என 20 பேரின் புகைப்படங்கள் அலைபேசி சகிதம், குறிப்பாக அடைமொழிகளோடு. மணமகன் அல்லது மணமகள் அலைபேசியை வைத்துகொண்டு, விதவிதமான வடிவங்களில் மெகா அளவு விளம்பரங்கள்.  </p> <p>திருவாரூர்-மயிலாடுதுறை சாலையிலுள்ள கொல்லுமாங்குடி பேருந்து நிறுத்தத்தில் ஒரு பேனர் பார்த்து மயக்கம் போட்டு விழாத குறை. மணமகன், மணமகளுக்கு தாலி (சங்கிலி போன்ற) கட்டுவது போன்ற மிகப் பெரிய விளம்பரம். வழக்கம் போல வாழ்த்திய மணமகனின் நண்பர் வட்டாரம். சரி திருமணம் முடிந்துவிட்டது என நினைத்து தேதியை பார்த்தால், நான் பார்த்த நாளுக்கு, அடுத்த நாள்தான் திருமணம்.  நிச்சயமாக அந்த விளம்பரம், 5 நாட்களுக்கு முன்பாக அங்கே வைக்கப் பட்டிருக்க வேண்டும். 10 நாளைக்கு முன்பாக புகைப்படம் எடுத்திருப்பார்கள். ஒரு வேளை அந்த திருமணம் நடைபெறாவிட்டால் மணமக்களின் கதி??? </p> <p>அதைவிட மற்றுமொரு கொடுமையை மயிலாடுதுறைக்கருகே பார்க்க நேர்ந்தது. ”அம்மனுக்கு காவடி எடுக்கும் அன்பு உள்ளங்களை வாழ்த்துகிறோம்” என்றொரு ப்ளகஸ் பேனர். ஒவ்வொரு குழந்தையும் சிரித்த முகத்தோடு கையில் காவடிகளை வைத்து போஸ் கொடுத்து கொண்டிருந்தார்கள். காவடி விழா, ஒரு வாரம் கழித்தே நடைபெற இருப்பதாக விளம்பரம் சொல்லியது. தாத்தா, பாட்டி, மாமா, அத்தைகள் என்று ஒரு பெரிய குடும்பமே மகழ்ச்சியாக சிரித்து கொண்டிருந்தார்கள். என்ன கொடுமையென்று இதை சொல்வது. இறைவனுக்கு செய்யும் நேர்த்திக் கடனுக்குமா விளம்பரம்?</p> <p>கொட்டிய மழைக்காக ATM மையத்தில் ஒதுங்கி நின்றிருந்த நான் திருவாரூரில் கண்ணெதிரே கண்ட காட்சி.   இரவு 9 மணிக்கு, முக்கிய சாலையான பனகல் சாலையில் அந்த   மெகா விளம்பர தட்டி,  கொட்டிய மழையில் விழுந்துவிட்டது. அதை சரி செய்த போக்குவரத்து காவலர் செய்த வசவுகள் அந்த குடும்பத்தின் ஏழேழு தலைமுறையையும் சென்றடையும். விளமபரத்தில் இருந்த மணமக்களை மட்டுமல்லாமல், அதை ப்ரிண்ட் செய்த விளம்பர நிறுவனம், அனுமதியளித்த காவல்துறை உயரதிகாரிகள் என அனைவரையும் கொச்சையாக திட்டிக் கொண்டிருந்தார். அவர்களின் வாழ்த்துக்கள் விரயமானதோடு, பணமும் விரயமானதுதான் மிச்சம்!</p> <p>இது போதாதென்று, உள்ளூர் தனியார் அலைவரிசைகளில்( Local Cable TV Channels) , எல்லாவற்றிற்க்கும் வாழ்த்து சொல்லி 5 முதல் 10 நிமிடம் வரை விளம்பரங்கள். ஒவ்வொருவரின் உறவுமுறைகளோடு, பல்வேறுவித அடைமொழிகளோடு, குடும்பத்தினரின் ஒட்டு மொத்த புகைப்படங்கள்.  ஒரு குடும்ப விழாவுக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்களை அழைப்பிதழ் கொடுத்து அழைப்பது நமது மரபு. பிறகு இந்த விளம்பர தட்டிகளை வைத்து யாருக்காக தம்பட்டம் அடிக்கீறிர்கள்?  யாருடைய மனம குளிர தங்கள் வாழ்த்துக்களை ஊருக்கே அறிவிக்கிறார்கள்? இதைப் பார்த்து வெறுப்படைந்து என் போன்றவர்கள் சாபம் விட்டால் அது யாரை சென்றடையும்?</p> <p>விளம்பர தட்டிகளை 5 நாட்களுக்குள் எடுக்க வேண்டுமென்று சட்டத்தை பெரு நகரங்களில் மட்டுமே செயல்படுத்த முடியும். சிறிய ஊர்கள், குறிப்பாக ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் இருக்கும் தனியொரு மனிதனின் ஒராயிரம் விளம்பரங்களுக்கு யார் கடிவாளம் போடுவது? அதன் கீழ் மழைக்கு ஒதுங்கி நிற்க்கும் பொதுஜனத்தின் உயிருக்கு யார் காப்பீடு தருவது? </p> <p>அரசாங்கமா? அனுமதியளித்த காவல்துறை / நகராட்சி / ஊராட்சி துறையா? விளம்பரத்தை வைத்த நிறுவனம்? வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள்? அல்லது அந்த மணமக்கள்? உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம்!</p> Santhappanசாந்தப்பன்http://www.blogger.com/profile/07148021073755708494noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-987851344844901124.post-35092009640921764242010-07-16T19:45:00.001+03:002010-07-21T23:12:06.399+03:00ஆழித் தேர்<p> </p> <p>என்னுடைய இந்த பதிவு, <a href="http://idlyvadai.blogspot.com/2010/07/blog-post_3636.html">இட்லிவடை தளத்தில் </a>வெளியாகி உள்ளது. </p> <p>நமது ஊர் கோவில்களில் எல்லாம் திருவிழா என்றால், ”தேரோட்டம்” நிச்சயமாக இடம் பெறும்.  எல்லா ஊர்களிலும் தேர் திருவிழா நடைபெறும். ஊர் கூடி தேரிழுப்பார்கள். இரண்டு வடங்களைக் கொண்டு, காலையில் தொடங்கி, மாலையில் நிலைக்கு கொண்டு வந்து விடுவார்கள். இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்தது தானே என்கிறீர்களா?</p> <p>ஊர் கூடி இழுத்தால் மட்டும் போதாது, புல்டோசர்கள் நான்கை வைத்து தேர் இழுத்து பார்த்திருக்கிறீர்களா? லாரி, லாரியாக ஸ்லீப்பர் கட்டைகளையும், முட்டுக் கட்டைகளையும் வைத்து அங்குலம் அங்குலமாக தேர் நகர்ந்து பார்த்திருக்கிறீர்களா?  ஹைட்ராலிக் ப்ரேக் முறையில் தேர் அசைந்து ஆடுவதை பார்த்திருக்கிறீர்களா? தேர் என்று நிலைக்கு வரும் என்றே தெரியாமல் ஆயிரக்கணக்கான கூட்டம் காத்திருந்ததை கேள்விப் பட்டிருக்கிறீர்களா?</p> <p><a href="http://lh6.ggpht.com/_zOOY9Z7VJxA/TECMLS9Q6FI/AAAAAAAAEic/hxlLsTW6MXY/s1600-h/ThiruvarurCar3.jpg"><img style="border-right-width: 0px; display: inline; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: 0px; border-left-width: 0px; margin-right: 0px" title="ThiruvarurCar" border="0" alt="ThiruvarurCar" align="left" src="http://lh5.ggpht.com/_zOOY9Z7VJxA/TECMRSS_FRI/AAAAAAAAEik/IE8DQMtBbRo/ThiruvarurCar_thumb1.jpg?imgmax=800" width="244" height="184" /></a>மேற்க்கண்ட கேள்விகளுக்கெல்லாம் உங்கள் பதில் இல்லையென்றால், நீங்கள் திருவாரூர் ஆழித் தேரைப் பற்றிக் கேள்விப் பட்டதில்லை. </p> <p>”திருவாரூர் தேரழகு” மாத்திரம் இல்லை. தலைமுறை, தலைமுறையாக, ஆழித் தோரோட்டத்தை  நடத்தும் குடும்பங்களுக்கு, ஒரு தவம்.</p> <p>சுமார் 96 அடி (30 மீட்டர்) உயரம், 360 டன் எடை கொண்ட தியாகராஜரின் ரதம்தான் திருவாரூர் தேர். ஆசியாவின் மிகப் பெரிய தேர்களில் ஒன்று என்று புகழப் படும் ஆழித்தேர் நான்கு நிலைகளை கொண்டது. முதல் நிலை 6 மீட்டர்களும், இரண்டாவது நிலை 1.2 மீட்டர்கள் உயரமும் கொண்டது.  மூன்று மட்டும் நான்காவது நிலைகள 1.6 மீட்டர் உயரம் கொண்ட பீட வடிவமைப்பு கொண்டது. இந்த நிலைகளில் தான் தியாகேசப் பெருமான், அம்மையுடன் வீற்றிருப்பார். </p> <p>இரும்பு தகடுகள் பொருத்தப்பட்ட தேரினுடைய ஆறு சக்கரங்கள், ஒவ்வொன்றும் 2.59 மீட்டர் விட்டம் கொண்டது. தேரை நிறுத்த ஹைட்ராலிக் ப்ரேக் முறை, திருச்சி பாரத் மிகுமின்  நிறுவன (BHEL) பொறியாளர்களைக் கொண்டு கையாளப் படுகிறது. </p> <p>மரத்தினால் ஆன தேரில், அழகிய கலை நயத்துடன் புராணத்திலிருந்து சிற்பங்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன.  மரத்தேரின் மீது, 20 மீட்டர்கள் அளவிற்க்கு, மூங்கில் கம்புகள், தோரணங்கள், தேர் சீலைகள் கொண்டு அலங்கரிக்கப் பட்டு, காகிதக் கூழில் செய்யப் பட்ட பிரம்மா தேரோட்டியாகவும், நான்கு வேதங்களை குதிரைகளாகவும் நிறுத்தகின்றனர்.</p> <p>26 டன் எடை கொண்ட அலங்கரிக்கப்படாத தேர்,  அலங்கரிக்கப் பட்டபின் 360 டன் எடை கொண்ட ஆழித் தேராக உருவெடுக்கிறது. தேரை அலங்கரிக்க மட்டும் 3000 மீட்டர் அளவிலான தேர்சீலைகள் உபயோகப்படுத்தப் படுகின்றன. தேரின் உச்சியில் 1 மீட்டர் உயரத்திற்க்கு கூம்பு வடிவ கலசமும், கொடியும் வைக்கப் பட்டு, 30 மீட்டராக வடிவெடுக்கின்றது. (சென்னை வள்ளுவர் கோட்டம், திருவாரூர் தேர் மாதிரியில் வடிவமைக்க பட்டது)</p> <p>சுமார் 24 மீட்டர் கொண்ட நான்கு மிகப் பெரிய வடங்கள் தேரை இழுக்க பயன்படுத்தப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன் வரை, தேரிழுக்க, திருவாரூருக்கு அருகில் உள்ள வடபாதிமங்கலம் சர்க்கரை ஆலையிலிருந்து ஆட்களை அழைத்து வரப்படுவார்கள். நவீன யுகத்தில், பெல் நிறுவன பொறியாளர்களின் மேற்பார்வையில் ஹைட்ராலிக் முறைகள் பொருத்தப் பட்டு, முன்னால் இரண்டு புல்டோசர்கள் இழுக்க, பின்னால் இரண்டு புல்டோசர்கள் தள்ள ஒன்று அல்லது இரண்டு நாட்களில் நிலைக்கு கொண்டு வந்து விடுகின்றார்கள். ஒரு காலத்தில் மனித சக்தியால் இழுக்கப் பட்ட தேரை நிலைக்கு கொண்டு வர ஆறு மாதங்கள் ஆனதாம்</p> <p>ஆழித் தேரின் சிறப்பம்சம், வளைவுகளில் திரும்புவது. ஒரு வீதியிலிருந்து மற்றொரு வீதிக்கு தேர் திரும்புவதை காண்பது கண் கொள்ளாக் காட்சி. தேர் சக்கரங்களுக்கு அடியில் கிரீஸ் தடவப்பட்ட மிகப் பெரிய இரும்பு தகடுகளை வைத்து, நின்ற நிலையிலேயே (முன் நகராமல்) தேர் திரும்புவதை வெளி நாட்டவர்களும் கண்டு வியப்பார்கள். <a href="http://www.youtube.com/watch?v=4KT63JA7w9s" target="_blank">தேர் திரும்பும் காணொளி இங்கே</a></p> <p>ஒரு வேளை தேர் பாதையிலிருந்து விலகி சென்று விட்டால், தேரின் பாதையை மாற்ற லாரி மற்றும் ட்ராக்டர்களில் ஸ்லீப்பர் கட்டைகள் மற்றும் முட்டு கட்டைகள் கூடவே கொண்டுவரப்படும். </p> <p>1927-ம் ஆண்டு வாக்கில், தேர் மேற்கு கோபுரத்திற்க்கு அருகில் வரும் போது தீப்பிடித்து எரிந்து போய்விட்டதாகக் கூறுவார்கள். பின்பு புதிய தேர் செய்யப் பட்டு 1947 வரை  நடைபெற்ற திருவிழா,  சுதந்திரத்திற்க்கு பின் நிதி பற்றக்க்குறையால் நிறுத்தப்பட்ட தேரோட்டம் 1970-ஆம் ஆண்டு வாக்கில் பல்வேறு முயற்சிகளுக்குப் பின் திரும்ப தொடங்கியது. </p> <p><strong>”அஸ்தத்தில் கொடியேற்றி, ஆயில்யத்தில் தேரோட்டி, உத்திரத்தில் தீர்த்தம்” என்பது 27 நாட்கள் நடைபெறும் திருவாரூர் பங்குனி உத்திர திருவிழாவின் சாராம்சம். </strong>அதாவது மாசி மாதம் (பிப்ரவரி) அஸ்த நட்சித்தரமன்று கொடியேற்றி, பங்குனி (மார்ச் இறுதி/ஏப்ரல் முதல் வாரம்) ஆயில்யம் நட்சத்திரத்தில் தேர் ஒட்டி, பங்குனி உத்திர நட்சத்திரன்று சுவாமி தீர்த்தம் கொடுப்பது ஐதீகம். </p> <p>தியாகேசர், ஆழித் தேருக்கு எழுந்தருளுவதற்க்கு முன்னால், தேவாசரிய மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்திற்க்கு கொண்டு வரப்படுவார். அங்கிருந்து தேரோட்ட தினத்திற்க்கு இரண்டு நாட்கள் முன்பு தேருக்கு கொண்டுவரப்படுவார். முறைப்படி எல்லாம் நடந்தால், அடுத்த ஒரு வாரத்திற்க்குள், சுவாமி யதாஸ்தானம் வரவேண்டும். பணம் சம்பாதிக்கும் கும்பல்கள தங்கள் வேலையை காட்ட தொடங்கியதன் விளைவு, கடந்த சில ஆண்டுகளாக எல்லாம் மாறி போய்விட்டது. </p> <p>தொண்ணூறுகளின் இறுதிவரை ஐதீக முறைப்படி நடைபெற்று வந்த பல்வேறு சிறப்புகள் வாய்ந்த ஆழித் தேரோட்ட திருவிழா, அதற்க்குப் பின்பு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் கைக்கு மாறி அவர்களுக்கு ஏற்ற நாட்களில், அவர்களுக்கு ஏற்றார் போல் நடத்தப்படும் சடங்காக மாறிப் போனதுதான் சோகம். </p> <p>கடந்த பல ஆண்டுகளாகவே, தேரோட்டத் திருவிழா, குறிப்பிட்ட பங்குனி ஆயில்ய நட்சத்திர தினத்தில் நடைபெறுவது இல்லை. பள்ளி/கல்லூரி தேர்வு சமயமாக இருப்பதால், திருவிழாவை மே அல்லது ஜூன் மாதத்தில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதுவரை சுவாமி, ஆயிரங்கால் மண்டபத்தில் மாதக் கணக்கில் தேவுடு காக்க வேண்டிவரும். </p> <p>பள்ளி மாணவர்களின் படிப்பு வீணாகப் போகக் கூடாது என்ற அக்கறை எல்லாம் ஒன்றும் கிடையாது. அப்படி அக்கறை ஏதாவது இருந்தால் கிரிக்கெட் போட்டிகளை நடத்த மட்டார்கள் அல்லவா? இதை விட பல்லாயிரம் மக்கள் கூடும் மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் மாதத்தில்தான்  நடக்கும் என்பது குறிப்பிடதக்கது.  பள்ளி நாட்களில் நடத்தினால் திருவிழாக் கூட்டம் குறைந்து, அவர்களுக்கு வருமானம் இல்லையாம். </p> <p>இந்து அமைப்புகள் மட்டும் ஐதீக முறைப்படி குறிப்பிட்ட நாளில் தான் தேரோட்டம் நடைபெற வேண்டும் என்று போராடி வருகிறார்கள். ஆயில்ய நட்சத்திரம் வரும் நாளில், இந்து அமைப்புகள், தாங்களே செலவு செய்து சப்பரம் போன்ற ஒன்றை இழுத்து வருவார்கள். அரசு நிர்வாகம் தனது சகல அஸ்திரங்களையும் பிரயோகித்து, அவர்க்ளை ராஜ வீதிகளில் வரவிடாமல் செய்யும். இந்த ஆண்டும் இது போன்ற ஒரு நிகழ்வு நடந்தது. </p> <p><a href="http://lh4.ggpht.com/_zOOY9Z7VJxA/TECMiSfKIGI/AAAAAAAAEio/SBWuPOAuVCI/s1600-h/Chariot23.jpg"><img style="border-right-width: 0px; display: inline; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: 0px; border-left-width: 0px; margin-right: 0px" title="Chariot2" border="0" alt="Chariot2" align="right" src="http://lh6.ggpht.com/_zOOY9Z7VJxA/TECMndtgVbI/AAAAAAAAEis/qeNFcVuhqt0/Chariot2_thumb1.jpg?imgmax=800" width="244" height="239" /></a> அடுத்தது, தேரோட்டத்திற்க்கு நாள் குறித்துவிட்டு, தேரை முன்னதாகவே கட்டி வைத்து விட்டு, சுவாமியை தேருக்கு கொண்டு வந்து ஒரு வாரம்/பத்து நாட்கள் வைத்து, பார்வையாளர்களை தேரில் ஏறவைத்து அதற்க்கு கட்டணம் வசூலித்து காசு பார்த்து கொண்டிருக்கிறார்கள்.</p> <p>ஒரு வழியாக, ஆழித் தேரோட்டம் நடைபெறும். செருப்பு/ஐஸ்கீரிம் உட்பட சகலவிதமான பொருட்களும் கிடைக்கும் திருவிழா வியாபாரம், பெரிய கோவிலின்  நான்காம் பிரகாரத்தில் (ஆயிரங்கால் மண்டபத்தின் முன்) கொடி கட்டி பறக்கும். </p> <p>இத்தனைக்கும் தியாகேசப் பெருமான் ஒன்றும் பஞ்சபராரி அல்ல. பல கோடி ரூபாய் சொத்து உள்ள, தமிழகத்தின் பெரிய கோவில்களில் ஒன்று. கோவிலுக்கு சொந்தமாக பல ஏக்கர் நிலங்கள் இருந்தன. இன்று என்னவானது என்று நான் சொல்ல வேண்டியதில்லை.</p> <p>சரித்திர புகழ் வாய்ந்த ஒரு ஆழித் தேரோட்டம், சீர் குலைந்து போய் ஒரு சடங்காக வியாபாரிகளால்  நடத்தப் பட்டு கொண்டிருக்கிறது. </p> <blockquote> <p><strong><font color="#ff0000">திருவாருர் ஆழி தேர் யூ ட்யூப்பில் <a href="http://www.youtube.com/watch?v=tlk7iNkES_s" target="_blank">காணொளி1</a>   <a href="http://www.youtube.com/watch?v=ceKYigSxGGE" target="_blank">காணொளி2</a>    <a href="http://www.youtube.com/watch?v=LkU39t8qrvc&feature=related" target="_blank">காணொளி3</a></font></strong></p> <p><strong><font color="#ff0000"><a href="http://picasaweb.google.com/saandahs/CarCityThiruvarur#" target="_blank">திருவாரூர் பிக்காசா ஆல்பம்</a> </font></strong></p> <p><strong><font color="#ff0000"><a href="http://www.dinamalar.com/360_view_detail.asp?id=187" target="_blank">திருவாரூர் கோவில் 360 டிகிரி கோணத்தில் – தினமலர் தளத்தில்</a></font></strong></p> <p><strong><font color="#ff0000"></font></strong></p> <p><font color="#ff0000"><u><strong>பின்குறிப்பு</strong></u></font></p> <p><strong><font color="#ff0000">பங்குனி 10 (மார்ச் 26)  அன்று  நடைபெற வேண்டிய இந்த ஆண்டிற்க்கான தேரோட்டம், அதிகாரிகள்/மற்றும் அரசியல்வாதிகளின் கைங்கர்யத்தால் ஜூலை 16-ம் நாள், இன்று நடைபெறுகிறது.</font></strong></p> </blockquote> <p>   <strong><a href="http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=596651" target="_blank">தமிழ் மணம் ஓட்டு</a></strong></p> <p><strong>    <a href="http://www.tamilish.com/tamvote.php?url=http://pillaiyaandaan.blogspot.com/2010/07/blog-post.html" target="_blank">தமிழிஷ் ஓட்டு</a></strong></p> Santhappanசாந்தப்பன்http://www.blogger.com/profile/07148021073755708494noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-987851344844901124.post-7729432989757951312010-06-22T00:39:00.001+03:002010-06-22T00:44:01.409+03:00தமிங்கிலிஷ் டூ தமிழ்<p> </p> <p><strong>டிஸ்கி :  என் நண்பர்கள் பலருக்கு, தமிழிணையம் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், அவர்களுக்கு அறிமுகப் படுத்தும் பொருட்டு, நான் அனுப்பிய மின்னஞ்சல் இது. அதை இங்கே பதிவிடுகிறேன். .  </strong></p> <p>“Hello thalaiva, vanakkam epdi irukeenga, nalla irukkeengala’  </p> <p>இந்த மாதிரி தமிங்கிலிஷ் (தமிழை ஆங்கிலத்தில் எழுதுவது/தட்டச்சு செய்வது - Phonetic) முறையில் தான்,  நம்மில் (தமிழ் தெரிந்த) பெரும்பாலானவர்கள், உரையாடல்களிலும் (Chats) மின்னஞ்சல்களிலும் பேசிக் கொள்கின்றனர்.  ஏன் இப்படி, தமிழிலேயே தட்டச்சு செய்தால் (Type Writing) என்ன? </p> <p>யோசித்தது இல்லையா?   நமது தாய் மொழியைப் பற்றி தெரிந்த கொள்ள வேண்டாமா?  </p> <p>பெரும்பாலானவர்கள் நினைப்பது, கணினியில் தமிழில் எழுத, தமிழ் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும் என்று. தேவையே இல்லை. மேற்க்கண்ட தமிங்கிலிஷ் முறையில் தட்டச்சு (Type) செய்தாலே, தானாக தமிழில் மாற்றிக் கொடுக்கும் மென் பொருட்கள் (Softwares) வலைப் பக்கங்கள் வந்து பல ஆண்டுகளாகிவிட்டன. </p> <p>இணையத்தில் வலைப் பக்கமாகவும், உங்கள் கணினியில் தரவிறக்கியும் (Download) உபயோகப் படுத்தலாம்.</p> <p>முதலில் இணையத்தின் ஜாம்பவானான கூகிளாண்டவர் கொடுத்திருக்கும், <a href="http://www.google.co.in/transliterate/tamil" target="_blank"><strong>”கூகிள் எழுத்து மாற்றி” (Google Transiltration)</strong></a> முறையை பற்றி பார்க்கலாம். தமிழ் மட்டுமல்லாது, எல்லா இந்திய மொழிக்கும் இந்த கூகிள் ட்ரான்ஸில்டேரஷன் என்கின்ற எழுத்து மாற்றி பயன்படும்.</p> <p>இந்த முறையை பயன் படுத்த உங்களும் தமிழ் உச்சரிப்பும், தமிங்கிலிஷ் முறையும் தெரிந்திருக்க வேண்டும். நீங்கள்,  “superda”  என்று தட்டச்சு செய்தீர்களானால் அதுவே, “சூப்பர்டா” என்று மாற்றிக் கொள்ளும்.  உங்களுக்கு தேவையானதை அங்கே தமிழில் எழுதி, படியெடுத்து (Copy) உங்களுக்கு தேவையான இடத்தில் இட்டுக் கொள்ளுங்கள். </p> <p>அழுத்தம் உள்ள எழுத்துக்களை, ஆங்கில உயிரெழுத்துக்களான (Vowels)  a, e, i, o , u ஆகியவற்றை சேர்ப்பதன் மூலம் பெறலாம்.  ”ஆ” என்பதற்க்கு  “aa”  என்று அடிக்க வேண்டும்.  ”தூ” என்ற எழுத்தைக் கொண்டுவர “thuu” என்றும் கூடுதலாக் ஒரு “u” சேர்க்க வேண்டும். </p> <p>இந்த கூகிள் எழுத்து மாற்றியை, உங்கள் இணைய/வலை பக்கங்களில் இணைத்துக் கொள்வதற்க்கான நிரலியையும் கூகிள் வழங்குகிறது.  </p> <p><a href="http://code.google.com/apis/ajaxlanguage/documentation/#Single">http://code.google.com/apis/ajaxlanguage/documentation/#Single</a></p> <p>மென்பொருள் நிபுணர்கள், மேற்க்கண்ட தளத்தில் சென்று 19 இந்திய மொழிகளுக்கான API நிரலியை பெற்றுக் கொள்ளலாம்.</p> <p>ஆரம்பத்தில் நீங்கள் தடுமாறினாலும், விரைவில், விரைவாக உங்களால் எழுத இயலும். முயற்சித்துப் பாருங்கள். இந்த Google Transiltration-ல் உள்ள ஒரே சிறிய பிரச்சனை, ஒரு வார்த்தை முடித்து, நீங்கள் இடைவெளி (Space) விட்டால் மாத்திரமே தமிழாக மாற்றும். ஒவ்வொரு எழுத்துக்கும் மாற்றாது.</p> <p>ஒவ்வொரு எழுத்துக்கும் மாற்றும் இணைய வடிவிலான பக்கங்களும், தரவிறக்கம் (Download) செய்து உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளும் வகையில் ஏராளமான மென் பொருட்களும் உள்ளன. </p> <p>இணைய வடிவிலான பக்கங்களில் குறிப்பிடத் தகுந்தது, <a href="http://www.higopi.com/ucedit/Tamil.html" target="_blank">“தகுடூர்”</a> மற்றும் <a href="http://tamileditor.org/" target="_blank">“தமிழ் எழுதி”</a> பக்கங்கள். <a href="http://www.higopi.com/ucedit/Tamil.html" target="_blank">“தகுடூர்”</a>  நிரலியை உங்கள் கணினியில் தரவிறக்கி, HTML பக்கமாக, இணைய இணைப்பு இல்லாத போதும் பயன்படுத்தலாம். இந்த வலைப் பக்கங்கள், தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் அனைவரும் பயன் படுத்தும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. <br /></p> <p>மேற்குறிப்பிட்ட எழுத்து மாற்றிகள், ஒவ்வொரு எழுத்துக்களையும் மாற்றுவதால் புதிதாக பழகுபவர்களுக்கு இலகுவாக இருக்கும். a, e, i, o, u போன்ற எழுத்துக்களை ஒன்றிரண்டு கூடுதலாக சேர்ப்பதன் மூலம் சரியான வார்த்தைகளைப் பெறலாம்.</p> <p>இந்த முறையை பயன்படுத்தும் போது கவனிக்கவேண்டியது, பெரிய/சிறிய எழுத்துகள் (Case Sensitive).  தமிழில் உள்ள,  ”ல, ள”, “ர, ற”, “ன, ண”  போன்ற எழுத்துக்களைப் பெற “Shift Key” யை பயன் படுத்த வேண்டும். </p> <p>மேற்க்கண்ட இணையப் பக்கங்கள் தவிர,  <font color="#ff0000"><a href="http://code.google.com/p/ekalappai/downloads/list" target="_blank">இ-கலப்பை</a>, <a href="http://software.nhm.in/" target="_blank">NHM Writer</a>, <a href="http://www.azhagi.com/docs.html" target="_blank">அழகி</a></font> போன்ற மென்பொருட்கள் உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளும் வகையிலேயே கிடைக்கின்றன. இவற்றின் மூலம் தமிழில்,  Word Document, Excel Spreadsheet, NotePad, Chat Window என எங்கு வேண்டுமானாலும் நீங்கள் தமிழைப் பயன்படுத்தலாம்.</p> <p>NHM Writer-யை கணினியில் நிறுவ, <a href="http://software.nhm.in/products/writer">http://software.nhm.in/products/writer</a> என்ற தளத்திற்கு சென்று, அங்கு உள்ள Download என்பதை கிளிக் செய்து NHWM Writer-யை தரவிறக்கம் செய்து கொள்ளவும். தரவிறக்கம் செய்ததை இரட்டை கிளிக் செய்து Install செய்து கொள்ளுங்கள். <br />இப்பொழுது உங்கள் டாஸ்க் பாரில் மணி வடிவ ஐகான் ஒன்று தோன்றும். இனி நீங்கள் Alt + 4 அழுத்துவதன் மூலம் தமிழிலும் அதே கீக்களை மீண்டும் அழுத்துவதன் மூலம் ஆங்கிலத்திலும் ரைப் செய்யலாம். மேலதிக விபரங்களுக்கு <a href="http://www.itvav.blogspot.com">www.itvav.blogspot.com</a> என்ற வலைப்பதிவில் பாருங்கள்.</p> <p><strong><u><font color="#008040">தமிழில் எழுதுவதற்க்கான பக்கங்கள் அல்லது மென் பொருட்கள்</font></u></strong></p> <p>கூகிள் எழுத்து மாற்றி” (Google Transiltration) - <a title="http://www.google.co.in/transliterate/tamil" href="http://www.google.co.in/transliterate/tamil">http://www.google.co.in/transliterate/tamil</a></p> <p>தகடூர்  - <a title="http://www.higopi.com/ucedit/Tamil.html" href="http://www.higopi.com/ucedit/Tamil.html">http://www.higopi.com/ucedit/Tamil.html</a></p> <p>தமிழ் எழுதி - <a href="http://tamileditor.org/">http://tamileditor.org/</a></p> <p><strong>”அழகி”</strong> மென்பொருள் - <a href="http://www.azhagi.com/docs.html">http://www.azhagi.com/docs.html</a></p> <p>”இ-கலப்பை” மென்பொருள் - <a href="http://thamizha.com/">http://thamizha.com/</a></p> <blockquote> <p>                         <a href="http://code.google.com/p/ekalappai/downloads/list">http://code.google.com/p/ekalappai/downloads/list</a></p> </blockquote> <p><strong>இணையத்தில் தமிழை பயன்படுத்துவோம்! தமிழ் வளர உறுதுணையாயிருப்போம்!</strong></p> <p><strong>தகவல் உதவிகளுக்காக : கூகிள், தமிழ் மணம், ”தமிழ் இணையப் பயிரங்கம்” கூகிள் வலைக் குழுமம்,  போன்றவற்றிக்கு என் நன்றிகள்!!</strong></p> Santhappanசாந்தப்பன்http://www.blogger.com/profile/07148021073755708494noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-987851344844901124.post-47420561624901573182010-06-04T00:04:00.003+03:002010-06-04T00:10:33.668+03:00தமிழர் தினங்கள் இனி தமிழர் வரலாறு படி....<br />
அமெரிக்க நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டு குடிமக்களின் பெயரால் காதலர் தினம், மனைவியர் தினம், நண்பர்கள் தினம், பூமி தினம், பாதிரியார் மரம் நட்டால், மரம் நட்ட தினம், மீன் பிடித்தால், “மீன் பிடித்த தினம்” என்று அறிவித்து கொண்டாடி வருகின்றனர். அங்கே பஞ்சம் பிழைக்க சென்ற நம்மவர்கள் அதை இந்தியாவிற்க்கு இறக்குமதி செய்து வருகின்றனர். <br />
<br />
இதுவரை காதலர் தினம் மட்டும் தான் பெரிய கொண்டாட்டமாக இருந்தது. ஆனால், இந்த வருடம், அன்னையர் தினத்திற்க்கு நமது மக்கள் ட்வீட்டரிலும், பேஸ் புக்கிலும் அடித்த கூத்தை பார்த்தவுடன் எனக்கு பற்றிக் கொண்டு வந்தது. அன்னையர் தினத்தன்று மட்டும் வசனங்களையும், படங்களையும் போட்டு அன்னையை பெருமைபடுத்துகிறார்களாம், இதில் ஓராயிரம் பார்வேர்டு மெயில் வேறு. என்ன கொடுமை ஐயா இது? <br />
<br />
இதுவரை தமிழுணர்வாளர்கள் யாரும் பொங்கி எழாமல் இருப்பது அதை விடக் கொடுமை. இன்னும் நாம் வெள்ளையனுக்கு அடிமை தான். <br />
<br />
அதனால், குத்துப் பாட்டுக்களை பார்ப்பதை தலையாய கடைமையாகக் கொண்டிருக்கும் வாழும் வள்ளுவர் முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதி தெரிவிக்கலாம் என்று இருக்கிறேன். உலகத்திலேயே, ஒரு கடிதங்களாக எழுதி எழுதி, தமிழையும், தமிழ் மண்ணையும், தமிழினத்தையும் வாழ வைத்து கொண்டிருப்பது, நம்ம முதல்வர் மட்டும்தான். தமிழ் செம்மொழி மாநாடு முடிவதற்க்குள் ஒரு நல்ல பதிலை சொல்வார் என்று நினைக்கிறேன். <br />
<br />
மாண்புமிகு முதல்வருக்கு<br />
<br />
”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே மூத்த குடி தமிழ்க் குடி” … இன்றைய தேதிக்கு சுமார் 750, 000 வருடங்களுக்கு நாகரீகம் தோன்றி, அன்று முதல் தமிழே உயிர் மூச்சாக வாழ்ந்து வருவது நமது தமிழ் இனம்”. இப்படி பல்வேறு சிறப்பு வாய்ந்த தமிழ் இனத்துக்கு ஒரு நாட்காட்டியும், புத்தாண்டும் இருக்க வேண்டும் என்று தான், திருவள்ளுவர் பிறந்த நாளை தமிழ் புத்தாண்டாகவும், திருவள்ளுவர் நாட்காட்டியை தமிழர்களின் அதிகாரபூர்வ நாட்காட்டியாகவும் அறிவித்தீர்கள். <br />
<br />
இந்த நிலையில், மேலை நாடுகள், ஒவ்வொரு நாளும், தங்கள் நாட்டு குடிமக்களின் பெயரால் காதலர் தினம், மனைவியர் தினம், நண்பர்கள் தினம், பூமி தினம் போன்ற பல தினங்களை அறிவித்து கொண்டாடி வருகின்றனர். கோவையில் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற இருக்கின்ற இந்த வேளையில், தமிழினத்துக்கென தனி அடையாளம் வேண்டுமா? <br />
தமிழர்கள் வரலாற்றை ஆராய்ந்து, தமிழர்களுக்கென சிறப்பு தினங்களை அறிவிக்க வேண்டும் என இதன் மூலம் கேட்டுக் கொள்கிறேன். என் சிற்றரிவுக்கு தெரிந்த வகையில் நானும் சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன். ஆனால் நாட்கள் தான் எனக்கு குழப்பமாக உள்ளது. தாங்கள் அமைக்கும் குழு சரியான நாட்களை கண்டுபிடித்து பரிந்துரைகளை வழங்கும் என நம்புகிறேன். <br />
<br />
<a href="http://lh3.ggpht.com/_zOOY9Z7VJxA/TAgY4bIlOTI/AAAAAAAAEG4/u54jqoO9WeU/s1600-h/aprilfool3.jpg"><img alt="april-fool" border="0" height="287" src="http://lh5.ggpht.com/_zOOY9Z7VJxA/TAgY6CdYY_I/AAAAAAAAEG8/Tbezvo7Wd8I/aprilfool_thumb1.jpg?imgmax=800" style="border-bottom-width: 0px; border-left-width: 0px; border-right-width: 0px; border-top-width: 0px; display: block; float: none; margin-left: auto; margin-right: auto;" title="april-fool" width="255" /></a> <br />
<br />
இனி சிறப்பு தினங்களை, அந்த குழு வழங்கும் பரிந்துரைகளின் படிதான் கொண்டாட வேண்டுமென அரசு உத்தரவிட வேண்டும். தமிழகத்திலே மீண்டும் அமைய உள்ள சட்ட மேலவை, இதை தனது முதல் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.<br />
<br />
இனி தமிழர்களுக்கான சிறப்பு தினங்கள் குறித்து என்னுடைய பரிந்துரைகள்<br />
<b><br /></b><br />
<b>காதலர் தினம் :</b> சங்க காலத்திலே, காதலன் இறந்துவிட்டான் என்று அறிந்ததும், தனது இன்னுயிரையும் இழந்து, இறந்தும் இறவாமல் ஒன்று சேர்ந்த காதலர்கள், அம்பிகாபதி – அமராவதி. அவர்கள் இறப்பிலே ஒன்று சேர்ந்த நாளையே காதலர் தினமாக அறிவிக்க வேண்டும்.<br />
<br />
<b>மகளிர் தினம் :</b> முதலாம் பராந்தக சோழன் காலத்திலே, நமது தமிழ் நாட்டு நங்கையொருத்தி, காட்டிலேயிருந்து வழி தவறி, கிராமத்துக்குள் புகுந்த கொடிய மிருகமான புலியை, முறத்தாலேயே அடித்து துரத்தி, தமிழர்களின் வீரத்தை பறை சாற்றினாள். அவள் புலியை துரத்திய தினத்தை தமிழ் சான்றோர்கள் கண்டறிந்து, இனிவரும் காலங்களில் தமிழக மக்கள், மகளிர் தினமாக அந்த நாளையே பிடிக்க வேண்டும்.<br />
<br />
<b>நண்பர்கள் தினம் :</b> பண்டைய தமிழகத்தில், நட்புக்கு இலக்கணமாக வாழ்ந்தவர்கள் கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார். தனது நண்பன் இறந்துவிட்டான் என்று அறிந்து வடக்கிருந்து உயிர் துறந்து நட்பின் பெருமையை நிலை நாட்டினார் பிசிராந்தையார் என்ற துறவி. இறப்பின் போதும் நட்பை மாண்பென மதித்து, இறவாப் புகழ் பெற்ற அவர்கள் உயிர் நீத்த நாளையே, தமிழினம் “ நண்பர்கள் தினமாக” கடைப்பிடிக்க வேண்டும்.<br />
<br />
<b>அன்னையர் தினம் :</b> அய்யன் வள்ளுவனின் வழி நின்று, பத்தினி தெய்வமாக, அவனுக்கு மனைவியாக வாழ்ந்து பெரும் புகழ் அடைந்தவள் தான் தாய் “வாசுகி அம்மையார்”. அவர் ஒருமுறை கிணற்றிலே நீரிறைத்துக் கொண்டிருக்கும் போது, அய்யன் அழைக்க, அம்மையார் கயிற்றை அப்படியே விட்டு விட்டு, அய்யனுக்கு பணிவிடை செய்ய ஓடி வந்தாராம். அவர் திரும்பி வரும் வரை, அந்த குடுவை, கீழே விழாமல் அப்படியே நின்று கொண்டிருந்தது என்று சிறு வயதிலே கதை கேட்டிருக்கிறேன். அந்த நாளை கண்டுபிடித்து, அன்னை வாசுகி அம்மையாரின் நினைவாக “அன்னையர் தினமாக” கொண்டாட வேண்டும். <br />
<br />
<b>தந்தையர் தினம் : </b>பசுவின் கன்றை மகன் தேரிலிட்டுக் கொன்று விட்டான் என்பதற்காகத் தன் மகனையே தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனு நீதி சோழன் புகழ் நிலைக்க, அவன் கொன்ற நாளை கண்டுபிடித்து, தந்தையர் தினமாக அறிவிக்க வேண்டும்.<br />
<br />
<b>மனைவியர் தினம் : </b> தமிழ் நாட்டில் கண்ணகியை தெரியாதவர்கள் இருக்க முடியுமா? கண்ணகி பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டுமா. ஏதாவது ஒரு நாளை அறிவித்து விடுங்கள் மனைவியர் தினமாக<br />
<br />
<b>முட்டாள்கள் தினம் :</b> தமிழக மக்களை பொறுத்த வரையில் தினம், தினம் தங்களின் கேள்வி பதில் அறிக்கையால் ஏமாறுகிறார்கள். இதற்கு தனியாக ஒரு தினம் வேண்டுமா என்ன?<br />
<br />
<b>பக்கத்து/எதிர் வீட்டுக்காரன் தினம், எதிரிகள் தினம்</b>, இன்னும் பல தினங்களையும் தாங்களே அறிவித்து, தமிழர்களை முன் மாதிரியாக இருக்க விடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்!<br />
<br />
இப்படி தமிழர்களுக்கென தனியாக தினங்களை அறிவித்தால், தமிழினத்தின் ஒப்பற்ற உயரிய தலைவர் என்று வரலாறு பேசும்.<br />
<br />
நீங்கள் தேர்வு செய்யும் தினங்களில் மே 18 வந்துவிடப் போகிறது ஜாக்கிரதை!<br />
<br />
இப்படிக்கு<br />
<b>உங்கள் குடும்ப மற்றும் தமிழின அரசியல்களால் ஏமாந்து கொண்டேயிருக்கும் தமிழன்</b><br />
<b><br /></b><br />
<b><br /></b>Santhappanசாந்தப்பன்http://www.blogger.com/profile/07148021073755708494noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-987851344844901124.post-78410727368110263032010-04-13T11:27:00.002+03:002010-04-13T11:37:22.361+03:00உலக கோப்பையை வென்றது இந்தியா!<div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;">
பஞ்சாப், லூதியானாவில் நடந்த கபடி உலக கோப்பையின் இறுதி ஆட்டத்தில், இந்திய அணி பாகிஸ்தான் அணியை 58-24 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.</div>
<div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;">
<br /></div>
<div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/_zOOY9Z7VJxA/S8QtKO7N4HI/AAAAAAAAD6c/AmlA3CxwiXw/s1600/Kabaadi_Logo.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="262" src="http://4.bp.blogspot.com/_zOOY9Z7VJxA/S8QtKO7N4HI/AAAAAAAAD6c/AmlA3CxwiXw/s320/Kabaadi_Logo.jpg" width="320" wt="true" /></a></div>
<div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;">
<br /></div>
<div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;">
இந்திய அணியின் தலைவர் மங்கத் சிங் மாங்கி சிறந்த தடுப்பாட்டக்காரர் விருதினைத் தட்டி சென்றார். அவருக்கு ஒரு டிராக்டர் (Tractor) பரிசாக வழங்கப்பட்டது. </div>
<br />
கனடா நாட்டு அணி, இத்தாலி அணியை 66-22 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி மூன்றாவது இடத்தை பிடித்தது. <br />
<br />
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஈரான் உட்பட 10 நாட்டு அணிகள் இந்த உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்றன. <br />
<br />
<br />
முதல் இடம் பிடித்த இந்திய அணிக்கு, இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு கோடிக்கான காசோலையும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த பாகிஸ்தான் அணிக்கு 51 லட்சமும், மூன்றாம் இடம் பிடித்த கனடா அணிக்கு 25 லட்சமும், நான்காம் இடம் பிடித்த இத்தாலி அணிக்கு 10 லட்சமும் வழங்கப்பட்டது.<br />
<br />
குருநானக் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியை காண, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில அரசின் உயர் தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், மற்றும் திரளான பொதுமக்கள்(!??!@#$) வந்திருந்தனர். <br />
<br />
இறுதி போட்டியை கண்டு களித்த பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், வெற்றி பெற்ற இந்திய அணி வீரர்களுக்கு, அரசு பணி வழங்கப் படும் என அறிவித்தார்.<br />
<br />
அடுத்த உலக கோப்பை போட்டிகள், மேம்படுத்தப்பட்ட விளையாட்டு அரங்கங்களில் நடத்தப் படும் என்றும் அவர் தெரிவித்தார்.<br />
<br />
பஞ்சாப் மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டான கபடியை மேம்படுத்த எல்லா நடவடிக்கைகளையும் அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து முயற்சி மேற்கொள்ளப் பட்டு வருவதாக துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல் தெரிவித்தார். இந்த ஆண்டின் இறுதியில் எட்டு நாடுகள் பங்கு பெறும் பஞ்சாப் தங்க கோப்பை ஹாக்கி போட்டிகள் நடத்தப் படும் என்றும் அவர் தெரிவித்தார்.<br />
<br />
வெற்றி பெற்ற இந்திய அணிக்கும், பாரம்பரிய விளையாட்டை ஊக்குவித்து, உலக கோப்பையை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய பஞ்சாப் மாநில அரசுக்கும் பாராட்டுக்கள்!<br />
<br />
<span style="background-color: yellow;">"மறத் தமிழரின் வீர விளையாட்டு சடுகுடு. கபடி என்ற சொல்லே, கை-பிடி என்பதன் மூலம்தான்" என "விக்கி" கூறுகிறது. ஹாக்கி, கபடி, பாரம்பரிய கிரிக்கெட் என எதுவாகிலும் சர்தார்ஜிக்கள் முன்னிலையில் இருக்கின்றனர். நாம் சர்தார்ஜி ஜோக்குகளை பரிமாறிக் கொள்வதில் முதலில் இருக்கிறோம்!</span><br />
<br />
<br />Santhappanசாந்தப்பன்http://www.blogger.com/profile/07148021073755708494noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-987851344844901124.post-87533061506988143142010-04-12T00:05:00.003+03:002010-04-13T11:50:07.281+03:00கபடி….கபடி….<br />
எல்லாருக்கும் வணக்கமுங்க! <br />
<br />
ரொம்ப நாளாகி விட்டது, பதிவுலகம் பக்கம் வந்து! நேரமில்லை என்றெல்லாம் பொய் சொல்ல விரும்பவில்லை. எழுதுவதற்க்கு மனம் வரவில்லை. எது நடந்தாலும், அடுத்த சில மணி நேரங்களில், 100 பதிவுகளைக் காணமுடிகிறது. புதிய படம் வெளிவந்த சில மணி நேரங்களில், அதன் திரைப் பார்வைகள் Tamilish மற்றும் தமிழ் மணத்தின் முதல் பக்கங்களை நிரப்பி விடுகிறது. வலைப் பதிவர்களின் வேகம் வியக்க வைத்தாலும், ஊடகங்கள்தான் பரபரப்புக்காக, வியாபாரத்திற்க்காக செய்திகளை வெளியிடுகின்றன. வலைப் பதிவர்களும் அந்த பாதையில் செல்வது வருத்தமாக உள்ளது. அதில் ஒரு கடைக் கோடியில் இருப்பதை நினைத்து பெருமையாக இருக்கிறது. <br />
<br />
ஒட்டு மொத்த இந்தியாவே, IPL என்னும் பேஸ்பால் (BaseBall) விளையாட்டில் தங்கள் சுக துக்கங்களை மறந்துவிட்டு, கிறங்கி கிடக்கிறது. ஒரு வழியாக வெளி நாட்டினர், இந்தியா வந்து வேலை தேடும் சூழலை உருவாக்கி விட்டோம். வல்லரசாகி விட்டோம் என்று பெருமைப் பட்டுக்கொண்டு, பாரம்பரிய விளையாட்டுக்களை தொலைத்து விட்டோம். மாவோஸ்டுகளின் கொடூர தாக்குதல்களைக் கூட ஐபில் போட்டிகள் முழுங்கி விட்டதுவோ என்று எனக்கு சந்தேகம்! <br />
<br />
<a href="http://en.wikipedia.org/wiki/Kabaddi" target="_blank">கபடி</a> (தூய தமிழில் ”<a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81" target="_blank">சடுகுடு</a>”) என்று ஒரு விளையாட்டு நினைவிருக்கிறதா? நல்ல வேளையாக விஜய் ஒரு படம் நடித்து, இன்றைய பள்ளி குழந்தைகளுக்கு நினைவூட்டினார். இன்றைய கிராமங்களில் கூட இது இருக்கிறதா என்று தெரியவில்லை. இதற்கு உலக கோப்பை நடந்துக் கொண்டிருக்கிறது, அதுவும் நமது இந்தியாவில். இன்றைய தினம் (12-ஏப்ரல்-2010) கபடிக்கான உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில், இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. <br />
<br />
IPL-போட்டிகளினால் மிகவும் வலிமைவாய்ந்த திரைஉலகமே ஆடிப் போயிருக்கும் நிலையில், கபடிப் போட்டிகள் எம்மாத்திரம். எந்த ஊடகமும் இது பற்றிய செய்தி்களை ஒளிபரப்பியதாக தெரியவில்லை. கூகிளாண்டவர் கூட மிக குறைவான தகவல்களையே தருகிறார். சரி விஷயத்திற்க்கு வருவோம்.<br />
<br />
<br />
<a href="http://lh5.ggpht.com/_zOOY9Z7VJxA/S8I5XYsVjKI/AAAAAAAAD6M/zGLLXZAqNgE/s1600-h/logo_WCCS%5B3%5D.jpg"><img alt="logo_WCCS" border="0" height="202" src="http://lh6.ggpht.com/_zOOY9Z7VJxA/S8I5aBdjWwI/AAAAAAAAD6Q/ULNa1MYyzLs/logo_WCCS_thumb%5B1%5D.jpg?imgmax=800" style="border-bottom: 0px; border-left: 0px; border-right: 0px; border-top: 0px; display: block; float: none; margin-left: auto; margin-right: auto;" title="logo_WCCS" width="244" /></a> <br />
கபடி உலக கோப்பை, பஞ்சாப் மாநில அரசு உதவியுடன், பஞ்சாப்பின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 10 நாடுகளின் அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், இந்தியா முதல் பிரிவில் (”A” Group) முதலிடத்தையும், பாகிஸ்தான் இரண்டாவது பிரிவில் (”B” Group) முதலிடத்தையும் பிடித்து திங்கள் மாலை லூதியானாவில் இறுதிப் போட்டியில் சந்திக்கின்றன. <br />
<br />
முதல் பரிசை வெல்லும் அணிக்கு ஒரு கோடி இந்திய ரூபாய்கள் பரிசாம். <br />
கபடி என்பது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்று கூறுவார்கள். ஆனால் தமிழ் கலாசாரக் காவலர்கள் என்றுக் கூறிக் கொள்பவர்களுக்கு இது பற்றியெல்லாம் தெரியுமா? நாம் நாள் தோறும் எள்ளி நகையாடும் சர்தார்ஜிக்கள், ஹாக்கியிலும், கபடியிலும் சிறந்து விளங்கி நமது பெருமையை நிலை நாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அணி வீரர்கள் பற்றிய எந்த ஒரு தகவலையும் தெரிந்து கொள்ள முடியவில்லை. யாருக்காவது தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். இறுதிப் போட்டி, இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு, DD Sports Chennal-ல் ஒளிபரப்புகிறார்கள்.<br />
<br />
<a href="http://lh3.ggpht.com/_zOOY9Z7VJxA/S8I5enVO4NI/AAAAAAAAD6U/B8NKdByomuU/s1600-h/Kabaadi%5B5%5D.jpg"><img alt="Kabaadi" border="0" height="199" src="http://lh4.ggpht.com/_zOOY9Z7VJxA/S8I5iok7RuI/AAAAAAAAD6Y/0X6gKrCf4Fs/Kabaadi_thumb%5B3%5D.jpg?imgmax=800" style="border-bottom: 0px; border-left: 0px; border-right: 0px; border-top: 0px; display: block; float: none; margin-left: auto; margin-right: auto;" title="Kabaadi" width="336" /></a><br />
<br />
முடிந்தால் இதையும் தான் பாருங்களேன்!!<br />
<br />
கபடி மற்றும் உலகக் கோப்பை பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள, <a href="http://www.kabaddi.org/">http://www.kabaddi.org/</a><br />
<br />
கபடிக்கான ட்வீட்டர்(Twitter) பக்கம், <a href="http://twitter.com/kabaddiorg">http://twitter.com/kabaddiorg</a><br />
<br />Santhappanசாந்தப்பன்http://www.blogger.com/profile/07148021073755708494noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-987851344844901124.post-24429606540460825022010-02-01T18:45:00.003+03:002010-02-01T20:52:50.861+03:00இழந்த பெருமையை மீட்பது சாத்தியமே!<div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;">
<br />
<span style="color: #20124d;">"எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சனை?" என்று பலர் புலம்புவதை கேட்டிருக்கலாம். இவ்வாறு புலம்புபவர்கள், தனக்கு பிரச்சனை என்பதை விட, தன்னைப் போல உள்ள, ஆனால் "பிரச்சனை" இல்லாத மற்றொருவரை ஒப்பிடுகிறார் என்று நாம் புரிந்து கொள்ளலாம். இந்திய ஹாக்கிக்கு உயிர் இருந்தால் இப்படித்தான் புலம்பும்.</span></div>
<div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;">
<span style="color: #20124d;"></span></div>
<br />
<div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;">
<a href="http://2.bp.blogspot.com/_zOOY9Z7VJxA/S2b0VMuRgcI/AAAAAAAADsg/ANeNmRQq7L8/s1600-h/IndianHockeyMens.JPG" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><span style="color: #20124d;"><img border="0" kt="true" src="http://2.bp.blogspot.com/_zOOY9Z7VJxA/S2b0VMuRgcI/AAAAAAAADsg/ANeNmRQq7L8/s320/IndianHockeyMens.JPG" /></span></a><span style="color: #20124d;">ஒரு விளையாட்டுத் தொடரில் பங்கேற்க்கும் ஒவ்வொரு அணியும் நாங்கள் தான் வெல்வோம் என்று சொல்லியே களமிறங்கும். ஆனால் இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளரோ, உலக கோப்பையில் ஐந்தாவது இடம் பெற முயற்சிப்போம் என்று பகிரங்கமாக சொல்கிறார். இப்போது புரிந்திருக்குமே, இந்திய ஹாக்கியின் நிலை. அடுத்தடுத்து பல சோதனைகளை சந்தித்து, அவசர சிகிச்சைப் பிரிவில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது, இந்தியாவின் தேசிய விளையாட்டு. </span><br />
<a name='more'></a></div>
<span style="color: #20124d;"><br /></span><br />
<span style="color: #20124d;">2008-ம் ஆண்டு, இந்திய ஹாக்கியை பிடித்தது சனி. 8 முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அணி, தொடர்ச்சியாக 24 போட்டிகளில் 178 கோல்களை அடித்து வெற்றி பெற்ற, யாராலும் வெல்ல முடியாத வரலாற்று சாதனைகளை கொண்ட இந்திய ஆடவர் ஹாக்கி அணி, முதல் முறையாக பெய்ஜிங் ஒலிம்பிக்கிற்க்கு தகுதி இழந்தது 2008ம் ஆண்டில். </span><br />
<br />
<span style="color: #20124d;">இந்த சோகம் அடங்குவதற்க்குள், அஸ்லான் ஷா ஹாக்கிப் போட்டியில் பங்கு பெறும் அணியில் இடம் பிடிக்க டெல்லி வீரரிடமிருந்து லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்ட பட்டார் அப்போதய இந்திய ஹாக்கி சம்மேளன செயலாளர் ஜோதிகுமரன். </span><br />
<span style="color: #20124d;"><br /></span><br />
<span style="color: #20124d;">அப்போதய இந்திய ஹாக்கி சம்மேளன தலைவர் கில், 14 ஆண்டுகளாக சர்வாதிகாரம் செய்தார், விளையாட்டை மேம்படுத்த அக்கறை காட்ட வில்லை என்று ஹாக்கி உலகமும், ஊடகங்களும் குற்றம் சாட்ட, இந்திய ஒலிம்பிக் சங்கம், ஹாக்கி சம்மேளனத்தை கலைத்து, ஒலிம்பிக் வீரர்கள் 5 பேரை இந்திய ஹாக்கியை நிர்வகிக்க நியமித்தது. அதோடு விடவில்லை, சனியின் விளையாட்டு.....</span> <br />
<span style="color: #20124d;"><br /></span><br />
<span style="color: #20124d;">1927 முதல் இந்திய ஹாக்கி சம்மேளனம், உலக ஹாக்கி சம்மேளனத்தில் ஒரு உறுப்பினராக இருந்து வருகிறது. திடீரென்று சம்மேளனம் கலைக்கப்பட்டதால், உலகக் கோப்பை போட்டிகளை நடத்த முறையான அமைப்பை நிறுவ வேண்டும் என்று உலக ஹாக்கி சம்மேளனம் நிபந்தனை விதித்தது. உடனே, அரக்க பரக்க "ஹாக்கி இந்தியா" என்ற ஒன்றை, இந்திய ஒலிம்பிக் கழகம் உருவாக்கியது.</span> <br />
<span style="color: #20124d;"><br /></span><br />
<span style="color: #20124d;">2009-ல், ஆசிய கோப்பை போட்டியில் 5வது இடம் பிடித்து அடுத்த அதிர்ச்சியை கொடுத்தது இந்திய ஆடவர் ஹாக்கி. இங்கிலாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து தொடர்களில், மிக மோசமாக தோற்றாலும், அஸ்லான் ஷா கோப்பையை வென்று மானம் காத்தது. மகளீர் ஹாக்கியிலும் பெரிதாக ஒன்றும் சாதிக்க வில்லை. </span><br />
<br />
<span style="color: #20124d;">1980-வரை ஹாக்கி என்றாலே, இந்தியாதான் என்று இருந்த நிலை மாறியதற்க்கு யார் காரணம்? நாமெல்லாம், உடனே அரசியல் புதுந்துடுச்சுங்க என்று ஒரு காரணத்தை சொல்லிவிட்டு, வேறு வேலை பார்க்க சென்று விடுவோம். அது மட்டும் காரணமில்லை. இந்தியர்களுக்கு, நாம்தான் பாரம்பரியமானவர்கள் என்ற கர்வம் நிறையவே உண்டு. அதன் பலன் தான் இந்திய ஹாக்கியின் இந்த நிலை.</span> <br />
<br />
<span style="color: #20124d;">இந்திய ஹாக்கியின் இந்த நிலை பற்றி தெரிந்து கொள்ள, 30 ஆண்டுகள் பின்னோக்கி சொல்வோம். உலக ஹாக்கியில் புகுத்தப் பட்ட புதிய விதிமுறைகளை, இந்திய வீரர்களால் பழக்கிக் கொள்ள முடியவில்லை. ஐரோப்பிய அணிகள் உலக ஹாக்கியில் கோலொச்சுவதற்க்கு முக்கிய காரணமாக முதலில் சொல்லப் படுவது "ஆஃப் சைட்" எனப்படும் விதிமுறையை (கால்பந்தாட்டத்தில் இன்றும் உள்ளது) நீக்கியது தான். புதிய விதிமுறையின் படி கோல் போஸ்டிற்க்கு அருகில் சென்று, மற்றொருவர் பந்தைப் பெற்று கோல் அடிக்கலாம். இதை ஐரோப்பிய மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் எளிதாக கற்றுக்கொண்டன. பாரம்பரிய விளையாட்டில் திறன் மிகுந்த இந்தைய துணைக் கண்டத்தினரால் புதிய விதிமுறைகளை கற்றுக் கொள்ள பல ஆண்டுகள் ஆகின என்ற குற்றச்சாட்டு பரவலாக சொல்லப் படுகிறது. </span><br />
<span style="color: #20124d;"><br /></span><br />
<span style="color: #20124d;">உலக ஹாக்கியில் புகுத்தப் பட்ட பல புதிய விதிமுறைகளை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் தரப்பில் பெரிதாக எதிர்ப்பு காட்டப் படவில்லை என்று முன்னாள் வீரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</span> <br />
<span style="color: #20124d;"><br /></span><br />
<span style="color: #20124d;">எழுபதுகளுக்குப் பிறகு, உலக ஹாக்கி அரங்கில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெற்றிகளை குவிக்க முடியாமல் போனதற்க்கு மற்றுமொரு காரணம், ஆஸ்ட்ரோ டர்ஃப் (Astro Turf) என்றழைக்கப்படும் செயற்கை புல் களம். இதற்கு இந்திய விளையாட்டுத் துறையும், இந்திய ஒலிம்பிக் கழகமுமே பொறுப்பேற்க்க வேண்டும். </span><br />
<span style="color: #20124d;"><br /></span><br />
<span style="color: #20124d;">1980-களில் ஹாக்கி போட்டிகளில் அறிமுகப் படுத்தப் பட்ட செயற்கை புல் தளங்கள், இந்திய ஹாக்கி வீரர்களுக்கு பெரும் பின்னடைவை கொடுத்தன. ஒலிம்பிக் தகுதிச் சுற்று இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்த இங்கிலாந்தில் உள்ள செயற்கை புல் ஆடுகளங்களின் எண்ணிக்கை சுமார் 600. ஆனால் இந்தியாவில் இன்றைய தேதிக்கு 20 மட்டுமே. தமிழகத்தில் 3 மட்டுமே. </span><br />
<span style="color: #20124d;"><br /></span><br />
<span style="color: #20124d;">வேக பந்து மைதானங்களில் பயிற்சி பெறாத இந்திய கிரிக்கெட் வீரர்கள், வெளி நாடுகளில் மண்ணை கவ்வுவது மாதிரி, ஹாக்கியிலும் இந்தியா சொதப்பியது. </span><br />
<span style="color: #20124d;"><br /></span><br />
<span style="color: #20124d;">வீரர்களுக்கு சம்பளம் கொடுக்கவே வழியில்லை, இதில் மைதானங்கள் எங்கு அமைப்பது?</span> <br />
<span style="color: #20124d;"><br /></span><br />
<span style="color: #20124d;">ஐபில் போட்டிகளுக்காக, வெளிநாட்டு வீரர்களை பல கோடி வாரி கொடுத்து அழைத்து வரும் ஒரு நாட்டில், ஹாக்கி வீரர்களுக்கு சில லட்சங்களை கொடுக்க முடியவில்லை. தங்களுக்குத் தேவையான அடிப்படை உரிமைகளை பெற போராட்டம் செய்யும் ஏழ்மை நிலைக்கு தள்ளப் பட்டுள்ளார்கள் தேசிய விளையாட்டின் வீரர்கள். எவ்வளவு பெரிய அவமானம்? </span><br />
<span style="color: #20124d;"><br /></span><br />
<span style="color: #20124d;">ஷாருக்கான், ஹாக்கி அணி வீரர்களின் நிலை குறித்து வருத்தம் தெரிவிக்கிறார். அடுத்த சில தினங்களில், ஐபில் ஏலத்திற்க்காக கோடிகளை கொடுத்து வீரர்களை வாங்குகிறார். ஏனென்றால் அது வியாபாரமல்லவா?</span> <br />
<span style="color: #20124d;">மைதானங்கள் அமைக்க அரசு முயற்சி எடுக்க வில்லை, அரசியல் புகுந்து விளையாடுகிறது என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். நாம் என்ன செய்து விட்டோம்? </span><br />
<br />
<span style="color: #20124d;">இந்திய கிரிக்கெட் அணி எத்தனை முறை ஆஸ்திரேலியாவிடம் தோற்றாலும், கிரிக்கெட் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்? கிரிக்கெட்டில் சூதாட்டம் வந்து விட்டது என்பதற்க்காக கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தி விட்டோமா? </span><span style="color: #20124d;">தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இடம் பெறும் புதுமுக வீரர் பத்ரிநாத்தை தெரிந்து வைத்துக் கொண்டிருக்கும் நம்மால், உலக கோப்பை ஹாக்கி அணியில் இடம் பெறும் வீரர்கள் 5 பேரின் பெயரை சொல்ல முடியுமா? குறைந்தது கேப்டன் பெயரையாவது தெரிந்து வைத்து கொண்டிருக்கிறோமா? தன்ராஜ் பிள்ளை என்ற ஒரு தலைசிறந்த ஹாக்கி வீரனை, விமான நிலையத்தில் அழவிட்டதில் நமக்கும் பங்கு உண்டல்லவா?</span> <br />
<span style="color: #20124d;"><br /></span><br />
<span style="color: #20124d;">டெஸ்ட் கிரிக்கெட்டின் பிதாமகன் டான் பிராட்மேன், கால் பந்தாட்டத்தின் பிதாமகன் பீலே ஆகியோரைத் தெரிந்து வைத்திருக்கும் நம்மில் பல பேருக்குத் தெரியாதது, பாரம்பரிய <strong>“<a href="http://en.wikipedia.org/wiki/Dhyan_Chand" target="_blank">ஹாக்கியின் பிதாமகன் தயான் சந்த்</a></strong></span><span style="color: #20124d;"><strong></strong></span><span style="color: #20124d;">" எனப்படும் ஒரு இந்திய ஹாக்கி வீரன்.</span> <br />
<span style="color: #20124d;"><br /></span><br />
<span style="color: #20124d;">உலக கோப்பை என்றவுடன், நிறைய பேருக்கு 2011-ல் நடைபெற இருக்கும் கிரிக்கெட் உலக கோப்பைதான் நினைவுக்கு வரும். இந்த மாதம் ஹாக்கி உலக கோப்பை டெல்லியில் நடைபெறவிருக்கிறது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்காது. ஊடகங்களும் கிரிக்கெட் செய்திகளைத் தான் பெரிதாக சொல்வார்கள். </span><br />
<span style="color: #20124d;"><br /></span><br />
<span style="color: #20124d;">ஹாக்கி விளையாட்டு பரவாமல் அல்லது இரசிக்கப் படாமல் போனதற்க்கு எல்லோரும் சொல்லும் காரணம், நிகழ் காலத்தில் ஹாக்கியில் இந்தியா பெரியதொரு வெற்றியைப் பெற வில்லை. </span><br />
<span style="color: #20124d;"><br /></span><br />
<span style="color: #20124d;">1983க்குப் பிறகு கிரிக்கெட்டிலும் இந்தியா சர்வதேசப் போட்டியில் வெற்றி பெறவில்லை. இரண்டு நாடுகள் போட்டி, மூன்று நாடுகள் போட்டி பலவற்றிலும், இந்திய ஹாக்கி அணி வெற்றி பெற்று இருந்தும், தங்கள் வியாபாரத்தை பெருக்கிக் கொள்ள ஊடகங்களும், தனியார் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு கிரிக்கெட்டை விளம்பரப் படுத்தி, ஹாக்கியை மக்கள் மனத்திலிருந்து வெளியெற்றி விட்டார்கள்.</span> <br />
<span style="color: #20124d;"><br /></span><br />
<span style="color: #20124d;">குறைந்த நேரத்தில், சுவாரசியம் மிக்க போட்டிகள் என அறிமுகப் படுத்தப் பட்ட 20-20 போட்டிகளை விட, ஹாக்கி விளையாட்டின் நேரம் குறைவுதான். மூன்று மணி நேரம் “Chak De India” திரைப் படத்தை ரசித்த நம்மால், அதே மூன்று மணி நேரம் ஒரு ஹாக்கிப் போட்டியை பார்க்க முடிவதில்லை. இன்றைய இணைய உலகில் ஒரு விளையாட்டைப் பற்றியும், விளையாட்டு விதிமுறைகளையும் தெரிந்து கொள்வது மிகவும் சுலபம். இருந்தும் நாம் யாரும் அதைப் பற்றி யோசிப்பதில்லை.</span> <br />
<span style="color: #20124d;"><br /></span><br />
<span style="color: #20124d;">ஆகவே நண்பர்களே, இன்றே நமது தேசிய விளையாட்டைப் பற்றி தெரிந்து கொள்வோம். பார்வையாளர்களும், ஹாக்கி ரசிகர்களும் அதிகமாகும் போது, விளம்பரதாரர் நிறுவனங்களும், ஊடகங்களும் ஹாக்கியை கொண்டாட முன்வரும். </span><br />
<br />
<span style="color: #20124d;">இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெறுகிறதோ இல்லையோ, வீரர்க்ளை உற்சாகப் படுத்துவோம். ஹாக்கி உலகில், இந்தியாவின் இழந்த பெருமையை மீட்பது சாத்தியமே!</span> <br />
<br />
ஜெய்ஹிந்த்! <br />
<br />
<span style="color: #674ea7;">டிஸ்கி 1 : ஆகஸ்ட் 29, இந்தியாவின் <strong>தேசிய விளையாட்டு தினம்</strong>. அன்று தான் அர்ஜீனா மற்றும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா போன்ற விளையாட்டுத் துறையின் உயர்ந்த விருதுகள், குடியரசுத் தலைவர் மாளிகையில் வழங்கப்படும். அந்த நாள், இந்தியாவின் தேசிய விளையாட்டு தினமாக அறிவிக்கப் பட்டதற்க்குக் காரணம் "ஹாக்கியின் பிதாமகன்" என்று ஹாக்கி உலகினரால் கொண்டாடப் படும் <strong>தயான் சந்த்</strong> பிறந்த தினம்.</span> <br />
<span style="color: #674ea7;"></span><br />
<span style="color: #674ea7;">டிஸ்கி 2 : இந்தப் பதிவு, கிரிக்கெட்டை குறைத்து மதிப்பிட அல்ல. தொலைந்துப் போன விளையாட்டை மீட்டேடுக்கவே.</span> <br />
<br />Santhappanசாந்தப்பன்http://www.blogger.com/profile/07148021073755708494noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-987851344844901124.post-79961312637176455162010-01-10T21:28:00.002+03:002010-01-11T14:56:50.761+03:00இலவசங்கள் : இல்லாத ஊருக்கு போகும் பாதை : உரத்த சிந்தனை<strong>கட்டுரையாளர் : என்.முருகன், சமூகவியலாளர், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி</strong><br />
<br />
தமிழக அரசின் 2010ம் ஆண்டுக்கான கவர்னர் உரையில், இலவசங்கள் அள்ளித் தெளிக்கப்பட்டதை அகில இந்தியாவும் ஆச்சரியமும், கிண்டலும் கலந்த உணர்வுடன் கவனித்து, கருத்துக்களை வெளியிட்டுள்ளது. பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்று, "தமிழக அரசின் நல்வாழ்வுத் திட்டம் எனும் போர்வையிலான இலவசங்கள், ஒரு கடிதம் அதன் உறையை விட பெரிதான தாளில் எழுதப்பட்டு, அந்த உறையினுள் திணிக்க முடியாத அளவு உள்ளது' என கிண்டலடித்துள்ளது. அதாவது, பட்ஜெட்டில் பணம் இருக்காது எனக் கூறுகிறது இந்தப் பத்திரிகை.<br />
<a name='more'></a><br />
பொருளாதார நிபுணர்களும், சமூக, அரசியல் ஆய்வாளர்களும், "ஓட்டு வங்கி அரசியலின் உச்சக்கட்டம்' என, இந்த இலவசங்களை குறிப்பிட்டு, தங்கள் கவலையை வெளிப்படுத்துகின்றனர். மத்திய அரசின் 2001ம் ஆண்டு கணக்குப்படி, தமிழகத்தில் 36 லட்சத்து 32 ஆயிரத்து 119 குடும்பங்கள் தான் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவை. ஆனால், ஜூன் 16, 2008 கணக்குப்படி, தமிழக அரசு, 59 லட்சத்து 55 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச, "டிவி' அனுமதித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கப் பட்டு, ஏழைகள் மட்டுமின்றி, கலர் "டிவி' இல்லாத எல்லாருக்கும் இலவச, "டிவி'க்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்து விட்டனர். தி.மு.க., ஆட்சிக் காலங்களில் அளிக்கப்பட்ட அதிகமான சம்பளம் மற்றும் சலுகைகள் விளைவாக தமிழக அரசின் துண்டு விழும் பட்ஜெட்டில் கணிசமான பகுதி, அரசு ஊழியர் சம்பளம் சார்ந்த செலவுகள். அதாவது, 2008-09ம் ஆண்டுக்கான இறுதி பட்ஜெட் மொத்த செலவினம் 55,402 கோடியே 56 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய். இதில், 24 ஆயிரத்து 358 கோடி ரூபாய், அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் பல அரசு திட்டங்களில் பணிபுரிபவர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் சார்ந்த செலவினங்கள். இது, பட்ஜெட்டில் 52 சதவீதம். உலகின் எந்த பணக்கார, நடுத்தர நாடுகளிலும் பட்ஜெட்டில் இவ்வளவு சதவீதம் ஊழியர் செலவினங்களுக்கு ஆவதில்லை.<br />
<br />
இந்த முறை ஆட்சியமைக்கப்பட்டு, 44 மாதங்களில் தி.மு.க., அரசு அள்ளித் தெளித்த இலவசங்கள், சலுகைகள் அதிகமாகி, நமது பட்ஜெட்டில் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிகோலும் கட்டமைப்பு வசதிகளுக்குத் தேவையான நிதி, அறவே அற்றுப் போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கடன் தள்ளுபடிகள், குறிப்பாக தொழில் தொடங்க வாங்கப்படும் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவது, அடுத்து கடன் பெறுபவர்கள் யாரும் கடனை திருப்பிச் செலுத்தாத மனநிலையை உருவாக்கும். இந்த அடிப்படை உண்மையை அரசு அதிகாரிகள் பல முறை அரசியல் தலைவர்களுக்கு, குறிப்பாக முதல்வர்களுக்கு எடுத்துக் கூறியிருக்கின்றனர். உயர் அதிகாரிகள் பலரும் முதல்வரின் கவனத்தைக் கவர, போட்டி போட்டு இலவசம் மற்றும் நடைமுறைக்கு ஒவ்வாத பல செலவினங்களை உருவாக்கி, நமது மாநில பொருளாதாரத்தை பாழடித்து விட்டனர்.<br />
<br />
தமிழக அரசு தனது பட்ஜெட்டை, துண்டு விழாத வகையில் திட்டமிடல் வேண்டும். அரசு கடனுக்கு வட்டியாக, கடந்த ஆண்டு 6,227 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. கடன் தொகை 71 ஆயிரத்து 668 கோடி ரூபாயை தாண்டிவிட்டது. மக்களுக்கு பொது நன்மைகளும், பின்வரும் சந்ததியினருக்கு வளமான வாழ்க்கைத் தரமும் உருவாக, ஏழைகள் நிறைந்த ஒரு நாட்டில் இரண்டு துறைகள் சிறப்பாக கவனிக்கப்பட வேண்டும். அவை, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள். கல்வியில் சமச்சீர் எனும் திட்டத்தை தவறாக புரிந்து கொண்டு, கல்வியின் தரத்தை உயர்த்தாமல், எல்லா பாடத் திட்டங்களையும் சரிசமமாக்கி, தரமான கல்வியை அழித்தொழிக்கும் நடைமுறைகள் ஆரம்பமாகியுள்ளன.<br />
சுகாதாரத்தைப் பொறுத்தவரை, அரசு மருத்துவமனைகள் மற்றும் அடித்தட்டு கிராம சுகாதார மையங்களை வலுப்படுத்தாமல், தனியார் மருத்துவமனைகளை வளப்படுத்தும் காப்பீட்டுத் திட்டத்தை அரசு ஊக்கப்படுத்துகிறது. கிராமப்புறங்களில் 2001ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் படி, 21 லட்சம் வீடுகள், "தற்காலம்' என பெயரிடப்படுகின்றனவாம். அவை கூரை மற்றும் மண் சுவர்களால் ஆன வீடுகளாம். அவற்றை நிலையான குடியிருப்புகளாக ஆறு வருடங்களில் மாற்றப் போவதாக, "கலைஞர் வீட்டு வசதி திட்டம்' அறிவிக்கிறது. இத்திட்டத்தில் ஒரு கூரை வீட்டிற்கு 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்; கான்ட்ராக்ட் கிடையாது; வீட்டின் சொந்தக்காரரே தனது வீட்டை கான்கிரீட் வீடாகக் கட்டிக்கொள்ள இத் தொகை வழங்கப்படுமாம். நடைமுறைக்கு ஒத்துவராத ஏட்டுச் சுரைக்காய் திட்டம் இது என்பதற்கு, இதை விட சிறந்த காரணம் கிடையாது. மத்திய அரசின் திட்டமான இந்திரா காந்தி குடியிருப்புத் திட்டத்தை பின்பற்றி இத்திட்டம் அமைக்கப்படுகிறது என்பதால், கட்டுமானப் பொருட்களை அரசின் ஊராட்சி அதிகாரிகள் வாங்கி, கூரை வீட்டு ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்ட அளிப்பார்களாம். இப்பொருட்கள் வாங்க கமிஷன் உண்டல்லவா?<br />
அடுத்து பயனாளிகள் தேர்வு, ஓட்டு வங்கி முறையை பின்பற்றி அடிமட்ட கட்சித் தொண்டர்களால் நடத்தப்படுமா எனும் கேள்வி எழுகிறது. சமத்துவபுரம், காஸ் அடுப்புகள், கலர் "டிவி' வினியோகம் தந்த அனுபவப்படி, கீழ்மட்ட கட்சியினர் தயாரித்த பட்டியல்படி பயனாளிகள் தேர்வு இருக்கும் என, இப்போதே கிராமத்து மக்கள் முணுமுணுக்கின்றனர். எல்லாவற்றையும் விட, மூன்று ஆண்டுகளில் நடந்த இலவசங்களினாலான செலவுகள், நமது பொருளாதாரத்தை வெகுவாக பாதித்துள்ளதை மத்திய அரசு இந்த மாதம் வெளியிட்டுள்ள, "ஸ்டேட் டொமஸ்டிக் ப்ராடக்ட்' எனும் மாநில பொருளாதார வளர்ச்சி குறியீடு வெளிப்படுத்துகிறது. <br />
<br />
இதற்கு முழுப் பொறுப்பும், வளர்ச்சித் திட்டங்களை வகுக்காமல், ஓட்டு வங்கி அரசியலுக்காக இலவசங்களை அள்ளித் தெளிக்கும் மாநில அரசே! இது பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல், வரும் நிதி ஆண்டில் 1,800 கோடி ரூபாயில் இலவச கான்கிரீட் வீடுகள், 400 கோடியில் நவீன சட்டசபை வளாகம், புதிய நூலகம் போன்றவற்றை உருவாக்குகின்றனர். "இப்படி நிறைய செலவுகளை செய்த பின்னர், அவைகள் சரியாக நடக்கின்றனவா என்பதை பற்றி விவாதித்து, குறைகளை திருத்துவதற்காகத்தான், மக்களுக்காக மக்கள் பணத்தில் இந்த நவீன சட்டசபை வளாகம் அமைக்கப்படுகிறது' என, ஜால்சாப்பு வேறு. கிராமப்புறங்களில் திட்டங்கள் நிறைவேறுவதை கிராமப்புறங்களில் நேரடியாக தணிக்கை செய்யாமல், சென்னையில் பளபளக்கும் நவீன அடுக்கு மாடிக் கட்டடங்களில் விவாதித்து மேற்பார்வையிடுவார்களாம். வாழ்க ஓட்டு வங்கி அரசியல்!<br />
<br />
<strong>கட்டுரையாளர் : என்.முருகன், சமூகவியலாளர், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி</strong><br />
<br />
<strong>ஜனவரி 10, 2010 அன்று "தினமலர்" இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை. </strong><br />Santhappanசாந்தப்பன்http://www.blogger.com/profile/07148021073755708494noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-987851344844901124.post-18365393441094998312009-12-23T02:15:00.004+03:002009-12-23T11:46:28.460+03:00கேட்டதில் பிடித்ததுகுழந்தைகளை, அவர்கள் செய்யும் குறும்புகளை இரசிக்காதவர்கள் இருக்க முடியுமா என்ன? <br />
<br />
நமது வீடுகளில் இருக்கும் குழந்தைகளின் சேட்டைகளை பற்றி எவ்வளவு பெருமையாக சொல்லிக் கொள்வோம். குட்டிச் சாத்தான்கள், வாலுகள் என்று அடைமொழியிட்டு அழைப்பதிலும், பிறரிடத்தில் அதைப் பறைசாற்றிக் கொள்வதிலும் ஒரு பெருமை. <br />
<br />
குழந்தை பிறந்ததிலிருந்து ஒவ்வொரு அசைவிற்க்கும் ஒரு அர்த்தம் சொல்லி, குழந்தை ரொம்ப சூட்டிகை இல்ல என்று சொல்லிக் கொள்வதில், வீட்டிலுள்ள பெரிசுகளுக்கு அலாதி ஆனந்தம். குழந்தைகள் நடக்க ஆரம்பித்து விட்டால் போதும் அவ்வளவுதான், அவர்களின் ஒட்டத்தை யாராலும் தடுக்க முடியாது. ஒரு பொம்மையை, ஒன்றிரண்டு நாட்களுக்கு மேல் உடையாமல் வைத்திருந்தால் பெரிய அதிசயம்.<br />
<br />
<br />
<a name='more'></a><br />
அவர்கள் எவ்வளவுதான் சேட்டை செய்தாலும், யாராவது ஒருவர் கண்டிக்கும் போது, "அவன் குழந்தைதானே அவனுக்கு என்ன தெரியும்" என்று மற்றொருவர் செல்லம் கொடுப்பார்கள். <br />
<br />
கடவுளைப் போல, குழந்தையின் ஒவ்வொரு செயலும் நமக்கு எல்லையில்லாத மகிழ்ச்சியைத் தருவதால், குழந்தைகளை கடவுளுக்கு நிகராக ஒப்பிடுவார்கள். அந்த கடவுளே குழந்தையாக வந்தால் எவ்வளவு மகிழ்ச்சி இருக்கும்? <br />
<br />
கடவுளே குழந்தையாக வந்ததால் கடவுள்தானே குழந்தையாக வந்திருக்கிறார், அவர் சேட்டை எதுவும் செய்ய மாட்டார்னு சொல்ல முடியுமா என்ன? அகில உலகங்களுக்கும் ஆதர்ச நாயகனான கடவுளை, அவர் செய்யும் குறும்புகளுக்காக கண்டிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தால்? கற்பனை செய்தாலே மனம் துள்ளிக் குதிக்கிறது அல்லவா? அப்படி ஒரு வாய்ப்புத்தான் யசோதைக்கு கிடைத்தது. <br />
<br />
இராமயணத்தில், குழந்தையாக இருந்த இராமனின் குறும்புகளை பற்றி ஒன்றும் இடம் பெறாது. ஆக குழந்தை இராமன் குறும்புத் தனம் எதுவும் செய்யவில்லை என்றே கொள்ளலாம். ஏனென்றால் அரச குடும்பத்து பிள்ளை அல்லவா. இந்த காலத்தில் கூட, பணக்கார வீட்டு குழந்தைகளுக்கு குறும்புத்தனம் செய்யும் வாய்ப்பு குறைவு. அதே குழந்தைகள் வளர்த்து பெரியவர்களானதும், அவர்கள் செய்யும் அலும்புகள் தனி. <br />
<br />
இராமாவதாரத்தில். செய்ய விட்டுப் போன சேட்டைகளையும் சேர்த்து, மொத்தமாக சேர்த்து செய்து விட்டார் கிருஷ்ணாவதாரத்தில். <br />
குழந்தை கிருஷ்ணன் மண்ணை அள்ளி திண்கின்றான். வெண்ணைத் தாழிகளை உடைத்து, வெண்ணையை பருகுகின்றான். ஆயர்குல பெண்களிடம் வம்பு செய்கின்றான். என்ன தான் அரச குடும்பத்தில் பிறந்திருந்தாலும், வளர்ந்த்து என்னவோ, சாதாரண ஆயர்குல குடில்களில். யசோதை கண்ணனுடைய லீலைகளை இரசித்தாலும், ஊரிலுள்ள மற்றவர்களுக்காக உரலில் கட்டி வைத்து கண்டித்தாள். உலகையே கட்டி ஆளும் பரந்தாமன் என்று இந்து புராணங்களினால் வர்ணிக்கப் படும் கண்ணனை, யசோதை கட்டி வைத்தாளென்றால், அவள் எவ்வளவு தவம் செய்திருக்க வேண்டும். <br />
<br />
குழந்தை கண்ணனை பற்றிய எல்லா பாடல்களிலுமே, கண்ணனின் விளையாட்டுக்கள், வீர பிரதாபங்கள் என்று மட்டுமே வரும். கிருஷ்ண பகவானின் பெருமைகளை, அவனை வளர்த்த யசோதயை, அவளது சிறப்பினை குறிப்பிட்டு <a href="http://en.wikipedia.org/wiki/Papanasam_Sivan" target="_blank">பாபநாசம் சிவன்</a> அவர்களால் இயற்றப்பட்ட இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும், எனக்கு அலுப்பதில்லை. <br />
“படைப்புக் கடவுளான பிரம்மா, தேவர்களின் தலைவனான இந்திரன் ஆகியோர் கண்ணனின் கால்கள் தம்மீது படாதா என்று ஏங்கின்றனர். ஆனால், சாதாரண இந்தப் பெண், பல்வேறு உலகங்களையும் காத்து வருகின்ற பரந்தாமனை, கண்ணனை சீராட்டுகிறாள், தண்டனைக் கொடுக்கிறாள். , பல்வேறு மகா முனிகள் கடுமையான தவங்களின் மூலம் தரிசித்ததை, எளிதாக அதுவும் பெற்றெடுக்காமலே சாதித்து விட்டாளே” என்கிற பொருளில் வரும். <br />
<br />
மிகவும் எளிமையான நடையில், மிக குறைந்த வரிகளில் யசோதையின் சிறப்பைக் கொண்டு கண்ணனை போற்றும் இந்த பாடல் கர்நாடக சங்கீதத்தில் காபி என்னும் ராகத்தைக் அடிப்படையாக கொண்டது. <br />
"பார்த்திபன் கனவு" என்ற தமிழ் திரைப்படத்தில் சில வரிகள் மட்டும் வரும். ஹரிணி நன்றாகவே பாடியிருப்பார் என்றாலும், இடையே நாயகனும், நாயகியும் எங்கேயோ சென்று டூயட் பாடிவிட்டு வருவார்கள். புதுமை என்ற பெயரில் ஒரு நல்ல பாடலை கொலை செய்திருப்பார்கள். <br />
எல்லா கர்நாடக இசைக் கலைஞர்களுமே இந்த பாடலை பாடியிருக்கிறார்கள். அதில் காயத்ரி அவர்கள் பாடிய வாய்ப்பாட்டும், கத்ரி கோபால்நாத் அவர்களின் சாக்ஸ்போன் இசையும் குறிப்பிட தகுந்தது. எங்கள் ஊரில் நடைபெற்ற சங்கீத மும்மூர்த்திகள் இசைவிழாவில், சுதா ரகுநாதன் அற்புதமாகப் பாடினார். <br />
<br />
<br />
இவர்கள் எல்லோரையும் மறக்கடிக்க செய்தது, "திலக்கம்" என்ற மலையாள படத்தில் வரும் சின்மயி அவர்களின் குயிலிசை. நாயகன் திலிப் மனநிலை பாதிக்க பட்டவராகவும், நாயகி காவ்யா மாதவன் அவரை கவனிப்பது கொள்வது போல உள்ள சூழ்நிலையில் வரும் இந்த பாடல், கேட்போர் நெஞ்சங்களை உருகவைப்பது. <br />
<br />
பாடலின் ஆரம்பத்தில் வரும் குழந்தை நிமிஷாவின் குரல் கண்டிப்பாக நம்மை கரைய வைக்கும். பல நாட்கள், பல்லாயிரம் முறை கேட்டாலும், இன்னும் ஒரு முறை கேட்கத் தூண்டும் பாடல். <br />
என்னை கவர்ந்த சின்மயி, கண்டிப்பாக உங்களையும் கவர்வார். <br />
<br />
<strong>குழந்தை நிமிஷா, சின்மயி ஆகியோரின் குரலில் – </strong><a href="http://www.musicplug.in/multiple_song_flashplayer.php?songid=22261&br=medium&id=4137&songname=Enna-Thavam&page=movies" target="_blank"><strong>Music PlugIn-ல் கேட்க</strong></a><br />
<br />
<strong>குழந்தை நிமிஷா, சின்மயி ஆகியோரின் குரலில் - </strong><a href="http://www.youtube.com/watch?v=4uZcjuopdmQ" target="_blank"><strong>You Tube-ல் கேட்க</strong></a><br />
<br />
உங்களுக்குத் தேவையானவற்றைக் கேட்க சுட்டிகளை பயன்படுத்திக் கொள்ளவும். பாடல் வரிகளையும் உங்களுக்காக கொடுத்துள்ளேன்.<br />
<br />
<a href="http://www.youtube.com/watch?v=ArXiNLluD50" target="_blank">ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் ஆடும் பரதம்!</a><br />
<br />
<a href="http://www.musicindiaonline.com/p/x/-Ub4QY1u.d.As1NMvHdW/" target="_blank">மாதங்கி-ன் குரலில்</a><br />
<br />
<a href="http://www.musicindiaonline.com/p/x/A4Q21Xz0Md.As1NMvHdW/" target="_blank">S. காயத்ரி அவர்களின் குரலில்</a><br />
<br />
<a href="http://www.musicindiaonline.com/p/x/3JO2NeO7z9.As1NMvHdW/" target="_blank">S.P. ராம் அவர்களின் குரலில்</a><br />
<br />
<a href="http://www.musicindiaonline.com/p/x/WJb0Hykftd.As1NMvHdW/" target="_blank">நிர்மலா ராஜசேகர் அவர்களின் வீணையிசையில்</a><br />
<br />
<a href="http://www.musicindiaonline.com/p/x/kJf0xnBaJS.As1NMvHdW/" target="_blank">வயலினிசையில்</a> <br />
<br />
<a href="http://www.musicindiaonline.com/p/x/l4O0S28kRd.As1NMvHdW/" target="_blank">ரமணி அவர்களின் புல்லாங்குழலிசையில்</a><br />
<br />
<a href="http://www.musicindiaonline.com/p/x/TUO07m58pt.As1NMvHdW/" target="_blank">கத்ரி கோபால் நாத் அவர்களின் சாக்ஸ்போன் இசையில்</a><br />
<br />
<br />
<strong><span style="color: blue;">பாடல்: என்ன தவம் செய்தனை </span></strong><br />
<strong><span style="color: blue;">வரிகள்: பாபநாசம் சிவன் </span></strong><br />
<strong><span style="color: blue;">ராகம்: காபி </span></strong><br />
<strong><span style="color: blue;">தாளம்: ஆதி</span></strong> <br />
<br />
என்ன தவம் செய்தனை யசோதா <br />
என்ன தவம் செய்தனை <br />
எங்கும் நிறை பரப்ரம்மம் - அம்மா வென்றழைக்க <br />
(என்ன தவம்) <br />
ஈரேழு புவனங்கள் படைத்தவனைக் - கையில் <br />
ஏந்திச் சீராட்டி பாலூட்டி தாலாட்ட - நீ <br />
(என்ன தவம்) <br />
பிரமனும் இந்தரனும் மனதில் பொறாமை கொள்ள - உரலில் <br />
கட்டி வாய் பொத்திக் கெஞ்ச வைத் தாயே - நீ <br />
(என்ன தவம்) <br />
சனகாதியர் தவ யோகம் செய்து வருந்திச் சாதித்ததை <br />
புனித மாதே எளிதில் பெற - நீ <br />
(என்ன தவம்)<br />
<br />
<br />Santhappanசாந்தப்பன்http://www.blogger.com/profile/07148021073755708494noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-987851344844901124.post-88494649929749269752009-12-18T02:30:00.004+03:002009-12-23T11:47:34.808+03:00இலவச கலர் டி.வி என்னும் கொடுமை<span style="color: blue;">உலக நடப்புகளை தெரிந்துகொண்டு தங்கள் அறிவை வளர்த்தி கொள்ளவே அரசு இலவசமாக வண்ணத் தொலைக்காட்சி பெட்டி கொடுக்கிறது என பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் ஜீவா. ஓ.சுப்பிரமணியம் கூறினார்.</span><br />
<br />
மேற்க்கண்ட செய்தி சில மாதங்களுக்கு முன் எல்லா நாளிதழ்களிலும் வெளிவந்தது. அடுத்து, ஐந்தாம் கட்டமாக மேலும் 40 லட்சம் இலவச கலர் டி.வி. 17 நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ய முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையிலான சட்டமன்றக் கட்சிகளின் பிரநிதிகள் குழு கூட்டம் என்று நேற்று எல்லா நாளிதழ்களும் செய்தி வெளியிட்டன. <br />
இந்த செய்தியினைப் படித்து விட்டு, வரி செலுத்துவோர் மட்டுமல்லாது நாட்டின் மீது அக்கறைக் கொண்ட அனைவருக்கும் ரத்தம் கொதித்திருக்கும். <br />
<br />
<br />
<a name='more'></a><br />
<br />
எனக்கு தெரிந்து தமிழகத்தில் தொலைக்காட்சி பெட்டி இல்லாமல் இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை 40 லட்சத்தைக் கூட தாண்டாது. விட்டால் ஆறரை கோடி தமிழர்களுக்கும் (தமிழகத்தில் இருப்பது ஐந்தரை கோடிதான்) ஒன்று கொடுப்பார் போலிருக்கிறது. <br />
<br />
சில ஆண்டுகளுக்கு முன், சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை குடிசைப் பகுதிகளில் எங்கள் நிறுவனத்தின் சார்பாக நடைபெற்ற ஒரு ஆய்வுக்காக சென்ற போது, பெரும்பாலான் வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டியும், செயற்க்கைகோள் அலைவரிசைகளை கண்டுகளிக்கும் வசதிகளையும் கண்டு வியந்தேன். வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் தொலைக்காட்சி பார்க்கக்கூடாது என்று நான் சொல்லவில்லை. ஒரு வேளை உணவுக்கே வழி இல்லாத மக்கள் எவ்வாறு மின்சாரக் கட்டணம் செலுத்தினார்கள், எவ்வாறு கேபிள் வாடகை செலுத்துகிறார்கள் என்று யோசிக்க வேண்டும். அங்குள்ள ராஜ் திரையரங்கில் ரூ. 40 கொடுத்து ஒவ்வோரு புதிய படத்தையும் பார்க்கிறார்கள். டாஸ்மார்க்கில் தினம் சரக்கடிக்கிறார்கள். அவர்கள் வீடு இருப்பதோ, அடையாறு ஆற்றின் நடுவில். <br />
<br />
கோடை காலங்களில், அந்த சாலைகளில் (மறைமலை அடிகள் பாலத்தின் மீது) செல்வோர் நிச்சயம் கவனித்திருக்கக் கூடும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு புதிய குடிசை கிளம்பும். மழைக் காலங்களில் அடையாற்றில் வெள்ளம் வரும் போது, அவர்கள் அனைவரும் ஒரு பாத்திரம் எடுத்து தண்ணீரை மொண்டு ஊடகங்களுக்கு போஸ் கொடுப்பார்கள். இது போன்ற ஒரு நிலையை எழும்பூர் புதுபேட்டை பிளாட்பார்ம் வாசிகளிடமும் கண்டிருக்கிறேன். ஆடித் திருவிழாவின் போது இவர்கள் இருக்கும் பகுதியில் பிரம்மாண்ட விநாயகர் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்க பட்டிருப்பார். <br />
<br />
ஆற்றின் குறுக்கே, சாலைகளை அடைத்து வீடு கட்டி இருக்கும் இவர்களின் வீடுகளுக்கு மின்சார இணைப்பு கொடுத்தது யார், யார் இவர்களுக்கு மின்சாரக் கட்டணம் செலுத்துகிறார்கள், கேபிள் டி.வி. இணைப்பு கொடுத்தது யார் என்று யாருக்காவது தெரியுமா? <br />
இலவச நிலம், அரசு கேபிள் டி.வி போன்ற எல்லாவற்றையும் விட குடும்பத்திற்க்கும், கழகத்திற்க்கும் இந்த திட்டத்தில் தான் அதிக வருமானம் போலிருக்கிறது. நலத்திட்டங்கள் அறிவிக்கப் படுவதே, கழக கண்மணிகள் ஒப்பந்தத்தின் மூலம் காசுபார்க்கத்தான் என்றான பிறகு, பல்வேறு நிறுவனங்களின் மூலமும் தன் குடும்பத்திற்க்கு சொத்து சேர்க்கிறார். பாலங்கள் கட்டுவதிலும், சாலைகள் சரி செய்யப் படுவதிலும், கழகத்தைச் சேர்ந்த குண்டர்கள் எவ்வளவு பணம் பெறுகிறார்கள் என்பது உலகறிந்த உண்மை. <br />
<br />
தமிழக முதல்வரின் சொந்த ஊரான எங்கள் ஊரில், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள், ஒருவர் திமுகவிலும், மற்றொருவருவர் அதிமுகவிலும் இருந்து கொண்டு அரசின் ஒப்பந்தங்கள் வேறொருவருக்கு செல்லாமல் பார்த்து கொள்கிறார்கள். அதற்கு வழிகாட்டியவர் முதல்வர். <br />
இவர் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுகிறார் என்றால், இவருக்கு அண்ணா நூற்றாண்டு விழாவில் வந்த 100 சவரன் தங்கக் காசை விற்று வாங்கித் தரட்டும். அதற்க்காக மக்களின் வரிப் பணம் எத்தனை கோடிகளை விரயமாக்கிக் கொண்டிருக்கிறார். <br />
<br />
சன் டி.டி.எச் இணைப்பை இன்னும் பல பேர் வாங்க வேண்டும் என்பதற்க்காகத்தான் இந்த 40 லட்சம் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப் படுகின்றன என்று யாராவது சொல்லாமலிருந்தால் சரி.<br />
அடுத்த தேர்தலில், ஒவ்வோரு வீடுகளுக்கும் ஒரு டி.டி.எச் வசதி செய்து தரும் ஒரு குடையும், செட்டாப் பாக்சும் இலவசம் என்று அறிவிப்பார். அந்த ஒப்பந்தத்தையும் கலாநிதி மாறனே பெற்று உலக கோடீஸ்வரர்கள் வரிசைக்கு முன்னேறுவார். <br />
<br />
தமிழக மக்கள், கலைஞர் டி.வி யில் "மானாட மயிலாட", சன் டிவியில் "டீலா நோ டீலா" போன்ற அறிவார்ந்த நிகழ்ச்சிகளைப் பார்த்து அறிவை வளர்த்துக் கொள்வதோடு, வறுமைக் கோட்டிலிருந்து, செல்வ செழிப்புள்ள குடும்பங்களாக மாறுவார்கள். <br />
<br />
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் துதிபாடிகள், கருணாநிதியை புகழ்ந்து புகழ்ந்து வீர தீர உறையாற்றுவார்கள். முதல்வர் திரைப்பட விழாக்களில் கண்டு ரசிக்கும் தொப்புள் தெரிய நடனமாடும் குத்தாட்ட நடனங்களை இவர் சார்ந்த தொலைகாட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யும். அதைப் பார்த்து தமிழக மக்களின் பொது அறிவு வளர்ந்து, வரும் ஆண்டில் நடைப் பெறப் போகும் IAS, IPS போன்ற Civil Services தேர்வுகளில் பெருவாரியாக வெற்றி பெறுவார்கள். <br />
<br />
தமிழகத்தில் முக்கியமான பிரச்சனைகள் வரும் போது, “முதல்வருக்கு முதுகுதண்டில் வலி, ராமச்சந்திரா மருத்துவ மனையில் ஓய்வு” என்று கலைஞர் செய்திகள் பரபரப்பு செய்திகளை வெளியிடும். ஏற்கனவே டாஸ்மார்க்கில் சரக்கடித்து மட்டையாகி இருக்கும் பாமரன், இதைப் பார்த்து விட்டு வெளியே வந்து அரசு பேருந்தின் மீது கல்லெறிந்து சேதம் விளைவிப்பான். <br />
<br />
ஐயா பெரியவரே, நீங்கள் ஒய்வு பெறப் போகிறீர்களோ இல்லையோ, உங்கள் குடும்பம் பங்கிட்டது போக, மிச்சம் மீதி இருக்கும் தமிழக கஜானாவை காலி செய்து விடாதீர்கள்!<br />
<br />
<br />
<br />Santhappanசாந்தப்பன்http://www.blogger.com/profile/07148021073755708494noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-987851344844901124.post-28710675796480272982009-12-17T19:12:00.004+03:002009-12-23T11:48:51.131+03:00நாட்காட்டிஇதோ இன்னும் சில தினங்களில் உலகில் ஒரு புதிய ஆண்டு பிறக்கப் போகிறது. இந்த ஆண்டு முதலில் வரப்போவது இஸ்லாமியர்களின் புதிய ஆண்டு. பிறகு ஆங்கில புத்தாண்டு, தை புத்தாண்டு, திருவள்ளுவர் ஆண்டு, தெலுங்கு, சித்திரை புத்தாண்டு என வரவிருக்கின்றன. மேலே குறிப்பிட்ட புத்தாண்டுகள் தான் உள்ளது என நீங்கள் நினைத்தால், அது தான் இல்லை..எகிப்து நாட்காட்டி, சீன நாட்காட்டி, டச்சு நாட்காட்டி போன்ற சுமார் 300 நாட்காட்டிகள் உள்ளன. <br />
<br />
தற்போது, உலகில் எல்லா மக்களும், அரசுகளும் பயன்படுத்துவது ஆங்கில நாட்காட்டி எனப்படும் கிரிகோரியன் நாட்காட்டியைத்தான் என்றாலும், நாடுகளுக்கென்று தனித்தனியாக அதிகாரப் பூர்வ நாட்காட்டி உள்ளது. இந்தியாவின் தேசிய நாட்காட்டி "இந்து நாட்காட்டி" (விளக்கம் பின்பு வரும்). <br />
<br />
<a name='more'></a><br />
உலகில் உள்ள எல்லா நாட்காட்டிகளையும் எடுத்துப் பார்த்தால், ஒவ்வொன்றும் ஒவ்வோரு நாளை காட்டும். யார், எந்த அடிப்படையில் இவற்றையெல்லாம் வகுத்தார்கள்? எப்படி நாட்கள் கணக்கிடப்படுகிறது?<br />
மனித இனம் மதங்களுக்குள் புகுந்த கொண்ட பின்னர், மதங்களின் பெயராலேயே நாட்காட்டிகள் வகுக்கப் பட்டன. மத குருமார்களின் அனுமதியோடுதான், வானியல் அறிஞர்கள் வகுத்த நாட்காட்டிகள் அங்கீரிக்கப்பட்டன. இன்றைய பகுத்தறிவாளர்கள் கூட, மதங்களின் பெயரால் வழங்கப் படுகின்ற, இவற்றை பயன்படுத்துகின்றனர்.<br />
இந்தியாவில் பெரிய சமயங்களாக உள்ள இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ சமயங்கள் ஒவ்வொன்றும் ஒரு நாட்காட்டிகளைக் கொண்டுள்ளன. இவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம். <br />
<br />
நாட்காட்டி ஆண்டு-மாதம்-நாள் மற்றும் ஆண்டு-வாரம்-வாரநாள் போன்ற சுழற்சி முறைகளில் கணக்கிடப் படுகிறது. இந்த சுழற்சி முறைகள், சூரியன்-சந்திரன் இவற்றின் சுழற்சியைக் கொண்டு கணக்கிடப் படுகிறது. நிலவின் சுழற்சியை மட்டும் கணக்கிடப்பட்ட நாட்காட்டி, சூரியனின் சுழற்சியை மட்டும் கணக்கிடப்பட்ட நாட்காட்டி ஆகியவையும் உண்டு. இது மட்டுமல்லாது வியாழனின் சுழற்சியைக் கொண்டு கணக்கிடப்பட்ட நாட்காட்டியும் உண்டு.<br />
<br />
இந்த முறை இஸ்லாமியப் புத்தாண்டு வரும் 18-ம் தேதி பிறக்கிறது. இதை எப்படி கணக்கிடுகிறார்கள் என்று பார்ப்போம். இஸ்லாமிய நாட்காட்டி அல்லது ஹிஜ்ரி நாட்காட்டி என்பது சந்திரனின் (Lunar Circle) சுழற்சியை கொண்டு கணக்கிடப் பட்ட, 12 மாதங்களைக் கொண்ட நாட்காட்டியாகும். நிலவு பூமியை சுற்றி வர 29.53 நாட்கள் (சாராசரியாக 29 நாட்கள், 12 மணிகள், 44 நிமிடம்) ஆகிறது. <br />
<br />
இந்த முறையில் கணக்கிட்டதால், ஒரு இஸ்லாமிய நாட்காட்டி ஆண்டு என்பது 354.37 நாட்களை மட்டுமே கொண்டுள்ளது. கிரிகோரியன் நாட்காட்டியுடன் ஒப்பிடும் போது 11 நாட்கள் (12 நாட்கள், லீப் ஆண்டில்) பின்னோக்கி உள்ளது. அதாவது, இந்த ஆண்டு டிசம்பர் 18ம் நாள் வரும் முகரம் எனப்படும் இஸ்லாமிய புத்தாண்டு, அடுத்தாண்டு 11 நாட்களுக்கு முன்பாகவே வந்துவிடும். <br />
<br />
இந்த 11 நாட்கள் இடைவெளி, சராசரியாக 33 இஸ்லாமிய ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப் படுகிறது. இந்த மாற்றியமைக்கும் முறைக்கு பல விதிகள் உள்ளன. <br />
<br />
இஸ்லாமிய நாட்காட்டியின், மாதம் முதல் நாள் என்பது, அமாவாசைக்குப் பின் நிலா தோன்றும் நாள். இதனால் தான் இஸ்லாமிய பண்டிகை தினங்கள் பிறை தோன்றுவதைக் கொண்டு மாத முதல் நாளை கணக்கிட்ட பின்னர் பண்டிகை தினத்தை முடிவு செய்வார்கள். எல்லா சந்திர நாட்காட்டிகளும் இந்த முறையை பின்பற்றுவதில்லை. சில சீன, இந்திய நாட்காட்டிகள், முழு பெளர்ணமியை மாத முதல் நாளாக கொள்கின்றன. <br />
<br />
இஸ்லாமிய நாட்காட்டியின் வருடங்கள் முகமது அவர்களின் மெதினா பயணத்தைக் கொண்டு கணக்கிடப்படுகின்றன. அவர் மெக்காவிலிருந்து, மெதினாவுக்கு பயணம் (அதற்கு "ஹிஜ்ரி" என்று பெயர்) செய்த ஆண்டு முதல் ஆண்டாக வகுக்கப் பட்டது. அதன் படி பார்த்தால் அவர் பிறந்த ஆண்டை ஹிஜ்ரிக்கு முன் 53 (<strong>B</strong>efore <strong>H</strong>ijiri 53) என்று குறிப்பிடுகிறார்கள். அதன் படி பார்த்தால், தற்போதய ஹிஜ்ரி ஆண்டு, ஹிஜ்ரிக்குப் பின் 1430 (AH 1430) (கிரிகோரியன் ஆண்டு 2008 டிசம்பர் 28 மாலை முதல் 2009 டிசம்பர் 17 மாலை வரை).<br />
<br />
இஸ்லாமிய நாட்காட்டி, சவுதிஅரேபியாவில் மட்டுமே அதிகாரப் பூர்வமாக பயன்படுத்தப் படுகிறது. ஏனைய இஸ்லாமிய நாடுகளான எகிப்து, ஈரான், மொராக்கோ போன்றவை தனித் தனியாக நாட்காட்டிகளைக் கொண்டுள்ளன. இஸ்லாமிய பண்டிகைகளைக் குறிப்பதற்க்கும் இது பயன் படுத்தப் படுகிறது.<br />
<br />
அடுத்ததாக உலகில் எல்லோராலும் பயன்படுத்தப்படும் கிரிகோரியன் எனப்படும் ஆங்கில நாட்காட்டி. இதைப்பற்றி எல்லோருமே பள்ளி நாட்களில் படித்திருப்போம். பூமி, சூரியனைச் சுற்றி வரும் நாட்களைக் கொண்டு நாட்களும், மாதங்களும் கணக்கிடப் படும் சூரிய நாட்காட்டியாகும். மணி நாள் ஆண்டு என்ற முறையைக் கொண்டு, ஒரு ஆண்டுக்கு 365 அல்லது 366 நாட்களைக் கொண்டுள்ளது. இதே கணக்கீடுகள் 146,097 நாட்களுக்கு அதாவது 400 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக செயல்படுத்தப் படுகிறது. <br />
<br />
லீப் ஆண்டு பற்றி உங்களுக்குத் தெரியும். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமியின் சுழற்சியோடு நாட்காட்டியை ஒருங்கிணைக்க ஒரு நாள் சேர்க்கப் படுகிறது. ஆனால், இதிலும் ஒரு விதி உண்டு. எல்லா நூறாவது ஆண்டும் லீப் ஆண்டு அல்ல. உதாரணமாக, 2000-வது ஆண்டு லீப் ஆண்டாகும். ஆனால் 2100, 2200, 2300 ஆண்டுகள் லீப் ஆண்டுகள் அல்ல. 400 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் சேர்க்கப் படும். <br />
<br />
ஆண்டுகளுக்கு எண், இயேசு பெருமான் பிறந்ததாக சொல்லப்பட்ட ஆண்டை முதல் ஆண்டாகக் கொண்டு கணக்கிடப் பட்டது. 12 மாதங்கள், முறையற்ற நாட்களைக் கொண்டுள்ளன. மாதங்கள் 30 அல்லது 31 நாட்கள் கொண்டுள்ளதற்க்கு எந்த காரணமும் கிடையாது. (யாருக்காவது தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்). <br />
<br />
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையிடமான வாடிகனில், போப்பாண்டவர் 13-வது கிரிகோரியால் துவக்கி வைக்கப் பட்டதால், இது கிரிகோரியன் நாட்காட்டி என்று குறிப்பிடப்படுகிறது. ஆண்டின் முதல் நாளை எங்கு தொடங்குவது பெரும் குழப்பம் நிலவியதாம். கிறிஸ்தவ சமுதாயத்தில் சிலர், இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 25தான் ஆண்டின் முதல் நாள் எனக் கூறி அதையே கடைப்பிடிக்கின்றனர். இங்கிலாந்தில் 12-ம் நூற்றாண்டு முதல் 1751 வரை இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான மார்ச் 25-ம் நாளையே ஆண்டின் முதல் நாளாக கொண்டிருந்தனர். 1752-ம் ஆண்டு, ஜனவரி முதல் நாளாக மாற்றியமைத்தனர். இதனால் 1751-ம் ஆண்டு 282 நாட்களையே கொண்டிருந்தது. ஐரோப்பாவில் ஒவ்வொரு நாடும் தனித்தனியாக நாட்காட்டிகளைக் கொண்டிருந்த போதிலும், 18 மற்றும் 19ம் நூற்றாண்டுகளில் கிரிகோரியன் நாட்காட்டியை ஏற்றுக் கொண்டன. ஐரோப்பிய காலனி ஆதிக்கம் உலகெங்கிலும் பரவியிருந்தபடியால், எல்லா நாடுகளிலும் இதையே அதிகார பூர்வ நாட்காட்டியாக அறிவித்தனர்.<br />
<br />
அரேபியர்கள், ஐரோப்பியர்கள் வகுத்த நாட்காட்டிகள் இருக்கட்டும், இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் என்ன செய்தார்கள் என்று கேட்கிறீர்களா? அவற்றை அடுத்த பதிவில் சொல்கிறேன்.<br />Santhappanசாந்தப்பன்http://www.blogger.com/profile/07148021073755708494noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-987851344844901124.post-27404147475984183442009-12-11T02:45:00.004+03:002009-12-23T11:49:43.407+03:00படித்ததில் பிடித்தது - பிரார்த்தனைநான் சில வருடங்கள், நாகையில் உள்ள தென்னிந்திய திருச்சபை பள்ளிக் கூடங்களில் படித்தபோது, காலை பிரார்த்தனையின் போது விவிலியத்தில் உள்ள சில பகுதிகளை படித்துக் காட்டுவார்கள். பெரும்பாலும் அவைகள் தனிமனித ஒழுக்கம், நன்னடத்தை நெறிமுறைகள் சம்மந்தப்பட்டதாக இருக்கும். அந்த பருவத்தில் எனக்கு அதில் ஒன்றும் விளங்கவில்லை. பின்னாளில் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேலை தேடும் போதும்தான் தனிமனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியமானது என்று புரிந்தது. (சத்தியமா 'அந்நியன்' அம்பி இல்லீங்கோ) <br />
<br />
<a name='more'></a><br />
சில சமயம், என் நண்பர்கள் கேட்பார்கள், யார் கூட தங்கியிருக்க? அல்லது, யார் உனக்கு மேலாளர்? யார் உனக்கு Team Mate? என்று. நான், அவர் பெயரைக் கூறியதும், அவனா, என்று ஆரம்பித்து, ஒரு கதை சொல்வார்கள்... அவர்களிடம் நான் சொல்லுவேன் "சில பேரை நம்மால் மாற்ற இயலாது. பழகிக் கொள்ள வேண்டும், யாரையும் திருத்துவதற்க்காக நாம் வரவில்லை" <br />
<br />
சில மாற்ற முடியாத நபர்களை / விடயங்களை அனுசரித்து செல்லும் பக்குவம் வேண்டும் என்பேன் நான். <br />
<br />
நாகேஷ் ஒரு படத்தில் சொல்லுவார், "எனக்கு தெரிஞ்சு நான் எந்த பாவமும் பண்ணினதில்லை, அதுவே உனக்கு பெரிய சொத்து என்று". எவ்வளவு சிறந்தது அது. நாம் யாருக்கும் நன்மை செய்ய தேவையில்லை, தீமை செய்யாமல் இருந்தால் போதாதா? பழி வாங்கும் உணர்ச்சி இல்லாமல் இருந்தால் போதாதா? <br />
<br />
தோல்வி ஒன்றை சந்திக்கும் போது, அந்த பழியை யார் மேல் சுமத்தலாம், யாரை பழி தீர்க்கலாம் நம்மில் எவ்வளவு பேர் நினைக்கிறோம்.<br />
அலுவலகம், கல்லூரி, வீடு, உற்றார், உறவினர், பயணக்களின் போது உடன் வருவோர், இவர்கள் யாருமே நமக்கேற்றார் போல்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அவர்கள் அவர்களாக இருப்பார்கள், நீங்கள் நீங்களாகவே இருங்களேன்..... <br />
<br />
இந்த பக்குவங்களை எல்லாம், நான் அடைய காரணமாயிருந்தது, அன்னை தெரசா அவர்களின் பிரார்த்தனைகளில் வரும் வைர வரிகள். <br />
பள்ளி வயதில் நான் புரியாமல் ஒப்புவித்த இந்த பிரார்த்தனைகள், கல்லூரிக் காலம் முடிந்த பின்னர், வாழ்க்கையை புரிந்த கொள்ள உதவியது. இறைவனிடம் வேண்டுவது போல் இருந்தாலும், ஒவ்வொரு தனிமனிதனும் கடை பிடிக்க வேண்டிய நல்லொழுக்கங்கள் இதில் இடம் பெறுவது சிறப்பு (பகுத்தறிவளர்களுக்கும் இது பொருந்த்தும்).<br />
என் மனங்கவர்ந்த அந்த பிரார்த்தனை<br />
<br />
<span style="color: #004080;"><span style="color: #004080;"><a href="http://lh4.ggpht.com/_zOOY9Z7VJxA/SyGH_u6IhAI/AAAAAAAADZk/r9nDxuMZoP0/s1600-h/motherteresa%5B3%5D.jpg"><img align="left" alt="motherteresa" border="0" height="244" src="http://lh6.ggpht.com/_zOOY9Z7VJxA/SyGIBF780TI/AAAAAAAADZo/maVbtFSqub4/motherteresa_thumb%5B1%5D.jpg?imgmax=800" style="border-bottom: 0px; border-left: 0px; border-right: 0px; border-top: 0px; display: inline; margin-left: 0px; margin-right: 0px;" title="motherteresa" width="188" /></a></span>இறைவா! </span><br />
<br />
<span style="color: #004080;">மாற்ற முடியாதவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பக்குவத்தையும், மாற்ற முடிந்தவற்றை மாற்றக்கூடிய மன வலிமையையும், இரண்டிற்க்கும் இடையே உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ளக்கூடிய அறிவையும் எனக்குக் கொடுக்க உன்னைப் பிரார்த்திக்கின்றேன்! </span><br />
<span style="color: #004080;">இறைவா! </span><br />
<br />
<span style="color: #004080;">என்னை நீ தெய்வீக அமைதிக்கான கருவியாக ஆக்கிவிடு. வெறுப்பு இருக்கின்ற இடத்தில் எல்லாம் நான் அன்பை விதைக்க வேண்டும். </span><br />
<br />
<span style="color: #004080;">தீமை நிகழ்கின்ற இடத்தில் மன்னிப்பையும், சந்தேகம் இருக்கின்ற வட்டாரத்தில் நம்பிக்கையையும், கலகம் ஏற்படும் இடத்தில் அமைதியையும், இருள் படர்ந்த நிலத்தில் ஒளியையும், துயரம் நிறைந்த பூமியில் மகிழ்ச்சியையும் நான் விதைப்பேனாக. </span><br />
<br />
<span style="color: #004080;">தெய்வீக சாம்ராஜ்ஜியத்தின் தலைவனே! நான் உன்னைக் கேட்டுக் கொள்வதெல்லாம், நான் ஆறுதலோடிருக்கிறேன் என்பதன்று. அடித்தவருக்கு நான் ஆறுதல் தருகிறேனா என்பதெ முக்கியமானதாகும். </span><br />
<span style="color: #004080;">நான் உலகத்தால் தெரிந்து கொள்ளப் பட்டிருக்கிறேனா என்பதைவிட, உலகத்தை நான் தெரிந்து கொண்டேனா என்பதே என்னுடைய பிரச்சனையாகும். </span><br />
<br />
<span style="color: #004080;">என்னை அடுத்தவர்கள் நேசிக்கிறார்களா என்பது பற்றிக் கவலையில்லை, அடுத்தவர்களை நான் நேசித்தபடி இருக்க வேண்டும் என்பதே என்னுடைய கோரிக்கையாகும். </span><br />
<br />
<span style="color: #004080;">ஆண்டவனே, </span><br />
<br />
<span style="color: #004080;">கொடுப்பதால்தான் நாம் பெறுகிறோம் என்பதும், மன்னிப்பதால் தான் நாம் மன்னிக்கப்படுகிறோம் என்பதும், இறப்பதால்தான் நாம் புதிதாகப் பிறந்து நிலையான வாழ்வு பெறுகிறோம் என்பது நான் அறிந்த தத்துவங்களாக இருப்பதால், என்னுடைய கோரிக்கையை நீ ஏற்றுக் கொள்வாயாக!</span><br />
<br />
பி.கு: பிடிச்சிருந்தா ஓட்டு போட்டுட்டு போங்க! பிடிக்கலைன்ன திட்டித் தீர்த்துடுங்க, ஆட்டோ மட்டும் அனுப்பிடாதீங்க!<br />Santhappanசாந்தப்பன்http://www.blogger.com/profile/07148021073755708494noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-987851344844901124.post-13907930465607690022009-12-08T20:30:00.002+03:002009-12-11T02:41:12.816+03:00அனன்யாவும் கிரிஷும்<p> </p> <p>தலைப்பைப் பார்த்துவிட்டு  நாடோடிகள் நாயகி அனன்யாவுக்கும், ஹிரித்திக் ரோஷனுக்கும் ஏதோ கசமுசா சமாச்சாரம் என்று நீங்கள் வந்தால் இந்த பதிவு உங்களுக்கானது அல்ல. </p> <p>சேத்தன் பகத் எழுதியுள்ள நான்காவது நாவலான <strong>"2 States”-</strong>ல் வரும் கதாநாயகிதான் அனன்யா. கதாநாயகன்தான் கிரிஷ். </p> <p>யாருங்க இந்த "சேத்தன் பகத்" என்று கேட்பவரா நீங்கள். அவரை பற்றி தெரிந்து கொள்ள கிருத்திகா எழுதியுள்ள  <a href="http://spiritual-indian.blogspot.com/2009/12/blog-post.html">சேத்தன் பகத்-புத்தக அறிமுகங்கள்</a>  என்ற பதிவைப் பார்க்கவும். </p> <p>சரி நாம் விடயத்திற்க்கு வருவோம். </p> <p>நம்ம மயிலாப்பூர் மாமி அனன்யா சுவாமிநாதனுக்கும், பஞ்சாப் சிங் கிரிஷ் மல்கோத்ராவுக்கும் இடையே நடக்கும் காதல் கதை தான் <strong>"2 States</strong><a href="http://lh5.ggpht.com/_zOOY9Z7VJxA/Sx6NG6HvogI/AAAAAAAADYg/xC5lxTRNeYQ/s1600-h/2_States%5B3%5D.jpg"><strong><img style="border-right-width: 0px; display: inline; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: 0px; border-left-width: 0px; margin-right: 0px" title="2_States" border="0" alt="2_States" align="left" src="http://lh5.ggpht.com/_zOOY9Z7VJxA/Sx6NJf3NfII/AAAAAAAADYs/uWBY3-XaHDg/2_States_thumb%5B1%5D.jpg?imgmax=800" width="155" height="244" /></strong></a><strong>"</strong>.  </p> <p>இதைத் தான் நாங்கள் "அபியும் நானும்" படத்தில் பார்த்து விட்டோமே என்று சொல்லாதீர்கள். அது வேறு இது வேறு. </p> <p>இந்தியாவின் இரு வேறு கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள் கொண்ட இருவருக்கும் இடையே இருக்கும் காதலை அவர்கள் குடும்பத்தினர் எப்படி அணுகுகிறார்கள் என்பதை நகைச்சுவையோடு விளக்கியிருக்கிறார். எனக்கு என்னவோ சொந்த கதையை நாவலாக்கியிருக்கிறாரோ என்று தோன்றுகிறது. ஏனென்றால் சேத்தன் பகத் வட இந்தியாவைச் சேர்ந்தவர். அவரது மனைவி தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்.</p> <p>இனி கதை சுருக்கம் : </p> வட இந்தியாவைச் சேர்ந்த கிரிஷும், சென்னை மயிலாப்பூர் அனன்யாவும் அகமதாபாத் IIM-ல் சந்திக்கிறார்கள். இருவருக்கும் காதல் பற்றிக் கொள்கிறது. கசமுசாவும் நடந்து விடுகிறது. இரு குடும்பத்தினரும் எதிர்க்கிறார்கள் (வழக்கம் போல). காதலர்கள் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் தான் திருமணம் என்று முடிவு செய்கிறார்கள்.  (அட நம்ம ஜோடி, மின்சாரக் கண்ணா கதை). எப்படி குடும்பத்தினரின் சம்மதத்தைப் பெறுகிறார்கள், இரு துருவம் போன்ற கலாச்சாரம் கொண்ட குடும்பங்களை ஒன்று சேர்க்கிறார்கள் என்பதே கதை. <p>இந்தியாவில் திருமணம் என்பது இரு தம்பதிகளின் இணைப்பு அல்ல. இரு குடும்பங்களின் இணைப்பு என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கிறார். "இந்தியக் காதல் என்பது காதலர்களோடு மட்டும் சம்மந்தப் பட்டதல்ல" என்று வைர முத்துவின் கவிதையில் வரும்.அதை மிகுந்த நகைச்சுவையோடு விளக்கிச் சொல்லியிருக்கிறார்.  </p> <p>முதல் 50 பக்கங்களில் காதல் மட்டுமே வரும் கதையில், இரு குடும்பங்களும் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சந்திக்கும் போது வேகம் பிடிக்கிறது. ஒரு திருமணத்திற்க்கு மாப்பிள்ளை வீட்டார் தான், பெண் கேட்க வேண்டும் போன்ற தமிழ் மரபுகளை நக்கலடித்தார் போல் இருக்கிறது. இயல்பான சேத்தன் பகத்தின் ஆங்கிலம், அவரது நகைச்சுவை மிகுந்த எழுத்து நடை ஆகியவை ரசிக்க வைக்கிறது. ஆனால் இயல்பான நகைச்சுவை என்பதற்க்காக, கதா நாயகன் பேசும் ஆபாச வசனங்களைத் தவிர்த்திருக்கலாம். </p> <p>நீங்கள் நிறைய தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்படம் பார்ப்பவரானால், கதையில் வரும் திருப்பங்களை இலகுவாக ஊகிக்கலாம் ("எத்தனை தமிழ்ப் படம் பார்த்திருக்கென்" என்று கமல் மாதிரி காலரை தூக்கி விட்டுக்கலாம்) </p> <p>ஆக மொத்தத்தில் ஒரு முறை படிக்கக் கூடிய, இளைஞர்களுக்கேற்ற நகைச்சுவைப் புத்தகம். படிச்சுத் தான் பாருங்களேன் (எவ்வளவோ பண்றீங்க, இதையும் பண்ணுங்களேன்!) </p> <p><strong><font color="#1f497d">பி.கு: பிடிச்சிருந்தா ஓட்டு போட்டுட்டு போங்க! பிடிக்கலைன்ன திட்டித் தீர்த்துடுங்க, ஆட்டோ மட்டும் அனுப்பிடாதீங்க!</font></strong></p> Santhappanசாந்தப்பன்http://www.blogger.com/profile/07148021073755708494noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-987851344844901124.post-79132269369173970812009-12-07T21:42:00.002+03:002009-12-08T23:11:12.344+03:00கோபன்ஹெகன்<p> </p> <p>கடந்த சில நாட்களாக "கோபன்ஹெகன்" என்பதை பற்றி ஊடகங்கள் பரபரப்பாக பேசி வருகின்றன. ஆங்காங்கெ விளம்பரங்கள், நாடளுமன்றத்திலும் அது பற்றித்தான் பேச்சு. அது என்ன "கோபன்ஹெகன்"?  புதிதாக வந்திருக்கும் கைபேசி நிறுவனமா? இல்லை "ஸ்பெக்ட்ரெம்" மாதிரி ஏதேனும் ஊழல் சமாச்சாரமா? என்று கேட்காதீர்கள். </p> <p>கோபன்ஹெகன், டென்மார்க் நாட்டின் தலைநகரம். புவி வெப்பமடைதல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த <a href="http://en.cop15.dk/frontpage" target="_blank">சர்வதேச மாநாடு</a> இன்று (டிசம்பர் 7), இங்குதான் தொடங்குகிறது. 192 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள், குறிப்பாக 60 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இதில் பங்கு பெறுகிறார்கள். டிசம்பர் 18ம் தேதி வரை நடக்கும் இந்த மாநாட்டில் உலக அளவில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்பர். மாநாட்டின் இறுதி 2 நாட்களில் அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மன்மோகன்சிங், பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன், சீன அதிபர் வென்ஜியாபோ உள்பட பலர் பங்கேற்று பேசுகின்றனர். </p> <p>ஏன் கோபன்ஹெகன் நகரத்தில் இந்த மாநாட்டை நடத்துகிறார்கள் என்பதற்க்கு சுவையான வரலாறு உள்ளது. 1000 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த கோபன்ஹெகன் நகரம், 15ம் நூற்றாண்டு முதல் டென்மார்க் நாட்டின் தலைநகரமாக திகழ்கிறது. பல ஆண்டுகளாக மக்கள் வாழ்வதற்க்கேற்ற நகரங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு  <a href="http://www.monocle.com/" target="_blank">Monacle</a> என்ற சர்வதேச மக்கள் வாழ்க்கைமுறை இதழ், சிறந்த 25 வாழ்வதேற்க்கேற்ற நகரங்களில் முதன்மையான நகரமாக கோபன்ஹெகன்னை அறிவித்துள்ளது. </p> <p>இதைவிட முக்கியமானது சுற்றுச்சூழலில் சிறந்த நகரமாக கோபன்ஹெகன் விளங்குகிறது. 36 சதவிகிதம் மக்கள் மிதிவண்டியையே பயன்படுத்துகின்றனர். ஐரோப்பாவிலேயே மிகவும்  சுத்தமான நகரமாக சுற்றுலாப் பயணிகள் வாக்களித்துள்ளனர். </p> <blockquote> <p align="center"> கோபன்ஹெகன் மாநாட்டின் முதல்நாள் ஒளிப்பரப்பப் பட்ட  "தயவு செய்து உதவுங்கள் உலகுக்கு" (<strong><a href="http://www.youtube.com/watch?v=NVGGgncVq-4" target="_blank">Please help the world</a></strong>) என்ற காணொளியை கீழே இணைத்துள்ளென். </p> </blockquote> <div style="padding-bottom: 0px; margin: 0px auto; padding-left: 0px; width: 425px; padding-right: 0px; display: block; float: none; padding-top: 0px" id="scid:5737277B-5D6D-4f48-ABFC-DD9C333F4C5D:ee2ce200-3bf1-4848-9372-98ee8eeb816b" class="wlWriterEditableSmartContent"><div id="1065dfa6-5798-40c7-befa-a0dc34998471" style="margin: 0px; padding: 0px; display: inline;"><div><a href="http://www.youtube.com/watch?v=NVGGgncVq-4" target="_new"><img src="http://lh5.ggpht.com/_zOOY9Z7VJxA/Sx6y3Ls6KQI/AAAAAAAADZA/xQZhdURuBwM/video955f383bdf28%5B2%5D.jpg?imgmax=800" style="border-style: none" galleryimg="no" onload="var downlevelDiv = document.getElementById('1065dfa6-5798-40c7-befa-a0dc34998471'); downlevelDiv.innerHTML = "<div><object width=\"425\" height=\"355\"><param name=\"movie\" value=\"http://www.youtube.com/v/NVGGgncVq-4&hl=en\"><\/param><embed src=\"http://www.youtube.com/v/NVGGgncVq-4&hl=en\" type=\"application/x-shockwave-flash\" width=\"425\" height=\"355\"><\/embed><\/object><\/div>";" alt=""></a></div></div></div> <p> </p> <p>எரிபொருளில் இருந்து வெளியேறும் நச்சுக்காற்றின் ( கிரீன் எமிசன்) அளவை குறைப்பது, புவி வெப்பமடைதல் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்ப்படுத்துவது, பருவ நிலை மாற்றங்களால் ஏற்படப் போகும் விளைவுகள் போன்ற முக்கியப் பிரச்சனைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப் படுகின்றன. இதற்குப் போய் இடது சாரிக் கட்சிகள் ஏன் "அணு ஆயுத உடன்படிக்கை" போல சண்டை போடுகிறார்கள்? இதனால் இந்தியாவுக்கு என்னப் பிரச்சனை என்கிறீர்களா? </p> <p>உலக நாடுகள் கார்பன் வெளியேற்றத்தை குறைக்க முன் வரவேண்டும் என்ற சட்டதிட்டம்தான். இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, பிரெசில் போன்ற நாடுகள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. இவர்களால் தான் புவி வெப்பமடைகிறது என்பது அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் குற்றச்சாட்டு. 200 ஆண்டுகளாக பணக்கார நாடுகள் எல்லாவற்றையும் அனுபவித்து, நச்சுக்காற்றை பரப்பிவிட்டார்கள். இப்போது அவர்களுக்கும் எங்களுக்கும் ஒரே சட்டமா? என்பது இந்தியாவின் குற்றச் சாட்டு. </p> <p>இது பற்றிப் பேசிய மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், "இந்தியா ஏற்கனவே கடந்த 1990-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை 17 சதவீத புகை மாசைக் குறைத்துள்ளது. 2005-ம் ஆண்டு அளவிலிருந்து, அடுத்த 11 ஆண்டுகளுக்குள் (2020க்குள்) 20 முதல் 25 சதவீத அளவுக்கு புகை மாசு குறைக்கப்படும். அதேசமயத்தில், இதை சர்வதேச சட்டங்களின் மூலமாக இந்தியாவின் மீது திணிக்க முடியாது. இந்தியாவே விரும்பி இதை செய்கிறது. இதில் இந்தியாவின் மீது நிர்ப்பந்தங்களை ஏற்க முடியாது." என்கிறார். </p> <p>பருவ நிலை மாற்றத்தால் இந்தியா கடுமையாக பாதிக்கப்படக் கூடிய நாடுகளில் ஒன்று. காரணம், பெரும்பாலான மாநிலங்கள் பருவ மழைகளை நம்பி உள்ளது. இமயமலைப் பனிச் சிகரங்கள் உருகத் தொடங்கியுள்ளன, ஜார்க்கண்ட், ஒரிசா, சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் காடுகள் முழுமையாக அழியும் அபாயம் உள்ளது. உண்மையில், இந்தியாவுக்கு இதனால் என்ன பாதிப்பு என்பது குறித்து தகவலே இல்லை. இது மிகவும் வேதனையான விஷயம். மேற்கத்திய நாடுகளிடமிருந்து புவிவெப்ப மாற்றம் குறித்து நமக்கு கிடைக்கும் தகவல்களில் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்ற தகவல் இடம் பெறுவதில்லை. எனவே நமது விஞ்ஞானிகள் மூலம் விரிவான அறிவியல் ஆய்வை மேற்கொண்டு நமது பாதிப்பு என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம் என்று கூறுகிறார் அமைச்சர்.</p> <p>இந்த மாநாட்டில் நிறைவேற்றப்படும் உடன்படிக்கைகளின் படி அனைத்து நாடுகளும் மாசுக் கட்டுப்பாட்டு நடவடக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வன வளங்களை மேம்படுத்த வேண்டும். </p> <p>அரசுகள் செய்வது இருக்கட்டும். பொதுமக்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன </p> <p>1. மின்சாரத்தை சேமிக்க வேண்டும். இதனால் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பதை கட்டுப் படுத்த முடியும். <br />2. நெகிழ்வு பைகள் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும் அல்லது நிறுத்த வேண்டும். <br />3. நமது வாகனங்களில் மூலம் புகை மாசு ஏற்படுத்துவதை நிறுத்தவேண்டும். <br />4. குடி நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். <br />5. மரம் வளர்த்தலில் ஈடுபட வேண்டும்.</p> <p>2012, Day After Tomorrow போன்ற ஆங்கிலத் திரைப்படங்கள் பார்த்தவர்களுக்கு இம்மாதிரியான மாநாடு எவ்வளவு அவசியம் என்பது புரியும். மிகப் பெரிய ஆபத்தை எதிர் நோக்கியுள்ளோம். பருவ நிலை மாற்றத்தைத் தடுக்கும் முயற்சிகளில் நாமும் ஈடுபட வேண்டியுள்ளது அவசியம். </p> <p><font color="#1f497d"><strong>பி.கு: பிடிச்சிருந்தா ஓட்டு போட்டுட்டு போங்க! பிடிக்கலைனாலும்  ஓட்டு போட்டுட்டு போங்க! தமிழ் மணத்திலும், Tamilish-லும்</strong></font></p> Santhappanசாந்தப்பன்http://www.blogger.com/profile/07148021073755708494noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-987851344844901124.post-23500539776736940022009-12-06T22:03:00.003+03:002009-12-08T23:12:35.561+03:00ஆரவாரமில்லாமல், அழகான வெற்றி<p></p> <p>Celebrations were restrained - "subdued" - 1952-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் முதல் வெற்றி குறித்து, கிரிக்கெட்டின் பைபிளான "விஸ்டன்" இதழ் இப்படித்தான் வர்ணித்தது. அதே வர்ணனையைத்தான் சென்ற வாரம் 100வது வெற்றியின் போதும் கூறியிருக்கிறது. </p> <p><a href="http://lh6.ggpht.com/_zOOY9Z7VJxA/Sxv_-3PzxTI/AAAAAAAADVg/krBRFDaKBOc/s1600-h/IndianTeam%5B3%5D.jpg"><img style="border-right-width: 0px; display: inline; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: 0px; border-left-width: 0px; margin-right: 0px" title="IndianTeam" border="0" alt="IndianTeam" align="left" src="http://lh5.ggpht.com/_zOOY9Z7VJxA/SxwAAyExvvI/AAAAAAAADVk/4QxKegqNRNg/IndianTeam_thumb%5B1%5D.jpg?imgmax=800" width="244" height="184" /></a>57 ஆண்டுகள், 432 டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு நூறாவது வெற்றி பெறும் ஆறாவது அணி. ஆஸ்திரேலியா (199 போட்டிகளில்), இங்கிலாந்து (241), மேற்க்கிந்தியத் தீவுகள் (266), தென்னாப்பிரிக்கா (310), பாகிஸ்தான் (320) ஆகிய அணிகள் முன்பே பட்டியலில் நூறு வெற்றிகளை ருசித்து விட்டன.</p> <p>மிக மெதுவாகத் தான் 100-வது வெற்றியை பெற்று இருந்தாலும், கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் வெற்றி விகிதம் அதிகம். பங்கேற்ற 102 போட்டிகளில், 39-ல் வெற்றி பெற்று, 36 சதவிகித வெற்றி விகிதத்தை கண்டுள்ளது. முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் இது இரண்டு மடங்கு அதிகமாகும். 2000-ஆம் ஆண்டுக்கு முன் பங்கேற்ற 330 போட்டிகளில் 61ல் மட்டுமே (வெற்றி விகிதம் 18.48%) வெற்றி பெற்றுள்ளது. இந்த நூற்றாண்டில் முதல் முறையாக தோல்வி விகிதத்தை (1.44%) காட்டிலும் வெற்றி விகிதம் அதிகரித்துள்ளது. </p> <p>ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் விஜய் காசேரே தலைமையிலான இந்திய அணி, டொனால்டு கார் தலைமையிலான இங்கிலாந்து அணியை வென்று முதல் முறையாக தொடரை சமன் செய்தது. அதற்குப் பிறகு முதல் முறையாக தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. </p> <p>இந்தியா போன்ற ஒரு நாட்டில், ஒருங்கிணைந்த அணியை உருவாக்குவது என்பது எளிதல்ல என்பது அனைவரும் அறிந்ததே! பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட வீரர்கள் இணைந்து விளையாடி வெற்றி பெற்றிருக்கிறார்கள். இனமான உணர்வு கொண்டு பிரித்தாட வேண்டும் என்று நான் குறிப்பிட வில்லை. "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற நமது தத்துவம் மீண்டும் ஒரு முறை வெற்றி பெற்றிருக்கிறது. </p> <p>முதல் இடத்தைப் பிடிக்க, கடந்த பத்தாண்டுகளில் அணியை திறம்பட நிர்வகித்த கேப்டன்களை பாராட்டியே ஆக வேண்டும். நீண்ட இடைவேளைக்குப் பின்னர், செளரவ் கங்குலி தலைமையில் தான், அணி ஒருங்கிணைந்து செயல்பட்டு பல வெற்றிகளை குவித்தது. அவரது வழியில், ராகுல் திராவிட்டும், கும்ளேவும் சிறப்பாக வழி நடத்தி அணியை பலப்படுத்தினார்கள். வந்தார் தோனி! என்ன மாயமோ தெரியவில்லை. இவர் தொட்டதெல்லாம் வெற்றியாகிறது. 20 ஓவர் உலகக் கோப்பை வெற்றிக்கு பின்னர், ஒரு நாள் போட்டிகளிலும் வெற்றியை குவித்தவர், இது வரை டெஸ்ட் போட்டிகளில் தோல்வியைக் கண்டதில்லை. இவரது தலைமையில் இந்திய அணி 10 போட்டிகளில் 7-ல் வெற்றி பெற்று சாதனைகளை படைத்து வருகிறது. </p> <p>1933-ல் முதல் முதலாக மும்பையில் உள்ள பான்பரா மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற இந்திய அணி, தந்து 101-வது போட்டியிலும் அதே மைதானத்தில் வெற்றி பெற்று, உலகின் முதன்மை அணியாக வாகை சூடியிருக்கிறது.</p> <p>ஒரு சிறந்த அணியில் விளையாடியிருப்பதாக சச்சின் பெருமிதமடைகிறார். "ஒரு கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது. அனைத்து வீரர்களும், இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடியிருக்கிறார்கள், பேட்டிங், பௌலிங், பீல்டிங் என எல்லா துறையிலும் சிறப்பாக விளையாடியிருக்கிறார்கள்." என்று புகழாரம் சூட்டுகிறார் கவாஸ்கர். </p> <p>அடுத்த ஆறு மாதங்களில், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்கவிருக்கும் இந்திய அணி முதல் இடத்தை தக்க வைப்பது கடினமே! இருப்பினும் பணபலத்தில் மட்டுமல்ல, விளையாட்டிலும் நாங்கள் முதன்மையானவர்கள் என்று நிருபித்திருக்கும் வீரர்களை வாழ்த்துவோம்! </p> <p><strong>பி.கு: பிடிச்சிருந்தா ஓட்டு போட்டுட்டு போங்க! பிடிக்கலைனாலும்  ஓட்டு போட்டுட்டு போங்க! தமிழ் மணத்திலும், Tamilish-லும்</strong></p> Santhappanசாந்தப்பன்http://www.blogger.com/profile/07148021073755708494noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-987851344844901124.post-79924910474937623172009-11-30T13:46:00.003+03:002009-12-07T12:27:28.045+03:00ஆயுதப் போராட்டம் தேவையா?<p></p><p>என்னுடைய "பிரபாகரனும் பழசிராஜாவும்" என்ற பதிவை படித்துவிட்டு, நண்பர் பிரசன்னா அவர்கள் எனக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் ஒரு சில பகுதிகள் மட்டும் இங்கே! </p><p>"ராஜிவ் காந்தி, அமிர்தலிங்கம், ஸ்ரீசபாரத்னம், பத்மநாபா, பிரேமதாசா எல்லாரையும் தெரியுமாண்ணே?அவுனுகள விடுன்னே.அப்ப செத்த ஜனங்கள என்னண்ணே செய்ய சொல்ற? பொணத்து மேல ராஜாங்கம் பண்ண வேணாம்னே...அங்க ஒரு காலோ கையோ போயி அழுவுற குழந்தைகிட்ட அவுங்க அம்மா "இது ஈழ போராட்டம்,பொறுத்துக்க"ன்னு சொல்ல முடியுமா? இல்ல பசிக்குதுன்னு அழுவுற குழந்தைகிட்ட அப்டி சொல்ல முடியுமா? யாருக்குமே அடிச்சா வலிக்கதானே செய்யும்.அது பிரபாகரனோ ராஜபக்க்ஷேவோ... முப்பது வருசமா ஒன்னும் பாக்காத சனம். இனிமேவாவுது எதாவுது நடக்குமான்னு பாக்குது...முடிஞ்சா நம்ம சிநேகித புள்ளைங்கள கூட்டிகிட்டு Beach Resort க்கு போகாம ராமேஸ்வரம் மண்டபம் முகாமுக்கு ஒரு தடவை போயிட்டு வாங்க..." </p><p>என்று குறிப்பிட்டு எழுத்தாளர் சாருநிவேதிதா அவர்களின் "<a href="http://www.charuonline.com/May2009/Vanmurai.html" target="_blank">வன்முறையின் தோல்வி</a>" என்ற பதிவையும் படிக்க சொல்லியிருந்தார். </p><p>அவருக்கு மட்டுமல்ல, ஆயுதப் போராட்டம் பற்றி விமர்சனம் செய்பவர்களுக்கு என்னுடைய பதில் இதோ,</p><p>இந்திய அரசு சமாதான பேச்சில் ஈடுபட்ட 1986-ம் வருடம், சென்னையில் பிரபாகரன் தமிழக காவல்துறையால் சிறைபிடிக்கப் பட்டதும், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். பின்னர், அவர் விடுதலை செய்யப்பட்ட நேரத்தில் பத்திரிக்கையாளர்கள் அவரிடம், "இந்தியாவில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றியும் கண்டிருக்கும் நீங்கள், இலங்கையில் மட்டும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுகிறீகளே, ஏன்?" என்று கேட்டார்கள். </p><p>அறப்போராட்டத்தால் சுதந்திரம் அடைந்த இந்தியாவுக்குத்தான் அந்தத் போராட்டத்தின் மதிப்புத் தெரியும் நாங்கள் எந்த வகையான ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை எங்கள் எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள். அதனால்தான், "செய்து முடி; அல்லது செத்து மடி!" என்ற கொள்கையுடன் ஈழத்தில் உயிர்ப் போராட்டம் நடத்துகிறோம்" என்றார் பிரபாகரன். </p><p>கோயில் பூசாரிகளாக இருந்த தமிழரை உயிருடன் தீ வைத்து சிங்களர்கள் கொளுத்திப் போட்டதையும், தமிழ்க் குழந்தைகளைக் கொதிக்கும் தார் டின்களில் உயிருடன் போட்டக் கொடுரங்களையும் கேட்ட பிரபாகரன் இரத்தம் கொதித்துப் போய், பத்தாம் வகுப்புடன் தனது படிப்பை நிறுத்தி விட்டு, டி.என்.டி எனப்ப்டும் "தமிழ் புதிய புலிகள்" எனும் அமைப்பைத் தொடங்கினார். </p><p>1983-ம் வருடம் ராணுவம் தாக்குதலைத் தொடங்கி பல்லாயிரக் கணக்கான தமிழ்ப் பெண்களை சூரையாடியதைத் தொடர்ந்து, புலிகள் இயக்கம் போரை தொடங்கியது. </p><p>ஒரு இயக்கம் ஆயுதப் போராட்டத்திற்க்கு தள்ளப் பட்ட வரலாறு இது. </p><p>மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் யாவும், நான் புத்தகங்கள் படித்து தெரிந்துக் கொண்டவை.</p><p>சில ஆண்டுகளுக்கு முன், மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் நிர்வாணப் போரட்டம் நடத்தினார்கள். அது வரையிலும், "இந்திய இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் அம்மாநில பெண்களை கற்பழித்து கொன்று குவிக்கிறார்கள்" என்ற குற்றச்சாட்டை ஆளும் அரசியல்வாதிகள் கேட்க வில்லை. தகவல் தொடர்பு சாதனங்களும் அதை கண்டுகொள்ளவில்லை. ஆனால், இந்த போராட்ட செய்தியை போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்பி ஒய்ந்தன். இன்று வரையிலும், இந்த குற்றச்சாட்டு வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. </p><p>ஒரிசா, மேற்கு வங்கம், உத்தராஜ்சல் போன்ற மாநிலங்களில் நிலவும் குடி தண்ணீர், சாலை வசதி போன்ற உள்கட்டமைப்பு பிரச்சனைகள் குறித்து பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த பலனும் இன்றி, மக்கள் நக்ஸல் இயத்தத்தினரை ஆதரிக்கத் துவங்கி இருக்கிறார்கள். ஊடகங்கள் மாறி மாறி ஒளிபரப்புகின்றன. இப்போது பிரதமர், உள் கட்டமைப்பை மேம்படுத்த சொல்லி குரல் கொடுக்கிறார். நக்ஸல் இயக்கங்கள் வெற்றி பெற்றதா இல்லையா என்பது கேள்வியில்லை. அவர்களின் ஆயுதப் போரட்டம் தான் இன்றைய இந்திய அரசை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. </p><p>இன்றைய உலகில், அறப் போராட்டங்கள் கண்டுக் கொள்ளப் படுவதில்லை. காந்தியின் நாட்டிலேயே இந்த நிலைமை..... </p><p>ஒருவேளை விடுதலைப் புலிகள் ஆயுதப் போரட்டத்தில் ஈடுபடாமல் இருந்திருந்தால், தமிழர்களின் இனப்படுகொலைகள், உலகின் கவனத்தை இந்த அளவுக்கு ஈர்த்திருக்குமா என்பது சந்தேகமே! </p><p>ஆயுதப் போராட்டம் வெற்றி பெற்றதா இல்லையா என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும்!</p>Santhappanசாந்தப்பன்http://www.blogger.com/profile/07148021073755708494noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-987851344844901124.post-31604565763430275042009-11-26T17:28:00.002+03:002009-12-06T22:09:27.560+03:00பிரபாகரனும் பழசிராஜாவும்தமிழினத்தின் விடுதலைக்காகவே தன் வாழ் நாள் முழுவதும் செலவிட்ட ஒரு ஒப்பற்ற தலைவனின் பிறந்த தினம் இன்று. அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சைகள் ஒரு புறம் இருக்க, ஒரு மாவீரனை, அவரது ஒப்பற்ற தியாக உணர்வை நினைவு கூற வேண்டும். <a href="http://lh4.ggpht.com/_zOOY9Z7VJxA/Sw6wyKz1ADI/AAAAAAAADOM/f8bscTlT7JU/s1600-h/Prabhagood%5B3%5D.jpg"><img style="BORDER-BOTTOM: 0px; BORDER-LEFT: 0px; DISPLAY: inline; MARGIN-LEFT: 0px; BORDER-TOP: 0px; MARGIN-RIGHT: 0px; BORDER-RIGHT: 0px" title="Prabhagood" border="0" alt="Prabhagood" align="left" src="http://lh6.ggpht.com/_zOOY9Z7VJxA/Sw6w1GmTonI/AAAAAAAADOQ/q4e5fa28uq0/Prabhagood_thumb%5B1%5D.jpg?imgmax=800" width="244" height="192" /></a><br /><br /><br />சமீபத்தில், பழசி ராஜா என்ற திரைப்படத்தில், கேரளா நாட்டை சேர்ந்த மன்னரின் சுதந்திர போராட்ட வரலாற்றை காண நேர்ந்தது. <strong>அத்திரைப்படம்</strong> பார்க்கும் போது, எனக்கு நினைவுக்கு வந்தது இலங்கையின் யுத்த <strong>களம்</strong><strong>தான்</strong>.<br /><br /><br /><p>சிங்கள இராணுவம் பிரிட்டிஷ் இராணுவம் போன்று போர்க்கான எந்த விதமான விதிகளையும் பின்பற்றவில்லை என்றாலும், போராளிகளின் வாழ்க்கை இரு இடங்களிலும் ஒரே மாதிரிதான் உள்ளது. </p><p>மக்களை காப்பாற்ற வேண்டி, அமைதி ஒப்பந்தத்தில் பழசி ராஜாவாக வரும் மம்முட்டி கையொப்பமிடுகிறார். ஒப்பந்தத்தில் உள்ள எதையும் நிறைவேற்றாமல் இழுத்தடிப்பதாய் கூறி, நாட்டை விட்டு வெளியேறி போர்க் கோலம் பூணுகிறார். </p><p>2003ல் நடந்த டோக்கியோ பேச்சு வார்த்தைகளின் போது விடுதலைப் புலிகள் வெளியேறியதற்க்கும் பல காரணங்கள் இருந்தன என்பது உலகமே அறியும். </p><p>ஒவ்வொரு முறை, பழசி ராஜாவைக் காக்க ஒவ்வொரு தளபதியும் எவ்வளவு முயற்சி செய்கிறார்கள் என்று பார்க்கும் போது, ஈழத்தில் பிரபாகரனை பாதுகாக்க இப்படித்தானே போராடியிருப்பார்கள் என்று பதைபதைக்கிறது நெஞ்சம்! ஒவ்வொரு தளபதியும் கொல்லப்பட்டார் என்று, நாள் தோறும் செய்திகள் வந்தபோது எப்படி ஏமாந்து போயிருப்பார்கள் எம் சகோதர மக்கள். </p><p>இறுதிக் காட்சியிலே, தானே போருக்கு சென்று, அத்தனை வீரர்களையும் வீழ்த்தி துப்பாக்கியால் மாண்டு போகிறார் பழசி ராஜா. இதே போலத் தான் பிரபாகரனும் போரிட்டிருப்பார். தப்பித்து செல்லும் போது சுட்டுக் கொன்றோம் என்று சிங்கள இராணுவம் கூறும் கட்டுக் கதைகளை யாரும் நம்பத் தயாரில்லை. </p><p>பழசிராஜா மாண்டதற்க்குப் பின், பிரிட்டிஷ் கலெக்டர் சகல இராணுவ மரியாதைகளொடு அவருக்கு வீர வணக்கம் செலுத்துகிறார். இதையெல்லாம் வெறி பிடித்த சிங்கள இராணுவத்திடம் எதிர்பார்க்க இயலாது. </p><p><strong>பழயம்வீடன் </strong>சந்துவாக வரும் நடிகர் சுமன் இல்லாமல் அவர்களால் ராஜாவை நெருங்கிருக்க முடியாது. கருங்காலி கருணாவின் இல்லாமல் அவர்களால் ஈழத்தை வீழ்த்தி இருக்க முடியாது. </p><p>நடிகர் திலகம் சிவாஜி நடித்த கர்ணன் திரைப்படத்தின் இறுதிக் காட்சியில், கிருஷ்ணனாக் வந்த என்.டி.ர், அர்ஜீனனிடம், "உனக்கு முன்பே 10 பேர் கர்ணனை கொன்று விட்டோம். செத்த பாம்பை அடித்து விட்டு, நான் கொன்றேன் நான் கொன்றேன் என்று சொல்லுகிறாய். " என்று கூறி பத்து காரணங்களையும் பட்டியிலுடுவார். </p><p>அதே வரிகளைத் தான், சிங்கள இராணுவ தளபதி சரத் பொன்சகோவிற்க்கும், இராஜபக்சேவிற்க்கும் சொல்ல விரும்புகிறோம். </p><p>1. கருங்காலி கருணா<br />2. காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா <br />3. பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்<br />4. இந்திய இராணுவம்<br />5. தமிழக முதல்வர் கருணாநிதி<br />6. முதுகெலும்பில்லாத தமிழக தலைவர்கள்<br />7. சீன இராடர்கள்<br />8. மலேசிய அரசு<br />9. இன்டர்போல்<br />10. முதுகெலும்பில்லாத தமிழக மக்கள் (என்னையும் சேர்த்து தான்)</p>Santhappanசாந்தப்பன்http://www.blogger.com/profile/07148021073755708494noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-987851344844901124.post-73275636730967257812009-11-12T23:43:00.001+03:002009-12-01T23:22:18.925+03:00வணக்கம்!தமிழுக்கு முதல் வணக்கம்!<br />என் தலைவன் பாரதிக்கு வணக்கம்!<br /><br />தமிழ் பேசும் எம்மக்களுக்கு வணக்கம்!<br />யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்<br />இனிதாவது எங்கும் காணோம்! - என்றான் பாரதி<br /><br />எனக்கு பாரதி போல் பல மொழிகள் தெரியாவிட்டாலும், என் தாய் மொழியாம் தமிழில் முதல் பகுப்பு தொடங்குவதே உசிதம் என்று நினைத்து இணைகிறேன்.<br /><br />நான், நேற்றைய நினைவுகளிலும் நாளைய கற்பனைகளிலும் மிதந்து கொண்டு இருக்கும் இன்றைய இளைய சமுதாயத்தின் அங்கம்.<br /><br /><br />உலகின் ஏதாவது ஒரு மூலையில் பெரிய அசம்பாவிதம் நடந்தால் கூட, அந்த செய்தியை பத்து பேருக்கு அனுப்பி விட்டு அடுத்த வேலையை கவனிக்க செல்லும் மனிதாபிமானி!.<br /><br />அரசு பள்ளியில் கணினி படித்துவிட்டு, அமெரிக்க கனவில் வாழ்ந்து கொண்டு இருக்கும் இன்றைய இளைஞன்.<br /><br />நாற்பது ரூபாய் கொடுத்து, முன்பதிவு இல்லாத ரயிலில் சென்னையிலிருந்து என் சொந்த ஊருக்கு சென்று கொண்டு இருந்த நான், நானூறு ரூபாய் கொடுத்து சொகுசு பேருந்தில் முன் பதிவு செய்யும் இன்றைய இளைஞன்.<br /><span style="font-size:0;"></span><br />இனி என்னுடைய கருத்துக்களை, எனக்கு தெரிந்தவைகளை, எனக்கு பிடித்தவைகளை இங்கு பகிர்த்து கொள்ள இருக்கிறேன்.<br /><br />நாள் தோறும் வளரும். மெல்லத் தமிழ் இனி வளரும்.Santhappanசாந்தப்பன்http://www.blogger.com/profile/07148021073755708494noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-987851344844901124.post-61275749330656054692009-11-12T23:06:00.002+03:002009-12-08T20:57:55.246+03:00படித்ததில் பிடித்தது - வாழ்க்கை!<a href="http://2.bp.blogspot.com/_zOOY9Z7VJxA/SwHMZfElGDI/AAAAAAAADIA/cTYtPliJ4AY/s1600/Life.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; FLOAT: left; HEIGHT: 168px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5404825766030809138" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_zOOY9Z7VJxA/SwHMZfElGDI/AAAAAAAADIA/cTYtPliJ4AY/s320/Life.jpg" /></a><br />
சில தினங்களுக்கு முன் தொடர் மின்னஞ்சல் மூலம் இந்த சிறிய கதை எனக்கு வந்தது. இதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்<br />
<br />
நான் சிறிய பெண்ணாக இருந்தபோது, என் அம்மா இரவு உணவு தயாரித்து தருவார்கள். ஒரு நாள் அம்மா தன்னுடைய அலுவலக வேலைகளை முடித்துவிட்டு மிகவும் சோர்வாக, இரவு உணவு தயாரித்து கொண்டிருந்தார்கள். நீண்ட நேரத்திற்குப் பின், தட்டில் முட்டை மற்றும் தீய்ந்த போன பிரட் கொண்டு வந்து, என் அப்பாவின் முன் வைத்தார்கள். நான் திகைத்து போய் அப்பாவை நோக்கினேன். அப்பாவோ, அம்மாவை பார்த்து புன்னகைத்து விட்டு, என்னிடம் என் படிப்பு பற்றி விசாரித்தார். நான் என்ன பதில் சொன்னேன் என்று எனக்கு சரியாக நினைவு இல்லை. எனக்கோ அந்த தீய்ந்து போன பிரட்டை எப்படி அப்பா சாப்பிடுகிறார் என்று பார்த்து கொண்டிருந்தேன்.<br />
<br />
சிறிது நேரம் கழித்து அம்மா, அப்பாவிடம் மன்னிப்பு கேட்டு கொண்டிருந்தார். அதற்க்கு அப்பா, "கண்ணே, எனக்கு தீய்ந்து போன பிரட் ரொம்ப பிடிக்கும்" என்றார்.<br />
<br />
அன்றைய பின்னிரவில், நான் அப்பாவிற்கு குட் நைட் சொல்லி விட்டு, கேட்டேன்., "உங்களுக்கு உண்மையாகவே தீய்ந்து போன பிரட் பிடிக்குமா என்று".<br />
என்னை தூக்கி மடியில் வைத்துக் கொண்டு அப்பா சொன்னார். "செல்லம், உன் அம்மா இன்று நிறைய அலுவலக வேலை செய்து விட்டு சோர்வாக உள்ளார். ஒரு நாள் தீய்ந்து போன ரொட்டி சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது.<br />
<br />
ஒன்று தெரிந்து கொள், "வாழ்க்கையில் அனேக விஷயங்கள் சரியாக அமையாது, நான் கூட சரியாக சமைக்க மாட்டேன்! வீட்டை சுத்தமாக வைத்திருக்க மாட்டேன்.<br />
<br />
அடுத்தவரின் தவறுகளை சகிக்க கற்றுக் கள்ள வேண்டும். மற்றவரின் உணர்வுகளை மதிக்க வேண்டும். சகிப்புத்தன்மை என்பது ஆரோக்கியமான நீண்ட உறவை கொடுக்கும். " என்றார்.<br />
<br />
நமது தேச தந்தை காந்தி சொன்னதும் இது தான். நமது வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் வெவ்வேறு வகையான மனிதர்களை சந்திக்கிறோம். அவர்கள் செய்யும் சில விஷயங்கள் நமக்கு பிடிக்காமல் இருக்கலாம். அதற்காக அவர்கள் மேல் கோபப்படுவது சரியாக இருக்காது.Santhappanசாந்தப்பன்http://www.blogger.com/profile/07148021073755708494noreply@blogger.com3